SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும் புத்தகம்


உலக பிரச்சினை, உங்கள் பிரச்சினைக்கு தேர்வு சொல்லும் புத்தகம் - முற்றிலும் இலவசமாக

மனித முன்னேற்றத்திருக்கு , பலர் பல புத்தகங்களை சிபாரிசு செய்வதுண்டு.... ஜே கிருஷ்ணமுர்த்தி ஒரு புத்தகத்தை சிபாரிசு செய்கிறர்... இந்த புத்தகத்தை படித்தால் போதும் என்கிறார்..

இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல,,இலவசம் ... அந்த புத்தகம் என்ன ? 

ஜே கிருஷ்ணா மூர்த்தியின் சொற்பொழிவை கொஞ்சம் கேளுங்கள்.. இதை அவளவாக படித்து இருக்க மாட்டீர்கள்... எனவே தான், இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் ...கவனமாக படிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் 
( அடைப்பு குறிக்குள் இருப்பது, நம்ம சொந்த சரக்கு..)


*******************************************


மனித இனத்தின் ஒட்டு மொத்த சோகங்கள், பிரச்சினைகள், நம்பிக்கைகள், மகிழ்ச்சி, அனுபவங்கள் , ஆண்டாண்டு காலமாக மனித இனத்தின் வாழ்கை அனித்தும் ஒரே ஒரு புத்தகத்தில் அடங்கி இருக்கிறது.... ( இதை படித்தால், அணைத்து தொல்லைகளையும் புரிந்து கொண்டு அதற்கு தீர்வு கண்டு விடலாம் ..இல்லையா ! ? ) இந்த புத்தகம் விற்பனைக்கு அல்ல... யாரும் அச்சிடவும் இல்லை,,, 

"நீங்கள்" தான் நான் குறிப்பிடும் அந்த புத்தகம்...you are that book...

இந்த புத்தகத்தை புரிந்து கொள்ள வேறு நிபுணர் யாரிடமும் செல்லாதீர்கள்... ஏனென்றால், அவர் புத்தகமும் , உங்கள் புத்தகமும் ஒன்றுதான்... ( அவர் அவர் புத்தகத்தை படிக்கட்டும்..நீங்கள் உங்கள் புத்தகத்தை படியுங்கள்) 

இந்த புத்தகத்தை நன்கு , பொறுமையாக படித்து புரிந்து கொண்டால் தான், குற்றங்கள், ஏற்ற தாழ்வுகள், யுத்தங்கள் நிறைந்த இந்த உலகை மாற்றி அமைக்க முடியும்..நாம் எல்லோரும் சேர்ந்துதான் இந்த உலகை உருவாக்கி இருக்கிறோம்... 
நம்மை புரிந்து கொண்டால்தான், உண்மையான மாற்றம் நிகழும் ( சும்மா மற்றவர்களுக்கு அறிவுரை கொடுப்பதால், எதுவும் மாறாது ) 
எனவே இந்த "புத்தகத்தை" நன்றாக கவனியுங்கள் ... ஓடும் மேகத்தை, சூரிய உதயத்தை எப்படி கவனிக்கிறோமோ அப்படி கவனியுங்கள்... மேகத்தை உங்களால் எதுவும் செய்ய முடியாது....சும்மா கவனிப்பீர்கள்... அதே போல், சும்மா கவனியுங்கள்..எதையும் மாற்றவோ, அர்த்தம் கண்டு பிடிக்கவோ முயல வேண்டாம்... இந்த புத்தகம் எல்லாவற்றையும் வெளி படுத்தும்... புத்தகம் என்ன சொல்கிறது என்பதை , உங்கள் மொழியில் மாற்றாமல், அப்படியே கேளுங்கள்... 

பார்ப்பது என்பது ஒரு கலை... இந்த புத்தகத்தை படிக்கும் போது, நான் படிக்கிறேன் என்ற உணர்வு வேண்டாம்... படிப்பவனும், படிக்கப்படும் புத்தகமும் ஒன்றே ..(சும்மா பாருங்கள்.... நான் பார்கிறேன் என்ற உணர்வு இல்லாமல்... பார்ப்பது மட்டும் இருக்கட்டும் )

சரி, உங்கள் சார்பாக நான் இந்த புத்தகத்தை படிக்க போவதில்லை.. எப்படி படிப்பது என உங்களுக்கு தெரிந்தவுடன், எல்லாம் தெளிவடைந்து விடும் ....

புத்தகத்தின் முதல் அத்தியாயம் என்ன சொல்கிறது ?

உங்களை நீங்களே கவைக்கும்போது, நீங்கள் வேறு யாருடைய வாழ்வையோ வாழ்வதை கவைப்பீர்கள் ... ம்ற்றவருடைய போதனைகலைதான் , உங்கள் அறிவு என நினைத்து கொள்கிறீர்கள் .. புத்தர் சொன்னது, இயேசு சொன்னது, (பெரியார் சொன்னது, கீதை சொன்னது, அரசியல் தலைவர்கள் ஆன்மீக தலைவர்கள் சொன்னது) போன்றவை 
.. நம்மிடம் ஒரு ஒழுங்கு இல்லை.... சொல்வது ஒன்று , செய்வது ஒன்று ( அன்பே ஆண்டவன் என்க்றோம்.... அனால் கொலை செய்கிறோம்.... )

இப்படி பிளவு பட்டு நாம் வாழ்வதை உணரும் போது, ஒழுங்கு என்பது இயல்பாக மலரும்... 

அடுத்த அத்தியாயம் என்ன சொல்கிறது..

நான் என்ற உணர்வுடன் செயல்படுவதுதான் சிக்கல்களுக்கு காரணம் ... ( நான் என்ற உணரவே போலியானது... பெற்றோர்கள் சொல்வது, சமுகம் சொல்வது , படிப்பது எல்லாம் சேர்ந்ததுதான், நான் என்ற உணர்வாக மாறுகிறது.... அதாவது, சிந்தனைதான் நான் என்ற உணர்வு... சிந்தனை என்பது ஒரூ போதும் சுயமானதாக இருக்க முடியாது ) 

உடனடியாக நான் என்ற உணரவை அழிக்க, எதாவது வழி இருக்கிறதா என கேட்பது அபத்தம்... என் என்றால், அதவும் கூட நான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் ( நான் ஒரு தியானம் செஞ்சேன் பாரு..அப்படியே பறந்தது போல இருந்துச்சு என் சொல்வதும் போலி தனம்தான் ) 

நான் ஞான நிலை அடைந்தவன்.... உனக்கு போதிக்கிறேன் என யாரவது வந்தால், அதை ஏற்க வேண்டாம் என புத்தகம் சொல்கிறது.... புத்தகத்தை நீங்களே படியுங்கள்..(உங்கள் புத்தகம் உங்களை தவிர வேறு யாருக்கு புரிய போகிறது? அந்த புத்தகமே நீங்கள்தானே )

( தொடரும் ) 

No comments:

Post a Comment