SHIRDI LIVE DARSHAN

Monday 30 January 2012

திருவாசகம்(சிவபுராணம்) பாடல்கள்


திருவாசகம்(சிவபுராணம்) பாடல்கள்
    திருவாசகம்(சிவபுராணம்) பாடல்கள்

    01. மனக்கவலை நீங்கி  ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா நிலை அடையவும் ஓத வேண்டிய பதிகம்
    பாடியவர்: மாணிக்கவாசகர்       தலம்: திருப்பெந்துறை
    நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
    கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
    ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
    வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
    கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
    ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
    தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
    நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
    சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
    சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்
    கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்
    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே
    ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
    போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
    புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
    மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
    நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
    ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
    நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
    அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
    காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
    தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
    அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
    சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.
                      திருச்சிற்றம்பலம்
    02. ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம்
    ராகம்: மோகனம்       பாடியவர்: மாணிக்கவாசகர்
    திருவாசகம் திருச்சாழல்   தலம்: தில்லை சிதம்பரம்
    பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
    பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
    பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
    ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ.
    என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
    துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
    மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
    தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ.
    கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
    தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
    தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
    காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ.
    அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
    வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
    நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
    சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ.
    தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
    தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
    எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ.
    அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
    நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
    நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
    சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ.
    மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
    சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
    சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
    பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ.
    கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
     ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
    ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
    மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ.
    தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
    பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
    பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
    விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ.
    தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
    ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
    ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
    வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ.
    நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
    கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
    கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
    தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
    கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
    ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
    ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
    வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ.
    மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
    உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
    உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
    கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ.
    தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
    தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
    தான்புக்கு நட்டம்  பயின்றிலனேல், தரணிஎல்லாம்
    ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ.
    கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
    இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
    தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
    இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ.
    நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
    அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
    அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
    கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ.
    அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
    நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
    நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
    என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ.
    சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
    நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
    நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
    அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ.
    அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
    எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
    எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
    தம்பெருமை தான் அறியாத் தன்மையன்; காண்; சாழலோ.
    அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
    இருந்து, அவர்க்கு அருளும்  அது எனக்கு அறிய இயம்பேடீ!
    அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
    திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ.
                  திருச்சிற்றம்பலம்
    03. விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்
    பாடியவர்: மாணிக்கவாசகர்  தலம்: தில்லை
    வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
    உளைந்தனமுப்புரம் உந்தீ பற
    ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற
    ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
    ஓரம்பே முப்புரம் உந்தீ பற
    ஒன்றும் பெருமிகை றுந்தீ பற
    தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
    அச்சு முறிந்ததென்று உந்தீ பற
    அழிந்தன முப்புரம் உந்தீ பற
    உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
    எய்ய வல்லானுக்கே உந்தீ பற
    இளமுலை பங்கன் என்றுந்தீ பற
    சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
    ஓடியவா பாடி உந்தீ பற
    உருத்திர நாதனுக் குந்தீ பற
    ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
    சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
    சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற
    புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
    மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
    வானவர் கோன் என்றே உந்தீ பற
    வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
    துஞ்சின வாபாடி உந்தீ பற
    தொடர்ந்த பிறப்பற உந்தீ பற
    ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
    கூட்டிய வாபாடி உந்தீ பற
    கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற
    உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
    கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
    கருக்கெட நாமெலாம் உந்தீ பற
    நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
    சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
    தொல்லை வினைகெட உந்தீ பற
    நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
    போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
    புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற
    சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
    வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
    மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற
    தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
    மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
    மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற
    பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
    கோலச் சடையற்கே உந்தீ பற
    குமரன் தன் தாதைக்கே உந்தீ பற
    நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
    ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
    உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
    தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
    ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
    இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற
    ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
    ஆகாசங் காவலென் றுந்தீ பெற
    அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற
                     திருச்சிற்றம்பலம்

    No comments:

    Post a Comment