SHIRDI LIVE DARSHAN

Showing posts with label அகத்தியர் ஜீவ நாடி. Show all posts
Showing posts with label அகத்தியர் ஜீவ நாடி. Show all posts

Friday, 17 July 2015

ஸ்ரீ அகத்தியர் துதி




                                                  ஸ்ரீ அகத்தியர் துதி

கற்றைவார் சடையான் பெற்ற கற்றைவார் சடையன் நீயே ...!
நற்றவச் சிவனார் பெற்ற நற்றவ முனிவன் நீயே ...!
பெற்றவன் தமிழைப் பெற்றான் பிள்ளைநீ தமிழ் வளர்த்தாய்
கொற்றவன் அவன் இமயம் குடமுனி பொதிகை வேந்தே ....!

வேந்தன்நீ என்பதால் என் வேதனை தவிர்க்க கேட்டேன்
மாந்தர்தம் துயர் துடைத்தல் மன்னநின் கடமை அன்றோ ...!
பூந்தமிழ் வளர்த்த செல்வ புலவர்நற் குல முதல்வ
சாந்தநற் குருவே நின்தாள் சரணென அடைந்தேன் காவாய் !

காவாயேல் என்னை ஈங்கு காத்திட எவருமில்லை
நாவாயும் புயலிற் சிக்கி தவித்தற்போல்  தவிக்கின்றேன் நான்
பேய்வாயினின்றும் மீட்ட பெருமானே - என்றும்
தாயாய் இருந்தே காப்பாய் ! தலைவைத்தேன் நினதுதாளே சரணம் !


ஓம் ஸ்ரீ அகஸ்த்தியாய நமோ நமஹ ..........!

Wednesday, 25 February 2015

அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு



அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு 
-----------------------------------------------


ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!


அன்பான அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்.அய்யா திரு.சண்முகம் அவுடையப்பா(அகஸ்தியர்வனம்,மலேசியா)அவர்களின் இல்லத்தில் தவகோலத்தில் அமர்ந்திருக்கும் மகரிஷி அகத்தியருக்கு நடைபெறும் பூஜை,அபிஷேகம்,ஹோமம் மற்றும் இனிமையான பஜனை பாடல்களை  சித்தர்களின் கருணையால் நமக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்..




நாள்: 15.01.2015
நேரம்:மலேசியா(7.00 pm )இந்தியா-(4.30pm)

மூன்று கட்டங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பபடும்.
(முதலில் ஹோமம்-சிறிதுஇடைவெளி-அபிஷேகம்-இடைவெளி-பின்பு பஜனை.)

குறிப்பு:அய்யாவின் இல்லதில்லும் வாழ்விலும் அகஸ்திய பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ,விரிவான தகவல்களுக்கு வலைமனையில் சென்று பார்க்கவும்.நன்றி.ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!(http://agathiyarvanam.blogspot.com/2013/09/miracles.html)
 ( ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பிய தகவல் இந்த பதிவு )


Here is the tentative schedule of broadcast of the Siddahr Pooja from Agathiyar Vanam, Malaysia.

SCHEDULE (all times are Malaysian Standard Times +8 hours ahead of Greenwich)


1 January 2015 Thursday Guru Naal @ 6.00 pm
4 January 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm
8 January 2015 Thursday Agathiyar Jayanthi & Guru Pooja @ 10.00 am
15 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 January 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
22 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
29 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 February 2015 Tuesday Pormani Pooja @ 7.00 pm
5 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 February 2015 Tuesday Maha Sivarathri @ 6.00 pm, 9.00pm, 12.00 midnight, 3.00 am, & 6.00 am
18 February 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
19 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
26 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 March 2015 Thursday Masi Magam Pornami @ 7.00 pm
12 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 March 2015 Friday Amavasai Pooja @ 7.00 pm
26 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
4 April 2015 Saturday Panguni Uthiram Pornami Pooja @ 6.00 pm
9 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
18 April 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
23 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 May 2015 Sunday Chitra Pornami Pooja @ 6.00 pm
7 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 May 2015 Sunday Amavasai Pooja @ 6.00 pm
21 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 June 2015 Tuesday Vaikasi Visagam Pornami Pooja @ 7.00 pm
4 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 June 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
18 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm

1 July 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
2 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
9 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
15 July 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
16 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
23 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
31 July 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

6 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
13 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 August 2015 Friday Adi Mavasai Pooja @ 7.00 pm
20 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 August 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

3 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 September 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
17 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 September 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm

1 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
8 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 October 2015 Monday Mahalaya Amavasai Pooja @ 7.00 pm
15 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
22 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 October 2015 Tuesday Pornami Pooja @ 7.00 pm
29 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 November 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
12 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 November 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
26 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 December 2015 Thursday Amavasai Pooja @ 7.00 pm
17 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 December 2015 Friday Pornami Pooja @ 6.00 pm
31 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm


 I shall try to stream live the puja conducted at Agathiyar Vanam every Thursdays, on Full Moon and New Moon days too. Please bookmark this page http://www.ustream.tv/channel/siddha-heartbeat and come check it out on these days. The puja usually starts at 7 pm Malaysian time, 8 hours east of Greenwich.

We shall be broadcasting in three portions, with a break in transmission in between each portion. We shall start with the Homam. There will be a break in transmission to give us time to clear up and prepare for the next stage, the Abhisegam. We shall take another break to clear up and prepare for the final stage, the Bhajans. So please stay with us. If it is necessary, please refresh the page after every break._shanAiya

பூசையின் பலன்

நிகண்டு நாடியில் இருந்து அகத்திய மா முனிவர் அருளிய ஆசி சுக்கமம் 
12.7.2010

உண்மையும் உத்தமமும் நிறைந்த பூசை
நிறைந்த இன்பம் தந்திடுமே மகத்துவப் பூசை
நிதானமானதொரு அற்புத பூசை
அறமுடனே அகிலம் காக்கும் பூசை 

அருளான மாந்தரோடு செய்வாய் நன்றாய்
நன்றன புண்ணியங்கள் காக்கும் பூசை
நற்கதியும் பலர் அடைய செய்யும் பூசை
எண்ணாத சக்தி எல்லாம் தந்திடும் பூசை 

எகாந்த நிலை அடைய வைக்கும் பூசை
வையகத்தின் மாந்தரின் அகத்தின் ஜோதி 

வலமாக்கும் முழுமதி பூசை அப்பா
ஐயத்தை நீக்கிடும் பூசைதானே 

ஆண்டவனை அடைய செய்யும் வழியும் இதுவே
வழி வகுக்கும் சேய்க்கும் மாந்தற்கும் தான்
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும்
அழியாத மார்கத்தில் இருந்த வண்ணம் 

அகிலத்தில் நிலை பெற்று வாழ் வழிக்கும் பூசை
பூசையால் புண்ணியங்கள் கிட்டும் பூசை
பூர்வமும் போக்கிடும் பூசை அப்பா
இசையுடனே குடும்பவளம் தந்திடும் பூசை
எவை எல்லாம் வேண்டினும் தந்திடும் பூசை
தந்திடுமே தர்மம் தவ சிந்தை
தரித்திரியம் போக்கும் பூசை யாகும்
அந்தமும் ஆதியும் இல்லா
அகிலமதில் உயர்வு தரும் பூசை அப்பா
அப்பனே ஆண்டவனே உருகும் பூசை
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூசை
ஒப்பில்லா மகத்துவம் கொண்ட பூசை
உயர்வோடு நீ எடுத்து செய்வாய் அப்பா
ஒப்பில்லா மாற்றங்கள் மகத்துவமும்
உயர் நிலை பூசையாலே இருக்குதப்பா



Wednesday, 1 May 2013

அகத்தியர் ( பொதிகை) மலைக்கு ஒரு பயணம்

குறுமுனிக்கு பூசை

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (எமஐஈஉ) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 பனிபடர்ந்த அகத்தியர் மலை

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.
அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 கயிற்றின் துணையுடன்

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

 

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். 
 






http://farm8.staticflickr.com/7215/7398003992_37369c6376_m.jpg



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9cTxSLIzrh7EPfWffuEwWuhrClncSXSwg4rMizoGxkH03Njt8udx9Lqb0GfbholR-_F0SrCTdOqLi5yWCFhzLwPaHSIeA_4hWWr8zKGodJUWO5t5kE5xS66TzjpMdtSZ994XByvST_mE/s270/Pothigai-Agathiyar-Perumaan_small.jpg












தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.


1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது.













ஓம் அகத்தீசாய நமஹ 

From : dinamani.com

Tuesday, 9 April 2013

ஸ்ரீ அகஸ்திய மகா யாகம் - அழைப்பிதழ்

வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி , நடைபெறவிருக்கும் அகஸ்திய மகா யாகம் பற்றிய அழைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியும் அருளும் பெற வேண்டுகிறேன்...!






Friday, 5 April 2013

அகத்தியர் சன்மார்க்க சங்கம் , அகத்தீசன் திருவிழா , அன்னதான பெருவிழா , சித்ரா பௌர்ணமி விழா ,அகத்தியர் ஓங்கார குடில் , துறையூர்

அகத்தியர் சன்மார்க்க சங்கம் , அகத்தீசன் திருவிழா , அன்னதான பெருவிழா , சித்ரா பௌர்ணமி விழா

அகத்தியர் ஓங்கார குடில் , துறையூர்





அனைவரும் கலந்து கொண்டு அகத்தியர் மகரிஷியின் ஆசி பெறுவோம்






ஓம் அகத்தீசாய நமஹ  ! 

 ஓம் அகத்தீசாய நமஹ !!

 ஓம் அகத்தீசாய நமஹ !!!



Monday, 4 March 2013

27-03-13 பங்குனி உத்திர விழா அழைப்பிதழ் அகத்தியர் ஓங்கார குடில் ( கோவில் ) துறையூர்-





27-03-13 புதன் கிழமை பங்குனி உத்திர விழா அழைப்பிதழ் அகத்தியர் ஓங்கார குடில் ( கோவில் ) துறையூர் - அனைவரும் வருக






















ஓம் அகத்தீசாய நமக 


Thursday, 21 February 2013

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - மாசி மகம் - பௌர்ணமி திருவிளக்கு பூஜை அழைப்பிதழ் துறையூர் , திருச்சி மாவட்டம்

ஸ்ரீ அகத்தியர்  சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் ( அகத்தியர்  கோவில் ) ,

துறையூர் , திருச்சி மாவட்டம்



மாசி மகம் - பௌர்ணமி திருவிளக்கு பூஜை அழைப்பிதழ் 




குடிலில் அகத்தியர் 












ஓம் அகத்தீசாய நமக