SHIRDI LIVE DARSHAN

Showing posts with label கோயில். Show all posts
Showing posts with label கோயில். Show all posts

Monday, 3 February 2014

நாமக்கல் அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா 09-02-14

அருள் மிகு நாமகிரி தாயார் குடமுழுக்கு விழா ( கும்பாபிசேகம் ) 09-2-14



அருள் மிகு நாமகிரி தாயாருக்கு  கும்பாபிசேகம்வரும் ஞாயிறு  09 -02-14 அன்று காலை 7.15 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் நடைபெற உள்ளது

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறேன் .

ரொம்பவும் சக்தி வாய்ந்த தெய்வம் இந்த தாயார் .

நாமக்கல் நரசிம்மர் , ஆஞ்சநேயர் , ரங்கநாதர்  விட இத் தாயரே விஷெசமானவர் .சக்தி வாய்ந்தவர்

கணித மேதை ராமானுஜத்துக்கு அருள் புரிந்தவர் ,  அவரின் கணிதத்திற்கு இத் தாயரே பதில் தருவதாக அவரே பல இடங்களில் கூறி இருக்கிறார்




இந்த கோவிலும் , இங்கு வழங்கும் தீர்த்தமும் மிக மிக சக்தி வாய்ந்தது, ( அனைத்து  தீமைகளையும் விரட்ட கூடியது ) என்று என் குரு நாதர் சாய் பாபா உபாசகர் சொல்லியிருக்கார்

( எனக்கு ஒரு அதிசயம் நிகழ்ந்தது இத் தாயாரால் ,என்னோட  IBPS BANK INTERVIEW க்கு  முதல் நாள் நாமகிரி தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க போனேன் , ரொம்பவும் உருக்கமா வேண்டிகிட்டேன் , அடுத்த நாள் INTERVIEW  க்கு போனேன்


நான்கு பேர் என்னை INTERVIEW செய்தார்கள் . அவர்களுள் மூன்றாவது நபர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே நாமகிரி தயாராய் பற்றி தான்

கணித மேதை ராமனுஜம் பற்றி கொஞ்சம் சொல்லிவிட்டு தாயாரை பற்றி

ரொம்ப நேரம் பேசிகிட்டு இருந்தார். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது , வந்து தாயாருக்கு நன்றி சொன்னேன் )

வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் கலந்து கொண்டு தாயாரின் பூரண அனுகிரகதை பெற்று கொள்ள வேண்டுகிறேன்





Tuesday, 28 May 2013

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்


குரு கிரக பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள  அழைப்பிதழ் - அனைவருக்கும்


அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி


மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள் 

மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சகம் , மகரம் , மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .

ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா

30-05-2013 முதல் 06-06-2013 வரை

 நடைபெறுகிறது

பங்கேற்க கட்டணம் 400/-

அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்


நேரில் பங்கு பெற முடியாத

தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .

DD எடுப்போர் உதவி ஆணையர் / செயல் அலுவலர் 

ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 


PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து

 திருக்கோவில் முகவரி 

 உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801

என்ற முகவரிக்கு அனுப்பவும்




------------------------------------------------------------------------------------------------------

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
                                                                      
                                                                    


மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள் 

மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சகம் , மகரம் , மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .

இப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு

லட்சார்ச்சனை

06-06-2013 ஒரு நாள் மட்டும் 
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் 
மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 
லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம் 

07-06-2013 முதல் 10-06-2013 வரை 
காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது .
கட்டணம் 500/-

லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   
 நிர்வாக அதிகாரி 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம்

Friday, 1 March 2013

இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

 இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan--- Part 2

1)   Shri Omkareshwar Jyotirlinga,Madhya Pradesh

ஸ்ரீ ஓம் காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் மத்திய பிரதேசம் 

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcR_82nzlEtQTXr0V0fe0OnqT25XGV_QeLqd-VjGPkzbxA-uexo0ww http://www.goheritageindiajourneys.com/blog/wp-content/uploads/2012/11/Sri-Vaidyanath-Jyotirlinga-in-Parali.jpg 

http://blessingsonthenet.com/img/uploads/tour/aim_bn_1313987256.jpg  http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRzuSujOeWoF0JcV4A3iJUMx3YPQEY2di5jqjfLheyktf3KAUZU

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSl9BMpwLMJjCjhLuI_dETIojcn1D0OikTvqMFKY8LX_nhl_9ma  https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiSrlHwHyXsLwVMRZcbxkcTRva2eYFFmQus0mjP1cb0Ic7UV5GjjIeHUZTOlAJl9038ymFkSz_v8EQ2gQFV0NSVBGXPAwnEfgTMOg38eSPmi233nymI-9c3edt5YKTy900-UInOPsqpHjs/s400/Omkareswar1.jpg


http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 






2)மஹா வீர்  மந்திர் ( கோவில் ) ஹனுமான்  கோவில் patna - BIHAR 


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRU2_uNT5gPsZ1r3GLBUiikz_7hTY-qEAGpiIe0MepLovpJGTpg http://www.mahavirmandirpatna.org/images/darshan.jpg
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSVUd_UHvRuvtMcdBNfQbrOl--ADAKXxB9ZAw3Ap8e1JV1h6qLRgw http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSCPcaNYH5YNflPvZ-bZF1gq3R8m4vNR92VvsQeGWQl73IlEaJNUQ



http://www.mahavirmandirpatna.org/



3)ஆஷாபுரி மாதா ராஜஸ்தான் 


http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/d/d2/Ashapura_(Ghumli).JPG/200px-Ashapura_(Ghumli).JPG https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvQ5UPM2TEf48T2-BgBV524pvxkIBv2kYxssJ8zMTBXtJkJ1G0RdSkAiuKpN_Hnyx1Kzmn5mjje_kwLGuvCJgQSC03Cxx63gr6SC2SdkFIiQC9F5jMPhYvKlA8tF_189eQb4laC5aqfWr8/s400/nadoleashapuraji.jpg https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgErJ55wcpTtc5lYG9w4KeDYvj8wwvH_jzh_d5biKIvYvSkaBg4vmnqfFMR5R0CYdB4LxA-p1ArzUlrund-YqTa9JmxMcAebo3vH5P7Us8X0zN9uxNFuKTghjiaWl0SWegYt-3_SvIZuE3z/s1600/modramata.jpeg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/27890869.jpg



http://modramata.com/Darshan/Live-Darshan.php


4)ஸ்ரீ கோபிநாத்ஜி மகாராஜ்  -  கதாடா--  பாவ்நகர் --- குஜராத் 

SHRI GOBHINATHJI MAHARAJ - GADHADA CITY - IN BHAVNAGAR DISTRICT - IN GUJARAT

http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/7/71/Gadhada_Swaminarayan_Temple.jpg/280px-Gadhada_Swaminarayan_Temple.jpg http://mw2.google.com/mw-panoramio/photos/medium/25858686.jpg

http://cdn1.images.touristlink.com/data/cache/TH/EH/EA/DQ/UA/RT/E/shri-swaminarayan-mandir-vadtal-the-headquarters-o_400_300.jpg http://gopinathji.com/photo/103.jpg

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRQBxrd27uxYYF7kBZTwRmWVOgrBGuKGZzr7xnOpht5B9GLWxLb     http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTty4xDiRVeWTJ4R3433yJcSUb8j9M6Zzf7jxTCdXT5Y1j8hLChhg




http://gopinathji.com/darshan.html



5)Shreemant Dagdusheth Halwai Sarvajanik Ganpati
Pune, Maharashtra


கணபதி கோவில் பூனா , மகாராஷ்டிரா




http://dagdushethganpati.com/en/live-darshan.php



Sunday, 13 January 2013

திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலயம் (அகத்தியர் கோவில்) மஹா கும்பாபிஷேக விழா அழைப்பிதழ்



 ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பிய அணைத்து அகத்தியர் பக்தர்களுக்கும் நன்றி


(கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது)
இந்த கோவில் பணி  நிறைவடைந்து கும்பாபிஷேக விழா வரும் புதன் கிழமை 23-01-2013 அன்று காலை 9 - 10 மணிக்குள் நடைபெறுகிறது

அனைவரும் கலந்து கொள்வோம் .
                              கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் 







அகத்தியர் ஜீவ நாடியில் இந்த ஜீவ சமாதி பற்றி இப்படி குறிப்பிடுகிறார்





 
மேலும் மஹா கும்பாபிஷேகதன்று பல அற்புதங்கள் நடைபெற இருப்பதாக மஹா சித்தர் அகத்தியர் கூறியுள்ளார் .
நாம் அனைவரும் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியை பெறுவோம் 






https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRrbQLqKCNA58kb4vcbrMfd-MnKjvdF1W_dEr9aer7EqF-6TWdjevTEVvGHGd_B5m3EGEpmt-Y0DFWmF9W2TZ4By-mpqanHROK3jzOO-6vbpI1bZ2wozpme9CEGwQu599aBpmJcVKOg5c/s1600/41.jpg


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyN-DuHnBnMpTgII77EwPmgNXXSpLTXE6Lje_qaFPK0v83s8D8rSPpy_b8Y0mRA5c_aRUgaflaAJfSRM-hAV-A5qxTdh3CNdSlAIDCKzaXfTB2z9wHFTB7aBpwkhHBTRiDjGQRgbBTE1g/s1600/2012-09-02+10.56.25.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjJVQkHi9BHlN-Qbmjwx2Tj28GfXmiMAYP7Opr-wBOEhNhLU-yux_9_3MLGQAsCxyr81_Hf8JZSXVX5EwZnWRzlfeRI0rgTCLSVKqiD2YUZV7W4MoOlYWRN2M5y0Ry2g62Dig1pCDzqCE/s1600/Untitled.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjEZ2uNcgOS42qkocjXfWTw9lVyQMQvKynYasHnVilZkjlXJRTN5qGIcfeklFWvXilbw3gyXdln4z9kg0cERLrusZY97tyxK4jBWiOeW0qd_82biU7F2FrnW7xHiToDP1OehcUwR9CCWUg/s1600/9.jpg 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3dUaZ-kp8LNM9QlH2tRTjV3UlyM2W6AdXi64ZPNA24SCg-ZUStRNHkpdCg5IXBxt7LkuwvrEVeaVDhtZj2CwZVHVpIJy-cCAvscOeNIyLNC1bCrYsxHU43pt9OitjFc7I2TdtXNX7-Ug/s1600/12.jpg
 ஓம் அகத்தீசாய நமஹ


 மேலும் தகவல்கள் அறிய

http://www.sivamayam.org/




Wednesday, 9 January 2013

நாமக்கல் அருள் மிகு ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா அழைப்பிதழ்






வரும் வெள்ளிகிழமை ( மார்கழி அமாவாசை - மூல நட்சத்திரம் ) 11-01-13 அன்று நாமக்கல் நரசிம்ம சுவாமி திருகோவிலில் அருள்மிகு ஆஞ்சநேயருக்கு " ஜெயந்தி விழா " காலை 9 மணிக்கு வடைமாலை அபிஷேக ஆராதனையுடன் நடைபெறுகிறது
ஆஞ்சநேயர் ஜாதகம்








Sunday, 15 July 2012

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhEZZq-n3jhaXoF9P4wrg7ee0_D-9rLkd-a8CvNiF8l0oiS_bbQKte7nYRpzV5CDNvsagJGfO-9w2RfJ1MO0OUF-Nn3TT93tncl7KTIJUWPAPw-0HZFvf0mPPzZRVRoVk4agbjYj7K-E/s320/scan0432.jpg
 
18-ம் நூற்றாண்டின் இறுதியில்,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளையம் என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார்.
பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில்
லக்‌ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு”
என்றே சொல்வார்கள்.

சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு
இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால்,
ஆலயத்தில் மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன்
சித்தானந்தன் செய்து வந்தார்.
அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார்.


ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு
கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால்
சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின்
கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு-”இறைவா,உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்"
என்று சொல்லி வந்து விட்டார்.

மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு
வரவில்லை என்று கேட்க,தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும்
“இறைவனுக்கு” தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார்
என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில்
பூட்டப்பட்டிருந்தது. கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை.
உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக்
கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில்
விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.

அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு.
விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்.எவரொருவர் அனைத்தையும்
இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன்
பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன்
ஒளி விட்டு பிரகாசிப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத்
தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும்.

எய்தி வழிபடில் எய்தாதன இல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்
எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
-திருமூலர்

எய்தி வழிபட்டார்.ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள்
பெற்றார்- கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின்
அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.

ஒரு சமயம்,புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில்
வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி
அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை
கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை.
மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல
வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார்.
அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும்
முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு
காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும்
புதுவைக்கு வரச் சம்மதித்தார்.

சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க
அன்னம்மாளின் நோயும் விலகிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் நோயும் பறந்தது.
தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள்
இல்லத்திலேயே அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர்.
சுவாமிகளும் இசைந்தார்.

பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை
மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில்
உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர்.

ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை
காண்பித்தார். சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று
சொல்லி விட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு,
“இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப்
போகிறது” என்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை
தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து
பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார்.
முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார்,
சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத
பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால்
சிவனையே பூஜித்தது போல் அல்லவா?
சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு
சென்று ஆசி வழங்குவார்.
ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால்
துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல்,
முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார்.சுவாமிகளிடம்
முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை
புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம்
தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்” என்று
ஆசிர்வதித்து அனுப்பினார்.
எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும்
பேராற்றல் படைத்தவர் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட
முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும்
நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு
அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின்
திருவாக்கு படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.
ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு
வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது,
குடிகாரன் ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு
இழுத்தான். சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி
வற்புறுத்தினான். சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை.


ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
--திருமூலர்


சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார்.
பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது,
மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன்
போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான்.

சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.
பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர்.
பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை
மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள்
அங்கு சென்று அவனை மன்னித்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த குடிகாரன் தன் தவறை உணர்ந்து
சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான்.
சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார்.
ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை
முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர
பெருமானின் திருக்கட்டளைக்காக காத்திருந்தார்.

திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து
“ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும்
அறியும்படி செய் “ என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய
பத்து நாட்களுக்கு முன் நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும்
கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார்.
அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக
உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை
அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள்.


எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே
-திருமந்திரம்


ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளை  ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி
என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த
பரம்பொருளாகவே நினைவில் கொண்டு வணங்கினார்கள்.
கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த
சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார்.
பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள்
சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே
மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி
தோட்டத்தில் -சுவாமிகள் சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி
கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக
காட்சியளிக்கிறது.

ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி
வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள்
நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள்.
 
http://lh3.ggpht.com/_vnD4P42nTlU/S0TLqDQGKCI/AAAAAAAAALI/jvZA7LqbQt8/s512/IMGA0035.JPG

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே