SHIRDI LIVE DARSHAN

Friday 31 May 2013

ஸ்ரீராமசந்த்ர ஆரத்தி .MP3 - ஸ்ரீ துளசிதாசர் அருளியது






http://2.bp.blogspot.com/-kGHFPErTbMI/T3XB-C0OnCI/AAAAAAAAnmY/94kQ3H0zXKc/s1600/rlsA+CHICAGO.JPG



                   ஸ்ரீ ராமர் ஆரத்தி .MP3
                                                       


 

ஸ்ரீராமசந்த்ர க்ருபாலு பஜமன ஹரண பவ பய தாருணம்
நவகஞ்ஜலோசன கஞ்ஜமுக கரகஞ்ஜ பத கஞ்ஜாருணம் ந


பிறப்பு இறப்பு என்ற மிக பயங்கரமான பயத்திலிருந்து நம்மைக் காப்பவனும், அன்றலர்ந்த தாமரை போன்ற கண்கள், வதனம், கைகள் மற்றும் பாதங்களைக் கொண்டு விளங்குபவனுமான கருணாமூர்த்தி ஸ்ரீராமனை மனமே துதிப்பாயாக!

கந்தர்ப அகணித அமித சவி நவ நீலநீரத ஸுந்தரம்
படபீத மானஹு தடித ருசி சுசி நௌமி ஜனக ஸுதாவரம் ந


மன்மதனையும் மயக்கும் பேரெழில் கொண்டவனும், கற்பனைக்கு எட்டாத கவின் பெட்டகமும், நீல நிறமுள்ள புதிய மேகம் போன்று தோற்றம் அளிப்பவனும், நீல மேனியில் மின்னல்போல மின்னும் மஞ்சளாடை அணிந்தவனும், ஜனகனின் தவப்புதல்வி சீதையின் மணாளனுமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

பஜ தீனபந்து தினேச தானவ தைத்ய வம்ச நிகந்தனம்
ரகுநந்த ஆனந்த கந்த கௌசல சந்த தசரத நந்தனம் ந


எளியோருக்கு இனியவனும் ரவிகுலத்தில் உதித்த செம்மலும், அசுரகுலத்தை அடியோடு அழித்தவனும் ரகுகுலத்திலகமும், இன்பமழை பொழியும் மேகமும், கௌசல்யைக்கு மகிழ்ச்சி தரும் சந்திரனும், தசரதருக்கு மிகவும் பிரிய மகனுமான ஸ்ரீராமனின் புகழ் பாடுவாயாக!

சிரமுகுட குண்டல திலக சாரு உதாரு அங்கவிபூஷணம்
ஆஜானு புஜ சர சாபதர ஸங்க்ராம ஜித கரதூஷணம் ந


ஒளிரும் கிரீடமும் காதுகளில் குண்டலங்களும், நெற்றியில் அழகிய திலகமும், உடல் முழுவதும் பல ஆபரணங்களும், முழங்கால் வரை நீண்ட புஜங்களும், கையில் வில்லும் அம்பும் விளங்க, போரில் கரனையும் தூஷணனையும் வென்ற ஸ்ரீராமனைத் துதிப்பாய் மனமே!

இதி வதத துளசீதாஸ சங்கர சேஷ முனிமன ரஞ்ஜனம்
மம ஹ்ருதய கஞ்ஜ நிவாஸகுரு காமாதி கல தல கஞ்ஜனம் ந
 

சிவனையும், ஆதிசேஷனையும், தவமுனிவர் களையும் மயங்க வைக்கும் ஹே ராமா! எனது இதயத் தாமரையில் வாசம் செய்து காமத்தில் விளையும் ஆறு பகைவர்களையும் வேரறுப் பாயாக! இவ்வாறு துளசிதாசர் வேண்டுகிறார்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgo2kz6sEt8wgYfDJU9qWj2RDfx0rmifiU9eO0s6eN3sUsaYdQUHvIw3b_xTByljr8BB9XaMNlcB-Vyh6dpMTT091lxSp1fcvTBbHgY5D-go5JpTVlaVfdVtVBmlrDqd6NUd6OFVVx9QPs/s1600/1sri-ramar-i1.jpg

Tuesday 28 May 2013

குரு பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள அழைப்பிதழ் - அனைவருக்கும்


குரு கிரக பரிகார ஸ்தலங்களில் நடைபெறும் பரிகாரங்களில் கலந்து கொள்ள  அழைப்பிதழ் - அனைவருக்கும்


அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் 
(குரு பரிகார ஸ்தலம் )
ஆலங்குடி


மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள் 

மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சகம் , மகரம் , மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .

ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் லட்சார்ச்சனை விழா

30-05-2013 முதல் 06-06-2013 வரை

 நடைபெறுகிறது

பங்கேற்க கட்டணம் 400/-

அருள் மிகு குருபகவான்  உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளியினால் ஆன  டாலர் பிரசாதமாக வழங்கப்படும் / தபாலில் அனுப்பப்படும்


நேரில் பங்கு பெற முடியாத

தோஷ பரிகார செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர் , நட்சத்திரம் , ராசி , கோத்திரம் , லக்னம்  போன்ற விபரங்களுடன்  MO / DD மூலமாக திரு கோவில் முகவரிக்கு அனுப்பி பிரசாதம் பெற்று கொள்ளலாம் .

DD எடுப்போர் உதவி ஆணையர் / செயல் அலுவலர் 

ASSISTANT COMMISSIONER /  EXECUTIVE OFFICER 


PAYABLE AT KUMBAKONAM 

என்ற பெயருக்கு DD  எடுத்து

 திருக்கோவில் முகவரி 

 உதவி ஆணையர் / செயல் அலுவலர்
அருள் மிகு ஆபத்சகாயெஸ்வர் திருக்கோவில் , 
குரு பரிகார ஸ்தலம் ,
ஆலங்குடி ,
வலங்கைமான் வட்டம் ,
திருவாரூர் மாவட்டம் - 612801

என்ற முகவரிக்கு அனுப்பவும்




------------------------------------------------------------------------------------------------------

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்
(குரு பரிகார ஸ்தலம் )
திட்டை
                                                                      
                                                                    


மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகும் குரு வினால் பாதிப்படையும்  ராசிகள் 

மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சகம் , மகரம் , மீனம் 

மேற்கண்ட ராசி நண்பர்கள் தங்கள் ஜென்ம  ராசிக்கு பரிகாரம் செய்து கொள்வது உத்தமம் .

இப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு

லட்சார்ச்சனை

06-06-2013 ஒரு நாள் மட்டும் 
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் 
மாலை 4 மணி முதல் 8 மணி வரையிலும் 
லட்சார்ச்சனை நடைபெறுகிறது .
கட்டணம் RS 300 /-


சிறப்பு பரிகார ஹோமம் 

07-06-2013 முதல் 10-06-2013 வரை 
காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது .
கட்டணம் 500/-

லட்சார்ச்சனை  மற்றும் பரிகார ஹோமங்களில் பங்கு பெரும் பக்தர்களுக்கு பூஜையில் வாய்த்த 2 கிராம் வெள்ளி  குரு பகவான் டாலர் பிரசாதமாக வழங்கப்படும் . 
நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் லட்சார்ச்சனைக்கு RS 300/-   பரிகார ஹோமத்திற்கு RS  500/- ஐ   
 நிர்வாக அதிகாரி 
அருள்மிகு வசிஷ்டேஸ்வரர்  திருக்கோவில்  
திட்டை ,
தஞ்சாவூர் மாவட்டம் -613 003
என்ற முகவரிக்கு MO /DD  எடுத்து  தங்கள் பெயர் , நட்சத்திரம் , ராசி , லக்னம் , கோத்திரம் ஆகிய முழு விவரங்களையும் , தங்கள் முகவரியுடன் எழுதி அனுப்பி தபால் மூலம் பிரசாதம் பெற்று கொள்ளலாம்

Thursday 23 May 2013

லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பஞ்சரத்னம்.MP3 ஆதிசங்கரர் அருளியது












த்வத்ப்ரபுஜீவப்ரியமிச்சஸி சேந்நரஹரிபூஜாம் குரு ஸததம்
ப்ரதிபிம்பாலங்க்ருத த்ருதி குசலோ பிம்பாலங்க்ருதி மாதநுதே ந
சேதோ ப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமாகிய வண்டே, உனது எஜமானனாகிய ஜீவனுக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினால், ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மபூஜையை விடாது செய். பிரதிபிம்பத்துக்கு அலங்காரம் செய்வதில் ஈடுபடும் திறமைசாலி, முதலில் நிஜ உருவத் தையே அலங்கரிப்பான். சாரமற்ற சம்சாரமெனும் பாலைவனத்தில் ஏன் வீணாக அலைகிறாய்? சாரமுள்ள செயலைச் செய்; அதாவது, நீ லக்ஷ்மீநரசிம்மரின் மாசற்ற பாதாரவிந்தத் தேனை அடைவதையே என்றும் மேற்கொள்.

சுக்தௌ ரஜதப்ரதிபா ஜாதா கடகாத்யர்த்த ஸமர்த்தாசேத்
து:கமயீ தே ஸம்ஸ்ருதிரேஷா நிர்வ்ருதிதாநே நிபுணாஸ்யாத்ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவ-மருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீ நரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மன வண்டே! முத்துச்சிப்பியைக் கண்டு ஒருவன் வெள்ளி என்கிறான்; அந்த வெள்ளியால் ஆபரணங்கள் செய்ய முடியுமா? அவ்வாறு பயன்பட்டால் இந்த உனது துக்கமயமான சம்சாரமும் பேரானந்தத்தைத் தருவது சாத்தியமாகலாம். ஆகையால் சாரமற்ற சம்சாரப் பாலைவனத்தில் வீணே அலையாமல் ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மரின் குறைவற்ற திருவடித் தாமரைகளின் மகரந்தத்தையே பற்று.

ஆக்ருதி ஸாம்யாச்சால்மலிகுஸுமே ஸ்தலநளிநத்வ ப்ரமமகரோ:
கந்தரஸாவிஹ கிமு வித்யேதே விபலம் ப்ராம்யஸி ப்ருசவிரஸே(அ)ஸ்மின் ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந


மனமான வண்டே! உருவத்தின் ஒப்புமையால், இலவம்பஞ்சு மரத்தின் பூவைப் பார்த்து, தரையிலும் தாமரை மலர்கிறதே என்ற கலங்குகிறாயே! இந்தப் பூவில் வாசனையோ, சிறிதாவது தேனோ உள்ளதா? பயனற்ற,  சிறிதும் சாரமற்ற இல்லறத்தில் அலைகிறாயே! ஏன் சம்சாரப் பாலைவனத்தில் உழல்கிறாய்? ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் சரணாரவிந்தங்களின் தேன்துளிகளையே பெறுவதில் ஆசை கொள்.

ஸ்ரக்சந்தந வநிதாதீந் விஷயாந் ஸுகதாந் மத்வா தத்ர விஹரஸே
கந்தபலீஸத்ருசா நநு தே(அ)மீ போகாநந்தர து:க க்ருதஸ் ஸ்யு: ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸீம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம் நந
 

மனம் எனும் வண்டே! பூமாலை, சந்தனக் குழம்பு, வனிதையர் முதலானவற்றை இன்பம் தருவனவாகக் கருதி அவற்றில் ஈடுபடுகிறாயே, அவை தாழம்பூவிற்குச் சமம்; முதலில் இவை இன்பம் தருவதுபோல் தோன்றினாலும், பிறகு முழுவதும் துன்பம் விளைவிக்கும்.  கையால் மனமே! விரசமான சம்சார பாலையில் வீணே உழலாதே; ஸ்ரீலக்ஷ்மீநரசிம்மரின் திருவடித்தாமரைகளின் மகரந்தத்தையே முக்கியமாகப் பற்று.

தவ ஹிதமேகம் வசநம் வக்ஷ்யே ச்ருணு ஸுககாமோ யதி ஸததம்
ஸ்வப்நே த்ருஷ்டம் ஸகலம் ஹி ம்ருஷா ஜாக்ரதி ச ஸ்மர தத்வதிதி! ந
சேதோப்ருங்க ப்ரமஸி வ்ருதா பவமருபூமௌ விரஸாயாம்
பஜ பஜ லக்ஷ்மீநரஸிம்ஹாநகபத ஸரஸிஜ மகரந்தம்நந


மனமாகிய வண்டே! உனக்கு இதமான ஒன்றைக் கூறுகிறேன். நீ எப்போதும் இன்பம் அடைய விரும்பி னால், நீ விழிப்பு நிலையில் பார்க்கும் எல்லாப் பொருளுமே, கனவில் காணும் பொருளைப் போலவே முழுவதும் பொய் என்பதை நன்கு ணர். மனமே, வீணாக விரசமான சம்சாரப் பாலைவனத்தில் அலைந்து திரியாதே; ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்மருடைய மாசற்ற சரணாரவிந்தத் தேனிலேயே பற்று வை.



Wednesday 22 May 2013

சக்ரராஜ (சுதர்சனர்) மங்களம்.MP3







                            சக்ரராஜ -சுதர்சனர் மங்களம்.MP3





மங்களம் சக்ரராஜாய மஹநீய குணாப்தயே
பத்மநாப கராம்போஜ பரிஷ்காராய மங்களம்

நாசீ விப்லோஷகாராய கல்யாண குணசாலினே
மாலி ப்ரமதநாயாஸ்து மஹாதீராய மங்களம்

கஜேந்த்ரார்த்தி ஹராயாஸ்தி க்ராஹ த்வேதாத்வகாரிணே
திநாதீச திரோதாந கர்த்ரே தீப்தாய மங்களம்

சித்ராகார ஸ்வசாராய சித்த நிர்வ்ருதி காரிணே
நரகாஸுர ஸம்ஹர்த்ரே நாநா ரூபாய மங்களம்

சண்டாஸ்த்ராஞ்ஜித தோர்கண்ட கண்டிதாமரச த்ரவே
சாமீகர நிபாங்காய சாருநேத்ராய மங்களம்

சைத்யாஸூர ஸிரோஹர்த்ரே சந்த்ராஹ்லாத கராய தே
ஸ்ரீமதே சக்ரராஜாய ச்ரிதார்த்திக்நாய மங்களம்

 

ஸ்ரீமதே ஸுதர்சனாய நம:


Wednesday 15 May 2013

சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் - ஆதி சங்கரர் .MP3




சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் - MP 3




                         ANOTHER 




 1.ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ
மஹாதந்திவக்த்ராபி பஞ்சாஸ்யமாந்யா
விதீந்த்ராதிம்ரிக்யா கணேசாபிதா மே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாணமூர்தி

இளம் பாலகனாக இருப்பினும் மலைபோன்ற இடையூறுகளைப் போக்குபவரும் பெரும் யானைமுகத்தவராயினும் சிங்கத்தின் மரியாதைக்குறியவரும் (பரமேச்வரனின் மரியாதைக்குறியவர்) , பிரம்மதேவன், இந்திரன் முதலியோரால் தேடித்தேடி வழிபடத் தக்கவரும், மங்களஸ்வரூபினியான கணேசப் பெருமான் எனக்கு செல்வம் சேர்ப்பிக்கட்டும்.

2.ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா த்யோததே மே
முகாந்நி:ஸரந்தே கிரஸ்சாமி சித்ரம் 
 
எனக்கு சப்தமும் தெரியாது அதன் பொருளும் தெரியாது. அதனாலேயே செய்யுட்காவியமும் வாசனகாவியமும் அறியேன். ஆனால் ஆறுமுகமான ஞானவடிவம் ஒன்றே என் மனதில் நிழலாடுகிறது. வாயினின்று ஏதேதோ விசித்ரமான சொற்கள் வெளிப்படுகின்றன.

3.மயூராதிரூடம் மஹாவாக்யகூடம்
மநோஹரிதேஹம் மஹச்சித்தகேஹம்
மஹீதேவதேவம் மஹாவேதபாவம்
மஹாதேவபாலம் பஜே லோகபாலம்

மயில்மேல் ஏறி, மஹாவாக்யர்களின் முழுப் பொருளாக அமைந்து, அழகிய வடிவுடன் மஹான்களின் மனதில் நித்யவாஸம் செய்யும் மஹாதேவன் மகனை வழிபடுகிறேன். அவர் உலகைக் காப்பவர். வேதவிழுப்பொருள் ஸுப்ரம் மண்யராவர்.

4.யதா ஸந்நிதாநம் கதா மாநவா மே
பவாம்போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்திபுத்ரம்

எப்பொழுது மனிதர்கள் என் ஸந்நிதானம் வந்து சேர்ந்தார்களோ அப்பொழுதே ஸம்ஸாரக்கடலையும் கடந்து விட்டார்கள். என்று காட்டுவார் போல் கடற்கரையில் நிலைப் பெற்றிருக்கும் அந்த பராசக்தி புத்ரனைத் துதிக்கிறேன்.

5.யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ஸ்ததைவாபத:ஸந்திதௌஸேவதாம் மே
இதீவோர்மிபங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்

ஆர்பரிக்கும் பெருங்கடல் அலைகள் சற்று நேரத்தில் அடங்கிவிடுவது போல என்னை ஸேவிக்கும் பக்தர்களின் இன்னல்கள் இடம் தெரியாமல் போய்விடும்... என்று குறிப்பிடத்தானோ இவர் இப்படி கடலலைகளைக் காட்டுகின்றார்!அவ்வாறு காட்சியளிக்கிற குகப்பெருமானை எப்பொழுதும் ஹ்ருதயக்கமலத்தில் த்யானிக்கிறேன்.

6.கிரௌ மந்நிவாஸே நரா யேsதிரூடா
ஸ்ததா பர்வதே ராஜதே தேsதிரூடா:
இதீவ ப்ருவந்கந்தசைலாதிரூட:
ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோsஸ்து

நான் வஸிக்கும் மலை மீது எவர் ஏறி வந்தனரோ அவர் அப்போதே மலை போன்று மிக உயர்ந்த பதவியில் விளங்குவர் - என்று கூறுவார் போல கந்தமாதன மலையில் வீற்றிருக்கும் ஷண்முகப்பெருமான் என்னை மகிழ்விக்கட்டும் .

7.மஹாம்போதிதீரே மஹாபாபசோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாக்ய சைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்திம் ஹரந்தம் ச்ரயாமோ குஹம் தம்

பெருங்கடற்கரையில் மஹாபாபங்களைப் போக்கும் முனிவர்க்கு இசைவான கந்தகமான மலையில் குகைக்குள் குடிகொண்டு விளங்கும் அனைவரது அல்லல் தீர்க்கும் குஹனை சரணடைகிறோம்.

8.லஸ்த்ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காம தோஹே
ஸுமஸ்தோமஸஞ்சந்நமாணிக்யமஞ்சே
ஸமுத்யத்ஸஹஸ்ரார்கதுல்யப்ரகாசம்
ஸதா பாவயே கார்திகேயம் ஸுரேசம்

மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுகின்ற, மலர் நிரம்பிய தங்கக்கட்டிலில், தங்கமயமான விமானத்தின்கீழ் ஆயிரம் சூரியர்கள் போல் ஒளி வீசுகிற கார்த்திகேயனை எக்கணமும் த்யானிக்கிறேன்.

9.ரணத்தம்ஸகே மஞ்ஜுலேsத்யந்தசோணே
மநேஹரிலாவண்யபீயூஷபூர்ணே
மந:ஷட்பதோ மே பவக்லேசதப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே

அன்னப்பறவைகள் கால்மாறிப் போய்விட்டதே என ஒல மிட ஹேதுவானதும் அழகியதும், மிகவும் சிறப்பானதும், மனதைக்கவரும் அழகமுதம் நிரம்பப் பெற்றதுமான ஸ்கந்த பெருமானே!உனது திருவடிதாமரையில் என் மனதாகிய தேனீ நிலையாக களிப்படையட்டும்.

10.ஸுவர்ணாபதிவ்யாம்பரைர்பாஸமாநாம்
க்வணத்கிங்கிணீமேகலாசோபமாநாம்
லஸத்தேமபட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்

தங்கமென பளபளக்கும் திவ்யமான ஆடையும், ஒலிக்கும் சலங்கை மேகலையும், தங்கப்பட்டையும் கொண்டு ஜ்வலிக்கும் இடுப்பை, ஸ்கந்தனே!த்யானம் செய்கிறேன்.

11.புலிந்தேசகநேயாகநாபோகதுங்க
ஸ்தநாலிங்கநாஸக்தகாச்மீரராகம்
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸ்வர்தா ஸாநுராகம்

ஸ்ரீ வல்லிதேவியின் பருத்து விம்மிய மார்பகத்தில் ஆலிங்கனம் செய்யும்போது குங்குமப்பூகலந்த சந்தனப்பூச்சு படிந்த உனது மார்பை வணங்குகின்றேன். தாரகனை அழித்த வேலவா!அந்த உன் மார்பு, பக்தர்களின் பாதுகாப்பில் அனவரதமும் அக்கரை கொண்டதன்றோ!

12.விதௌ க்லுப்தத்ண்டாந்ஸ்வலீலாத்ருதாண்டா-
ந்நிரஸ்தேபசுண்டாந்த்விஷத்காலதண்டாந்
ஹதேந்த்ராரிஷண்டாஞ்ஜகத்த்ராண சௌண்டாந்
ஸதா தே ப்ரசண்டாஞ்ச்ரயே பாஹ தண்டாந்

ப்ரம்ம தேவனுக்கே தண்டனை கொடுத்தும், எளிதில் அண்டசாரங்களைத் தாங்கியும், கஜாஸுரன் துதிக்கையை ஒதுக்கித்தள்ளியும், எதிரிகளை காலதண்டமென வெருட்டியும், இந்திரனின் எதிரிகளை அவ்வப்போது அழித்து உலகைக் காக்கத்திறம் பெற்றும் விளங்கிய உன் பன்னிரு கைகளை சரணமடைகின்றேன்.

13.ஸதா சாரதா:ஷண்ம்ருகாங்கா யது ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ,திதாச்சேத்ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா:கலங்கைச்ச ஹிநா
ஸ்ததா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்

ஒ ஆறுமுகப் பெருமானே!உனதருளால் ஒருவேளை இளவேனிற்காலத்து சந்திரர்கள் அறுவர் நாற்புரமும் தோன்றுபவராகவும், கசடு இல்லாமல் முழு வடிவில் இருப்பவராகவும் இருந்தால் உனது முகத்திற்கு அவரை ஒப்புவமையாகக்கூற இயலும்.

14.ஸ்புரமந்தஹாஸை:ஸஹம்ஸாநி சஞ்சத்
தடகாக்ஷவலீப்ருங்கஸங்கோஜ்ஜ்வலாநி.
ஸுதாஸ்யந்திபிம்பாதராணீசஸ¨நோ
தவாலோகயே ஷண்முகாம் போருஹாணி

ஒ மஹேசன் மைந்தனே!உன் முகங்கள் ஆறும் ஆறு தாமரைகள் எனக்காண்கிறேன். அவற்றில் புன்முறுவல் இருப்பதால் அன்னங்கள் உள்ளன. கடைக்கண்கள் துவள்வதால் அழகிய தேனிக்கள் அசைந்தாடுகின்றன. அமிருதமே சிந்தும் சிவந்த உதடுகள் இருப்பதால் தேனுக்குப் பஞ்சமில்லயே!

15.விச்லேஷ கர்ணாந்ததீர்கேஷ்வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷ த்வாதசஸ்வீக்ஷணேஷ
மயீஷத்கடாக்ஷ:ஸக்ருத்பாதிதச்சேத்-
பவேத்தே தயாசீல கா நாம :

ஒ கருணை காட்டும் ஸ்வபாவமுள்ளவனே!உனக்கு பனிரெண்டு கண்கள், அவை காதுவரை நீண்டவை, பரந்தவை, கருணைததும்பும் இணத்தவை, என் மீது சிறிய கடாக்ஷம் விழக்கூடாதா?அதில் உனக்கு என்ன இழப்பு ஏற்படும்?

16.ஸுதாங்கோத்பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபந்மந்த்ரமீசே முதா ஜிக்ரதே யாந்
ஜகத்பாரப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்ஜ்வ்லேப்யோ நமோ மஸ்தகேப்ய:

என்னில் பிறந்த குழந்தாய்!நீ பல்லாண்டு வாழ்க... என்று ஆறுமுறை மந்திரத்தை ஜபித்து பரமேச்வரன் உச்சிமுகர்ந்த அந்த ஆறு தலைகளுக்கு என் நமஸ்காரங்கள். ஒ ஜகன்னாத!அவை கிரீடமணிந்து அழகாய் இருப்பவை மட்டுமில்லை. உலகபாரம் முழுவதும் தாங்குபவை ஆயிற்றே!

17.ஸ்புரத்ரத்நகேயூரஹாராபிராம-
ச்சலத்குண்டலஸ்ரீலஸத்கண்டபாக:
கடௌ பீதவாஸா:கரே சாருசக்தி:
புரஸ்தாந்மமாஸ்தாம் புராரேஸ்தநூஜ:

'பளிச்'என விளங்கும் ரத்ன கேயூரம், ஹாரம் இவற்றால் அழகியவரும், அசையும் குண்டலங்கள் அழகுமிளிர பளபளக்கும் கன்னக்கதுப்புடனும், இடையில் மஞ்சள் பட்டும், கையில் அழகிய சக்தி ஆயுதமும் கொண்ட புராரியின் புதல்வன் என் முன்னே தோன்றட்டும்.

18.இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந்ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராச்சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹராச்லிஷ்டகாத்ரம் ப்ஜே பாலமூர்திம்

குழந்தாய் இங்கே ஒடி வந்துவிடு!என்று கைகளை நீட்டி சங்கரன் பரிவுடன் கூப்பிடுகையில், தாயின் மடியிலிருந்து தாவி தந்தையை அடைந்தவுடன், அவர் இருக அணைத்துக்கொண்ட பால ஷண்முகனை நான் ஸேவிக்கிறேன்.

19.குமாரேசஸ¨நோ குஹ ஸ்கந்த ஸேநா
பதே சக்திபாணே மயூராதிரூட
புலிந்தாத்மஜாகாந்த பக்த்தார்திஹாரிந்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் த்வம்

ஒ குமாரரே!ஈசன் மகனே!குஹனே!ஸ்கந்தனே!ஸேனாபதியே!சக்தி பாணியே!மயில்வாஹனனே!வள்ளிமணாளனே!பக்தர் துயர் துடைப்பவனே!ப்ரபுவே!தாரகனை ஸம்ஹரித்தவனே!என்னை எப்போதும் காப்பாயாக!

20.ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸஞ்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரிவக்த்ரே பயோத்கம்பிகாத்ரே
ப்ரயாணோந்முகே மய்யநாதே ததாநீம்
த்ருதம் மே தயாலோ பவாக்ரே குஹ த்வம்

புரக்கரணங்கள் அடங்கி, உணர்வற்று, செயலற்று கபங்கொண்டும் வாயுடனும், பயந்தால் நடுங்கும் உடலுடனும், கவனிப்பாரில்லாமல் நான் மேலுலகம் புறப்படும் ஸமயத்தில் என்முன்னே தோன்றுவீராக!ஹே தயாபரனே!குக!

21.கருதாந்தஸ்ய தூதேஷ சண்டேஷ கோபா-
த்தஹ ச்சிந்த்தி பிந்த்தீதி மாம் தர்ஜயத்ஸு
மயூரம் ஸமருஹ்ய மா பைரிதி த்வம்
புர:சக்திபாணிர்மமாயஹி சீக்ரம்.

யமதூதர்கள் கொடியவர்கள்;அவர்கள் கோபத்துடன் இவனைக் கொளுத்து, வெட்டு, பிளந்து தள்ளு - என்று அதட்டுகையில் ஆறுமுகனே!நீ மயில்மீதேறி பயப்படாதே என்று தேற்றிக்கொண்டு சக்தி ஆயுதத்துடன் சட்டென என் முன்னே வந்துவிடு.

22.ப்ரணாம்யாஸக்ருத்பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்தயே நேகவாரம்
ந வக்தும் க்ஷமோஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்யுபேக்ஷ

ஹே ப்ரபோ!உமது கால்களில் வீழந்து நமஸ்கரித்து கெஞ்சிப் பலமுறை பிரார்த்தித்துக் கொள்கிறேன். கிருபா ஸமுத்திரமே!அந்த கடைசீ காலத்தில் நான் சொல்ல முடியாமல் போகலாம். ஒரு போதும் என்னை கைவிடலாகாது.

23.ஸஹஸ்ராண்டபோக்தா த்வயா சூரநாமா
ஹதஸ்தாரக:ஸிம்ஹவக்த்ரச்ச தைத்ய:
மமாந்தர்ஹ்ருதிஸ்தம் மநக்லேசமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாமி

ஹே ப்ரபோ!பல அண்டபுவனங்களை அனுபவித்து வந்த சூத்ரனையும் தாரகாசுரனையும், சிங்கமுக்ஸுரனையும், தாங்கள் வதைக்கவில்லையா?என் ஹ்ருதயத்திலுள்ள மனக்லேச மொன்றை ஏன் அழிக்கக்கூடாது?நான் என்ன
செய்வேன். உன்னையன்றி நான் வேறு யாரிடம் போவேன்.

24.அஹம் ஸ்வதா து:கபாராவஸந்நோ
பவாந்தீநபந்துஸ்த்வதந்யம் ந யாசே
பவத்பக்திரோதம் ஸதா க்லுப்தபாதம்
மமார்திம் த்ருதம் நாசயோமாஸுத் த்வம்

ஹே உமையவளின் அருமை மகனே!நான் எப்பொழுதும் துன்பச்சுமை தாங்கமுடியாமல் தவிக்கிறேன். நீரோ ஏழை எளியவருக்கு பங்காளன். உன்னையன்றி வேறு எவரையும் வேண்டேன். உன்னிடம் பக்திசெலுத்த தடையாய் இருப்பதும் இடையராது தொந்தரவு செய்வதுமான என் மனக்லேசத்தை ஒழிப்பாயாக.

25.அபஸ்மாரகுஷ்டக்ஷயார்சப்ரமேஹ
ஜ்வரோந்மாதகுல்மாதிரோகா மஹாந்த:
பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத்தாரகாரே த்ரவந்தே

தாரகனை ஸம்ஹரித்த வீரனே!உனது பன்னீர் இலை விபூதியைக்கண்டு, அபஸ்மாரம், குஷ்ட்டம், க்ஷயம், அர்சஸ், ப்ரமேகம், ஜ்வரம், உந்மாதம், குல்மம் முதலிய பெரிய வ்யாதிகளும், பிசாசுகளும், ஒரு நொடியில் ஒடிவிடுகின்றவே!என்ன ஆச்சர்யம்!

26.த்ருசி ஸ்கந்தமூர்தி:ச்ருதௌ ஸ்கந்தகீர்தி-
ர்முக் மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருதயம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குஹே ஸந்து லீநா மமாசேஷபாவா:

கண்களில் கந்தனின் உருவமே தோன்றட்டும், காதுகளில் கந்தனின் புகழும் முகத்தில் (வாயில்) அவனது புண்யமான சரித்திரமும், கையில் அவனது சேவைச் செயலும், உடலில் அவனது ஊழியமும் -- இப்படி என் அனைத்து உணர்வுகளும் ஸ்கந்தனைச் சார்ந்தே அமையட்டும்.

27.முநீநாமுதாஹோ ந்ருணாம் பக்திபாஜா-
மபீஷ்டப்ரதா: ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்யஜாநாமபி ஸ்வார்த்ததாநே
குஹாத்தேவமந்யம் ந ஜாநே ந ஜாநே

எல்லா தேவர்களும், முனிவர்களுக்கோ, பக்தியுள்ள மனிதர்களுக்கோ தான் அவரது காமனைகளைப் பூர்த்தி செய்பவராக உள்ளனர். ஆனால் பின்தங்கிய மக்களுக்கும் விருப்பம் நிறைவேற்றிவைப்பதில் குஹனைத் தவிர வேறு கடவுளை அறியேன்.

29.ம்ருகா:பக்ஷிணோ தம்சகா:யே ச துஷ்டா-
ஸ்ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்திதீக்ஷ்ணாக்ரபிந்நா:ஸுதூரே
விநச்யந்து தே சூர்ணிதக்ரௌஞ்சசைல

எனக்கு துன்பம் விளைவிக்கும் துஷ்ட மிருகங்களும், பறவைகளும், ஈ, கொசு முதலியவைகளும், தங்களது சக்தி ஆயுதத்தின் கூறிய முனையால் சிதறியடிக்கப்படட்டும், அழியட்டும். தாங்கள் க்ரௌஞ்ச மலையை பொடிப் பொடியாகச் செய்யவில்லையா?

30.ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத
அஹம் சாதிபாலோ பவாந் லோகநாத:
க்ஷமஸ்வாப்ராதம் ஸமஸ்தம் மஹேச

ஹே தேவஸேனையின் தலைவரே!தாயும் தந்தையும் தமது மகன் தவறை பொருத்துக் கொள்வதில்லையா?நானோ மிகவும் சிறு பாலகன். தாங்கள் உலகத்தந்தை:ஆகவே எனது அனைத்து அபராதங்களையும் மன்னித்து அருளிவீராக.

31.நம:கேகித சக்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம:குக்குடாய
நம:ஸிந்தவே ஸிந்துதேசாய துப்யம்
புந:ஸ்கந்தமூர்த்தே நமஸ்தே நமோஸ்துது

மயிலுக்கும், சக்தி ஆயுதத்திற்கும், ஆட்டுக்கடா, கோழி இவற்றிற்கும் நமஸ்காரம், கடலுக்கும் கடலைச்சார்ந்த இடத்திற்கும் எனது நமஸ்காரம் ஸ்கந்த பெருமானுக்கு பின்னும் பின்னும் நமஸ்காரம்.

32.ஜயாநந்தபூமஞ்ஜயாபாரதாம
ஞ்ஜயாமோககீர்தே ஜயாநந்தமூர்தே
ஜயாநந்தஸித்தோ ஜயாசேஷ பந்தோ
ஜய த்வம் ஸதா முக்திதாநேசஸ¨நோ

ஆனந்தப் பெருக்கே!உனது பக்கம் ஜயிக்கட்டும். ஒளி மிகுந்தவனே!உனக்கு ஜபம் பயன்மிக்கப் புகழோனே!உலகனைத்திற்கும் பங்காளனே!உனக்கு ஜயம் உண்டாகட்டும் அனந்த மூர்த்தியாய் மோக்ஷம் நல்கும் பரமேச்வரனின் மைந்தனே!உனக்கு ஜயம், ஜயம்.

33.புஜங்காக்ய வ்ருத்தேன க்லுப்தம் ஸத்வம் ய:
படேத்பக்தியுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய
ஸ புத்ராந்கலத்ரம் தநம் தீர்க்மாயுர்
லபேத்ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நர:ஸ;

புஜங்கப்ரயாதம் என்ற விருதத்தில் அமைக்கப்பெற்ற இந்த ஸ்தோத்திரத்தை எவரெவர் குகனை வணங்கி பக்தியுடன் படிக்கின்றனரோ அவரெல்லாம் மனைவி
மக்களையும் செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் பெறுவர். கடைசியில் ஸ்கந்தனுடன் ஐக்யத்தையும் அடைவர்.




Friday 3 May 2013

சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம் .MP3

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTfGMLyYnqMFMAiZ9hH52aYPMEWffzuqvsTWAxc_J4eWgbSDZXq


சிவபஞ்சாக்ஷர த்தோத்ரம்.MP3 


 

1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும், விலக்ஷணயான கண்ணையுடையவரும், விபூதி பூசியவரும், மஹேச்வரனாயும், நித்யராயும் சுத்தராயும், திசைகளையே ஆடையாக உடையவருமான அந்த நகாரஸ்வரூபினியான சிவனுக்கு நமஸ்காரம்.

 
2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!

தேவகங்கைத் தண்ணீர் புஷ்பம் இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்குத் தலைவரும், மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால் நன்கு பூஜிக்கப்பட்டவரும் ஆன அந்த மகாரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

 
3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!

பார்வதீ முகமாகிய தாமரைக்கொத்துக்கு சூர்யனாயிருப்பவரும், தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவரும், நீலகண்டரும், வ்ருஷபக்கொடி கொண்டவரும் ஆன அந்த சிகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

 
4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!

வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உச்சியையுடையவரும், சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய கண்களையுடையவருமாகிய அந்தவகார ரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.
 
5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

யக்ஷஸ்வரூபியாவும், ஜடைதரித்தராயும், பிநாகவில்லை கையில் கொண்டவரும், பழமையன தேவரும் திகம்பரருமான அந்த யகாரரூபியான சிவனுக்கு நமஸ்காரம்.

சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று 

Wednesday 1 May 2013

அகத்தியர் ( பொதிகை) மலைக்கு ஒரு பயணம்

குறுமுனிக்கு பூசை

அகத்தியர் வாழ்ந்து வரும், தென்றல் தவழ்ந்தோடும் பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர்.

தமிழ் இலக்கணம், சித்த மருத்துவம், சோதிடம் ஆகியவற்றைப் படைத்து, சித்தர்களுக்கெல்லாம், தலையாய சித்தராக விளங்கும் தமிழ் முனிவர் அகத்தியரை, இறைவனாகவே சித்தர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் வணங்கி வருகின்றனர்.

அகத்தியர் வாழும் இப்பொதிகை மலையில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரத்திலுள்ள அகத்தியரைத் தரிசிக்கச் செல்வதை புனிதப் பயணம் என்றும் சாகசப் பயணம் என்றும் கூறலாம்.

அபூர்வ மூலிகைகள், மனதைக் கவரும் அருவிகள், சிற்றோடைகள், ஆறுகள், எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள், புல்வெளிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகை மலை இயற்கை நமக்கு அளித்த கொடை.

இந்த அடர்ந்த காட்டில் சிறு அட்டை முதல் மான், காட்டெருமை, கரடி, சிறுத்தை, புலி, யானை, செந்நாய், பாம்பு, உடும்பு மற்றும் காடுகளில் உள்ள ஊர்வன, பறப்பன உள்ளிட்ட அனைத்து வனவாழ் உயிரினங்களும் உள்ளன.
தமிழ் முனிவரைத் தரிசிக்க கேரளத் தலைநகரான திருவனந்தபுரம் பி.டி.பி. நகரிலுள்ள வனவிலங்குக் காப்பாளர் அலுவலகத்தில் அனுமதி பெற்று, அவர்களது தகவலின் பேரில் போணக்காட்டிலுள்ள வனத் துறை சோதனை மையத்தில் பணம் செலுத்தி, அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்று, போணக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடத்திலிருந்து, வனத் துறையினர் நமக்கு ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் (எமஐஈஉ) மூன்று நாள் பொதிகை மலை பயணம் தொடங்குகிறது.

முதல் அரைமணிநேரப் பயணத்தில் நாம் முதலில் காண்பது விநாயகர் கோயிலை. அவரை வணங்கி நடைப்பயணம் தொடங்குகிறது. அங்கிருந்து சுமார் ஒரு மணி நேரப் பயணத்தில் கரமனையாறு அடைகிறோம். அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது.

 பனிபடர்ந்த அகத்தியர் மலை

இவ்வாறு மலை ஏற்றம், இறக்கம், சிற்றாறு, அருவிகள், புல்வெளி, அடர்ந்த வனம் ஆகிய வழிகளில் நடந்து, சுமார் 6 மணி நேர பயணத்தில் (நன்றாக நடைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் ஆகலாம்) அதிருமலை எஸ்டேட் என்ற இடத்தை அடைகிறோம்.
அங்கு கேரள வனத் துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்குகிறோம். குறுமுனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையில் காவல் தெய்வமாக உள்ள தெய்வத்தை வணங்கிவிட்டு நடைப்பயணம் தொடங்குகிறது.

சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடைகிறோம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு (இது முற்றிலும் மூலிகை நீரைக் கொண்டது) மீண்டும் நடைப்பயணம். 15 நிமிட நடைப்பயணத்தில் தமிழக வனப் பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடத்தை அடைகிறோம்.

இது கடல்மட்டத்திலிருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை' என்று கூறுகின்றனர். கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச் சங்கு முத்திரை பகுதியின் மற்றொரு பள்ளத்தாக்கில் நமது வற்றாத ஜீவநதியாம், பொருநை என்று அழைக்கப்படும் தாமிரவருணி உற்பத்தி இடமான பூங்குளம் சுனை உள்ளது.

 கயிற்றின் துணையுடன்

இந்த சங்கு முத்திரை பகுதியிலிருந்துதான் பொதிகை மலையை நோக்கிய மிகவும் செங்குத்தான பாதை தொடங்குகிறது. இப்பாதையில் பெரும் பகுதி பாறைகளாகவே காணப்படுகிறது. இச்சிகரத்தின் பாதி உயரம் வரை, இடது புறத்தின் மரங்கள் நிறைந்த மழைநீர் வழியும் சாய்வான பகுதி வழியே ஏறி சென்று, பின் வழித்தடங்கள் அற்ற பாறைகள் வழியே துன்பத்தைப் பொருள்படுத்தாது, காலும், கையும் ஊன்றி மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கி, நாக்கு வறண்டு, பின் செங்குத்தான பகுதியில் கயிறு மற்றும் இரும்புக் கயிறு (ரோப்) பிடித்து கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்திலிருந்து சுமார் 6,132 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.

அங்கு குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறு முனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையைத் தரிசிக்கும்போது, அந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்தத் தரிசனத்துக்குத்தான் நாம் இப்பிறவி எடுத்தோமோ என்ற நிலை நமக்கு ஏற்படும்.

இந்த உச்சிப் பகுதியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர் காற்றும், சில நேரம் மழையும், சாரலும் ஏற்படும்.

 

இப்படி ஆனந்த அனுபவத்துடன், கொண்டு சென்ற பூஜைப் பொருள்களால், குறு முனிவருக்கு அபிஷேக, ஆராதனை செய்து, கூட்டு வழிபாடு நடைபெறும். 
 






http://farm8.staticflickr.com/7215/7398003992_37369c6376_m.jpg



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9cTxSLIzrh7EPfWffuEwWuhrClncSXSwg4rMizoGxkH03Njt8udx9Lqb0GfbholR-_F0SrCTdOqLi5yWCFhzLwPaHSIeA_4hWWr8zKGodJUWO5t5kE5xS66TzjpMdtSZ994XByvST_mE/s270/Pothigai-Agathiyar-Perumaan_small.jpg












தொடர்ந்து மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரப் பயணத்தில் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடைந்து அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அதன் பின் இரவு பொழுதை அங்கு கழித்துவிட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு பயணம் தொடங்கி, சுமார் 5 மணி நேர நடைப்பயணத்துக்கு பின் போணக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பயணம் நிறைவு பெறுகிறது.

இம் மூன்று நாள் பயணத்தின்போது சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், செல்போன் தொந்தரவு இல்லாத வெளி உலகத் தொடர்பின்மை, பார்க்கும் இடங்கள் எல்லாம் மனதைக் கவரும் பசுமை வெளி ஆகியவற்றால் நமது உடலும், உள்ளமும் புத்துணர்வு பெற்றது என்றால் அது மிகையாகது.

தமிழ் முனிவரைத் தரிசிக்க ஆண்டுதோறும் ஜனவரி 15 முதல் சிவராத்திரி வரை கேரளத்தவர்கள் தினமும் குழுவாக (நாள் ஒன்று சுமார் 200 பேர்) சென்று வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்ரல் மாதம் முதல் சென்று வருகின்றனர்.


1998-ம் ஆண்டு தமிழக வனத் துறை பொதிகை மலை செல்ல அனுமதி மறுத்து விட்டது. பின் பொதிகை மலை புனித யாத்திரைக் குழுவினர் மற்றும் பக்தர்களின் முயற்சியால், வனத் துறை சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது.

இந்நிலையில், 2009-ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி மறுத்ததுடன், கேரளம் வழியாக செல்ல அறிவுறுத்தியது.













ஓம் அகத்தீசாய நமஹ 

From : dinamani.com