SHIRDI LIVE DARSHAN

Friday 23 November 2012

ஓம் அகத்தீசாய நமஹ or ஓம் அகஸ்தியாய நம என்று எழுதி அனுப்புவோம்;அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

ஓம் அகத்தீசாய நமஹ or ஓம் அகஸ்தியாய நம 

 என்று எழுதி அனுப்புவோம்;

அகத்தியர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்போம்!!!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOuT469-u9goUREs9skg_j5f-CkmqMxzK-J19ECt-FmqGIPE_GT8pHmh6K2FXAxsrINBOsM42s0BB2kN59t74LT-N36HdRNoJRlar9kioEZ0jt33bM01QUoguyLOQXjtCdwQqg_pn06-JB/s320/agasthiyar+nama+jabam.jpg 
கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு  கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?

எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.

ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrUSHcNL5pio2mJbbKb2dpQgpwULKI_gUtdO3Mq7ACJMg3nDdMQldPjv-YoaazYUoMrwc5j6A6iCwo3BYyUwqr-vKWWDFpNvIWM4jkaUgB0B4riFt-i31mhrLVK3h66TF6SAYKC29O1ryR/s1600/agathiyar1.jpg

இதுவரை யாரெல்லாம் ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதினார்களோ அவர்களில் பலருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியரின் ஆசி கிடைத்திருக்கிறது.
பலரது அதிகாலைக் கனவில் அகத்தியர் வந்து ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒருவர்,90 நாட்களுக்கு தினமும் நூற்று எட்டுமுறை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்;91 ஆம் நாளில் அவர் பணிபுரியும் நிறுவனத்தில்,அவரை ஒப்பந்தப்பணியிலிருந்து நிரந்தரப்பணியாளராக நியமனம் செய்துவிட்டனர்;இந்த  நியமனம் அந்த நிறுவனத்தின் விதிகளையும் மீறி நிகழ்ந்திருக்கிறது என்பதுதான் அந்த கிறிஸ்தவ அன்பருக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தந்திருக்கிறது!!

தினமும் நூற்றி எட்டு முறை வீதம் காலையும் மாலையும் எழுதி வந்த ஒருவருக்கு அவ்வாறு எழுதிய 18 வது நாளிலேயே அவருடைய 27 வித கோரிக்கைகளை அகத்தியர் நிறைவேற்றி வைத்துவிட்டார்.

இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;

ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.

15.12.2012 (கார்த்திகை மாதத்தின் 
கடைசி நாள்)

வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது  குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?

அனுப்ப வேண்டிய முகவரி:
கி.முரளிதரன்,
டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
3,முதல் தளம்,
பாரதி பூங்கா வீதி 2,
சாய்பாபா காலனி,
கோயம்புத்தூர் 11.    

PROPER ADDRESS:=
In English:
Mr.K.MURALIDARAN,
TOTAL OIL INDIA P LTD,
3,First Floor,
Bharathi Park Cross Road-2,
Saibaba Colony,
COIMBATORE-11.
ஓம் அகத்தீசாய நமஹ

                    or

ஓம் அகஸ்தியாய நம 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEga7RUdOZBxG4ZnkdR4nd8QiiAEm55Z55_h15nMK2lLLaaTMFgm6u8s0z3q1VDPYEXoEVBOTphFUPcNWigs95cCwJLm_NnUtpi8ovSrE7ev3RGwGIhPgq0XcquQbuM5_xLldHN7aVN8oDU/s1600/agastheesayamnamaha.jpg 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjINg6KihlCkfL2CVUsZPg86R4mM4YHUQJUpfXE8s_ey3mq5448blDNaSOcUV47HlliYB9974YjyJqEIW1UUAWPjqnzJaz56nt4S0KAdtyje5psGK0weYSkNPmI3riVOGUfEQoPYGYWVss/s1600/thiruchitrambalam.jpg 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtE9bmp_eaSqml9JrjV0Ebz4wBpGtbfYtKWx1eOGDtYxxGbMuKU1nmKEHpMTinDu0XRH7Z3cvB8zFx4ES_1FNchGXIipjLEQovWmsUa3-NnLa2DCcsuXFnyF1UxW1hd5MwlsP7wul_Qc8/s1600/ligithaboxex.jpg

2 comments:

  1. விளக்கமான தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி ஐயா.. நான் எழுதி அனுப்பியது தங்களுக்கு வந்து சேர்ந்ததா என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன் ...

    ReplyDelete