SHIRDI LIVE DARSHAN

Thursday, 11 April 2013

ஷிர்டி சாயிபாபா கோவில்

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html

Or

http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser )

                           https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiYFuHCrvpjECmFlpD3tLIctDUHxdaNaS2hm42IPaVzoQ-a6JWoRQvdM_AR_p0FmzIJ7aLMH359GsOYrDlkPhvx4J_BMxomNej30nTtFw5tXTVtzaptBD7HRWwiIqLbdaOpG2EWeUS-ntXz/s728/sai_gold_full.jpg

"பாபா.." இந்தப்பெயரை உச்சரிக்காத வட இந்தியர்கள்.. அதுவும் மராட்டிய மக்கள் இருக்க வாய்ப்பில்லை. 'பாபா..' என்ற சொல்லுக்கு, அப்பா.. தந்தை, தாத்தா இப்படி பல அர்த்தங்கள் இருக்கு. 'ஆயி.. பாபா..'ன்னுதான் இங்கே அம்மா அப்பாவை அழைக்கிறாங்க. மகான்களையும் அப்படியே அவங்க வயசை உத்தேசிச்சு, 'தந்தையே..' என்ற பொருள்பட 'பாபா..'ன்னு வடக்கர்கள் அழைக்க, நாமும் அப்படியே காப்பியடிக்க ஆரம்பிச்சுட்டோம். காலப்போக்கில் மகான்கள் என்றாலே பாபான்னு ஆகிடுச்சு.

'சாய்பாபா..' இந்த மந்திரச்சொல்லின் 'சாய்' என்ற சொல்லுக்கு, 'சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம். இவரது பிறந்த தினம் 1838-ல் செப்டம்பர் மாசம் 28ஆம் தேதின்னு உத்தேசமா சொல்லப்படுது. தன்னோட பதினாறாம் வயசுல இவர் ஷிர்டிக்கு வந்திருக்கார். மூணு வருஷத்துக்கப்புறம் திடீர்ன்னு காணாமப்போயி ஒரு வருஷத்துக்கப்புறம் திரும்பவும் வந்து ஷிர்டியில் நிரந்தரமா தங்கிட்டார். அதாவது அவர் இறந்த, 1918ஆம் வருஷம் அக்டோபர் 15ஆம் தேதிவரையிலும் .

ஷிர்டிக்கு திரும்பி வந்தப்புறம், ஒரு வேப்பமரத்தடியை தன்னுடைய வசிப்பிடமா ஆக்கிக்கிட்டு, சில சமயங்களில் அங்கியே உக்காந்து தியானம் செய்ய ஆரம்பிச்சுடுவாராம். கொஞ்ச காலத்துக்கப்புறம் அங்கிருந்த மசூதியில் தங்க ஆரம்பிச்சுருக்கார். ரொம்ப எளிமையான வாழ்க்கைமுறையை கடைப்பிடிச்ச அவர், தன்னோட மற்றும் தன்னைச்சார்ந்தவர்களோட உணவுத்தேவைகளை யாசகம் கேட்டு பூர்த்தி செஞ்சுக்கிட்டிருந்திருக்கார். பசித்தீயை அணைக்கிறதுக்காக அவர் ஏத்தி வெச்ச 'துனி'ன்னு சொல்லப்படும் தீ இன்னும் எரிஞ்சுக்கிட்டிருக்குது. அந்த சாம்பல் பிரசாதமாவும் கொடுக்கப்படுதாம்.
( துனியிலிருந்து வரும் புகை..)

பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையானவர். கஃபன் என்றழைக்கப்படும் உடம்பைச்சுற்றிய காவித்துணி, தலையை மூடியிருக்கும் இன்னொரு காவித்துணி இவ்வளவுதான் அவரோட சொத்து. இந்து முஸ்லிம் ஆகிய ரெண்டு மதங்களுக்கும் பொதுவானவர் இவர். இதுக்கு, இந்தக்கோயிலுக்கு வர்ற கூட்டமே சாட்சி. தான் தங்கியிருந்த மசூதிக்கு 'த்வாரகாமாயி'ன்னு பேர் சூட்டியிருக்கார். அதேசமயம் அந்த மசூதியில் ரெண்டு மத சம்பிரதாயங்களின்படியும் பூஜைகளும் நடக்குது. இறைவனே தலைவன், ஒருவனே தேவன் என்ற பொருள்படும் பாபாவின் திருவாய்ச்சொற்களான 'அல்லா மாலிக்'.., மற்றும் 'ஸப்கா மாலிக் ஏக் ஹை.' இங்கே ரொம்பவும் புகழ்வாய்ந்தது.

பாபா மசூதியில் தங்கியிருந்தப்ப, ஒவ்வொரு நாள் இடைவெளிவிட்டு இங்கேயிருக்கும் சாவடிக்கு தங்கறதுக்காக போவாராம். அதை நினைவுகூரும் விதமா, பால்கி எனப்படும் பல்லக்கு சேவை நடக்குது. பல்லக்கில் பாபாவின் உருவப்படத்தை வெச்சு, சமாதி மந்திரிலிருந்து த்வாரகாமாயிக்கு கொண்டுபோயிட்டு அங்கிருந்து சாவடிக்கு போவாங்க. அப்புறம் மறுபடி சமாதி மந்திருக்கு திரும்பிவந்து ஆரத்தி எடுப்பாங்க இதுக்கு ஷேஜ் ஆரத்தின்னு பேரு.
எங்கே எந்த சன்னிதி இருக்குன்னு இப்ப தெளிவா புரிஞ்சுபோச்சு..

கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கியிருக்காங்க. முதல்ல போனப்ப, கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு,  நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க. நுழைவாசலில் ஆண்களுக்கு மட்டும் தடவல் சோதனை உண்டு.

லேண்டி பாக் பக்கத்துல இருக்கிற ரெண்டாம்கேட் வழியா நுழைஞ்சோம். 'பாக்& பகீச்சா'ன்னு சொன்னா தோட்டம்ன்னு அர்த்தம். இந்த லேண்டி பாக்கும், அதுல இருக்கிற கெணறும் பாபா தன் கையாலயும், ஊழியர்களின் உதவியாலயும் உருவாக்கினது. கெணத்தை வலைபோட்டு மூடிவெச்சிருக்காங்க. அங்கே ஒண்ணுசேர்ந்தாப்ல வளந்திருக்கும் வேப்ப+அரசமரத்து அடியில பாபா ஏத்திவெச்ச அகல் இப்பவும் எரிஞ்சுக்கிட்டிருக்காம், நம்மூர்ல அணையாவிளக்குன்னு சொல்றோமில்லையா, அதேமாதிரி இதை இங்கே நந்தாதீப்ன்னு சொல்றாங்க.

தரிசனத்துக்காக வரிசையில் நின்னு நுழைஞ்சோம். அதிகம் கூட்டமில்லை, படிகள் வழியா ஏறி, இறங்கி, யூ டர்ன் எடுத்துன்னு எப்படியோ, போயிக்கிட்டே இருக்கோம். ஒவ்வொருத்தர் கையிலும் காணிக்கையா கூடைகள். அதுல பூ, மாலைகள், சரிகைச்சால்வை, சாதாரண சால்வை, அப்புறம் பேடா பாக்கெட் இல்லைன்னா உலர்பழங்கள் இல்லைன்னா கடிஷக்கர்ன்னு இங்கே சொல்லப்படும் சீனி உருண்டைகள். இந்த சால்வைகளை பாபாவுக்கு சாத்திட்டு வீட்டுல பிரசாதமா வெச்சுப்பாங்களாம்.  கடைசியில் ஒருவழியா பாபாவுக்கு முன்னாடி வந்தே வந்துட்டோம் ஜஸ்ட் பத்து நிமிஷத்துல. நீளமான ஹால். அந்தக்கோடியில் தகதகன்னு மார்பிள் மேடையில் மினுங்கும் சிம்மாசனத்தில் பாபா.


பாபாவின் சமாதி இருக்கறதால சமாதி மந்திர்ன்னு அழைக்கப்படும் இந்த இடத்தில் முரளீதரன் அதாவது நம்ம குழலூதும் கண்ணனுக்கு கோயில் அமைக்கணும்ன்னு நாக்பூரைச்சேர்ந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்ற பணக்காரர் ஏற்பாடு செஞ்சுருக்கார். சிலைகளும் ரெடியாகி வந்துட்டதாம். ஆனா, பாபா.. தானே முரளிதரனாக ரூபமெடுத்துக்காட்ட எல்லா தெய்வங்களும் ஒன்னுதான்னு தெளிஞ்ச கோபால்ராவ், அந்த இடத்தை பாபாவுக்கே கொடுத்துட்டாராம். சிலைகள் இப்போ கோயிலின் மியூசியத்தில் இருக்குன்னு கேள்வி.



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6A6SXdG2ToeIhtcq01nDN4ntFcrSVlAQEkCyMlmqiwPigXs1AOVAwAoTWOItRlS6bmSITJDFVanYZ5WIR2YSg4NdEcF_WK-XQJgEz4qyT9lgSNBSW_LGLIw569xlclPf46y1N17fy-hc/s1600/baba_samatji.jpg

மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான தங்கக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம்.  இந்த சிலை திரு. பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டதுன்னு கூகிளார் சொல்றார். சமாதி மேடையின் முன்னால் அழகான தங்கத்தால்  வேயப்பட்ட ரெண்டு தூண்கள். அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே தங்கத்தால் தகதகன்னு மின்னுது.

பக்தர்கள் கொண்டுவர்ற மாலைகளை பாபாவுக்கு போட்டுட்டு, ஏற்கனவே சாத்தியிருக்கற மாலைகளில் ஒன்னை உருவி பிரசாதமா தர்றாங்க. தடுப்புக்குள்ளாற மெதுவா நகர்ந்து முன்னாடி போய் நின்னதும், சும்மா அந்த முகத்தைப்பாத்துட்டே நின்னேன். ஒண்ணுமே நினைக்கவோ வேண்டிக்கவோ தோணலை.. அதான் நிஜம். திருப்பதி மாதிரி இங்கியும் ஜருகண்டி இருக்குது.. ஆனா, இன்னும் தள்ளிவிட ஆரம்பிக்கலை. சும்மா வாய் வார்த்தையாலயே, பஸ் கண்டக்டர் மாதிரி, 'ச்சலா.. ச்சலா... ப்பூடே ச்சலா..' அவ்ளோதான்.  தரிசனம் முடிச்சுட்டு திரும்பும்போது பாபாவை பார்த்தமாதிரிக்கே ரிவர்ஸில் நடக்கறாங்க சிலபேர். திருப்பதியிலும் இதை பாத்திருக்கேன்.

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQRC2SWhryDzaExxWCFt6CbMs4TE61wYe5pqS3gQMi4aC_bXHzIow


 
தரிசனம் முடிச்சுட்டு வெளியே வந்தப்ப லேசா இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. அதனால, ஓட்டமும் நடையுமா எல்லா சன்னிதிகளையும் வெளியில நின்னே கன்னத்துல போட்டுக்கிட்டோம். பாபா தங்கியிருந்த வேப்ப மரத்தடியிலும் ஒரு சிலைவெச்சு சின்னதா கோயில் கட்டியிருக்காங்க. அவர் வளர்த்த குதிரைக்கும் அங்கியே சமாதி இருக்குது. த்வாரகாமயியையும், மியூசியத்தையும் பார்க்கணும்ன்னு ரொம்ப ஆசை. ம்யூசியமாவது ஏற்கனவே பார்த்ததுதான்.பாபாவின் வாழ்க்கை நிகழ்வுகளையும் அவருடைய ஆடைகளையும் பார்வைக்கு வெச்சிருக்காங்க. த்வாரகா மயியை அடுத்ததடவைக்கு ரிசர்வ் செஞ்சாச்சு. அவர் உபயோகப்படுத்தின பொருட்களெல்லாம் அங்க இருக்குதாம். இந்தக்கோயிலைப்பத்தின விவரங்கள் அனைத்தும் இங்கே இருக்குது. தேவையானதை க்ளிக் செஞ்சு தெரிஞ்சுக்கோங்க.

கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்துட்டே இருக்குது. அது கோயில் முழுக்க ஒலிக்கிறமாதிரி அங்கங்க ஒலிபெருக்கிகள் வெச்சிருக்காங்க. புத்தக ஸ்டால் ஒண்ணும் பார்த்தேன். அனேகமா கோயில்களைப்பத்தினதாத்தான் இருக்கணும்.

நாலாவது கேட் கிட்ட இருந்த பிரசாத ஸ்டாலில் லட்டுபிரசாதம் வாங்கிட்டு, அங்கியே பக்கத்தில் இளநி குடிச்சுட்டு புறப்பட்டோம்
படங்கள் தந்துதவிய கூகிளாருக்கும், கூடவே வந்த உங்களுக்கும் நன்றி..

Posting From : http://amaithicchaaral.blogspot.com/

Tuesday, 9 April 2013

ஸ்ரீ அகஸ்திய மகா யாகம் - அழைப்பிதழ்

வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி , நடைபெறவிருக்கும் அகஸ்திய மகா யாகம் பற்றிய அழைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வாய்ப்பு இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சித்தர்களின் ஆசியும் அருளும் பெற வேண்டுகிறேன்...!






பவானி புஜங்கம் .mp3

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQesdaqU7SdtXErllpiKevjPL4X3kYNT-X71e974VLU-CIJo-NbPw


பவானி புஜங்கம்.MP3

http://goodfellaztv.com/wp-content/uploads/2012/09/DOWNLOAD-BUTTON.png


 

ஷடாதார பங்கேருஹாந்தர்விராஜத்
ஸுஷ ம்நாந்தராலே திதே ஜோலஸந்தீம்
ஸுதாமண்டலம் த்ராவயந்தீம் பிபந்தீம்
ஸுதாமூர்திமீடே சிதானந்த ரூபாம்

ஆறு ஆதாரங்களாகிய தாமரை மலருக்குள் ஸுஷ§ம்நா நாடியின் நடுவில் வெகுதேஜஸுடன் விளங்குகின்றவளும், சந்திரமண்டலத்தைக் கரைத்து குடிக்கின்றவளும், ஜ்ஞானானந்த ஸ்வரூபிணியாகவும், அம்ருத வடிவாயுமுள்ள என் தம்பிகையை ஸ்தோத்ரம் செய்கிறேன்.

ஜ்வலத்கோடி பாலார்க பாஸாருணாங்கீம்
ஸுலாவண்ய ச்ருங்கார சோபாபிராமாம்
மஹாபத்ம கிஞ்ஜல்க மத்யே விராஜத்
தரிகோணே நிஷண்ணாம் பஜே ஸ்ரீபாவாநீம்

ஜ்வலிக்கும் கோடி பால சூர்யர்கள் ஒளிபோல் செம்மேனியள், நல்ல அழகும், சிருங்காரமும் சேர்ந்திருப்பதால் கவர்ந்திழுக்கும் அழகி, மஹாபத்மத்தின் கிஞ்ஜல்கத்தினிடையே விளங்கும் த்ரிகோணத்தில் அமர்ந்திருக்கும் பவாநீ மாதாவை சேவிக்கிறேன்.

க்வணத்கிங்கிணீ நூபுரோத்பாஸி ரத்ன
ப்ரபாலீட லாக்ஷர்த்ர பாதாப்ஜயுக்மம்
அஜேசாச்யுதாத்யை:ஸுரை:ஸேவ்யமானம்
மஹாதேவி மன்மூர்த்நி தே பாவயா

ஒலிக்கும் தண்டை, சதங்கை முதலியவற்றிலுள்ள இரத்தின கற்களின் ஒளி ஊடுருவிய செம்பஞ்சுக் குழம்பினால் ஈரமான உனது திருவடித் தாமரைகள், பிரம்ம-விஷ்ணு-மகேச்வர்களால் சேவிக்கப்படுவதையும், ஹே மஹா தேவி!என் தலையில் இருப்பதையும் பார்த்து மகிழ்கிறேன்.

ஸுசோணாம்பராபத்த  விராஜத்
மஹாரத்ன காஞ்சீகலாபம் நிதம்பம்
ஸ்புரத்தக்ஷிணாவர்த நாபிம் ச திஸ்ரோ
வல்லீச தே ரோமராஜிம் பஜேஹம்

ஹே தேவி!செம்பட்டு உடுத்தி முடித்தபின் அதன் மேல் ரத்னம் இழைத்த ஒட்டியாணம் அணிந்த இடுப்பு, பளிச்சிடும் வலம்புரி நாபி, மூவளிகள், உரோமவரிசை இவற்றையும் மனதளவில் சேவிக்கிறேன்.

லஸத் வ்ருத்த முத்துங்க மாணிக்ய கும்போ
பமச்ரி ஸ்தன த்வந்த்வ மாம்பாம்புஜாக்ஷி
பஜே துக்தபூர்ணாபிராமம் தவேதம்
மஹாஹாரதீப்தம் ஸதா ப்ரஸ்நுதாஸ்யம்

தாமரையிதழ் கண்ணி தாயே!உனது வட்ட வடிவில் உயரமான மாணிக்ய குடம் போன்று அழகிய இரு ஸ்தனங்களையும் சேவிக்கிறேன். அவை நிரம்பிய பாற்குடமாகவே, எப்பொழுதும் கசிவதாகவே முத்து ஹாரங்கள் தொங்குவதாகவே உள்ளன.

சிரீஷ்ப்ரஸ¨ந உல்லஸத்பாஹ தண்டை:
ஜ்வலத்பாண கோதண்ட பாசாங்கு சைஸ்ச
சலத் கங்கணோதார கேயூர பூஷோ
ஜ்வலத்பி:லஸந்தீம் பஜே ஸ்ரீபவானீம்

ஸ்ரீ பவாநீ மாதாவின் நீண்ட கைகள், வாகைப்பூ சுற்றிய தாயும், அம்பு, வில், பாசம், அங்குசம் இவை ளிர்வதாயும் குலுங்கும் கை வளையல்களும், பெரிய தோளிவாளைகளும் கொண்டு தேவியை மேலும் அழகு படுத்துகின்றன. அத்தகைய பவாநீயை சேவிக்கிறேன்.

சரத்பூர்ண சந்த்ரப்ரபாபூர்ண பிம்பா
தரஸ்மேர வக்த்ராரவிந்தாம் ஸுசாந்தாம்
ஸுரத்னாவளீ ஹார தாடங்க சோபாம்
மஹாஸுப்ரஸன்னாம் பஜே ஸ்ரீபவாநீம்

ஸ்ரீ பவாநீ தேவி, மாணிக்யக் கற்கள் பதித்த ஹாரம் காதோலை இவைகளால் பளபளக்கும் சாந்தமான முகப்பொளிவுடன் இருக்கிறாள். சரத்காலத்து பூர்ண சந்திர ஒளி நிரம்பிய கோவைப்பழ உதட்டின் மேல் தவழும் புன் முறுவல் வேறு அவள் தாமரை முகத்தில் பரவியுள்ளது. அத்தகைய ஸ்ரீபவாநீயை சேவிக்கிறேன்.

ஸுநாஸாபுடம் ஸுந்தரப்ரூலலாடம்
தவெளஷ்டச்ரோயம் தானதக்ஷம் கடாக்ஷம்
லலாடோல்லஸத் கந்தகஸ்தூரி பூஷம்
ஸ்புரத்ஸ்ரீ முகாம்போஜ மீடே ஹமம்ப

ஹே தாயே!நல்ல நாசியும், அழகிய புருவம், நெற்றி இவற்றையுடையதும், உதட்டு அழகை உடையதும், வேண்டியதைத் தரும் கடாக்ஷம், நெற்றியில் சந்தனம், கஸ்தூரி திலகம் இவற்றைக் கொண்டதுமான உனது முகத்தை சேவிக்கிறேன்.

சலத்குந்தலாந்தர் ப்ரமத் ப்ருங்க ப்ருந்தம்
கனஸ்நிக் ததம்ல்ல பூஷோஜ்வலம் தே
ஸ்புரன்மௌலி மாணிக்ய பத்தேந்துரேகா
விலாஸோல்லஸத் திவ்ய மூர்தானமீடே

ஹே தாயே! உனது உச்சிப்பூ வைரத்துடன் இணைத்து கட்டிய சந்திரப்பிறையழகும் சேர்ந்துள்ள தீரிய தலையை சேவிக்கிறேன். அது கனமாயும், மழமழப்பாயுமுள்ள கொண்டையையுடையதாயும், சிதறியாடும் பொடிக் கேசத்தினிடையே மொய்க்கும் வண்டுகளால் அழகாயுமுள்ளது.

இதிஸ்ரீபவாநி ஸ்வரூபம் தவேதம்
ப்ரபஞ்சாத்பரம் சாதிஸ¨க்ஷ்மம் ப்ரஸன்னம்
ஸ்புரத்வம்ப டிம்பஸ்யமே ஹ்ருத்ஸரோஜே
ஸதா வாங்மயம் ஸர்வதே ஜோமயம்ச

ஹே தாயே பவாநி!உலகைக் கடந்த க நுண்ணிய ஆனால் ககத் தெளிவான உனது வடிவம் இந்த சிறியேனுடைய ஹ்ருதயத்தாமரையில் தோன்றட்டும். அந்த வடிவம் எப்பொழுதும் ஸரஸ்வதீமயமாயும், லக்ஷ்மீமயமாயும் இருப்பதுதானே!

கணேசாணி மாத்யாகிலை:சக்திப்ருந்தை:
வ்ருதாம் வை ஸ்புரச்சக்ரராஜோல்லஸந்தீம்
பராம் ராஜராஜேச்வரி, த்ரைபுரி!த்வாம்
சிவாங்கோபரி ஸ்தாம்சிவம் பாவயா

ஹே ராஜராஜேச்வரீ!திருபுரே!சிவமயமான கட்டில் கொண்டு பரசிவையான உன்னை தியானிக்கிறேன். , கணேசர், அணிமாதி சித்திகள், சக்திகள் ஆகியவற்றால் சூழப்பெற்று, சக்ரராஜ ஸ்ரீசக்ரத்தில் விளங்குகிறாய்.

த்வமர்க:த்வந்துஸ்த்வமகபனிஸ்த்வ மாப:
த்வமாகாச பூவாயவஸ்த்வம் மஹத்த்வம்
த்வதந்யோ ந கஸ்சித் ப்ரபஞ்சோஸ்தி ஸர்வம்
த்வமானந்தஸம் வித்ஸ்வரூபாம் பஜேவுஹம்

ஹே தாயே! நீயே சூர்யன், நீயே சந்திரன், நீதான் அக்னி, தண்ணீரும் நீயேதான். நீயே ஆகாயம், பிரதீவி, வாயு ஆகியவற்றையும், ஏன் மஹத்தும் நீதானே:நீயன்றி வேறு ப்ரபஞ்சம்தான் ஏது?ஆனந்த-ஞான-வடிவான உன்னைத்தான் நான் ஸேவிக்கிறேன்.

ச்ரேதீநாமகம்யே ஸுவேதாகமஜ்ஞா
மஹிம்நோ நஜாநந்திபாரம் தவாம்ப
ஸ்துதிம் கர்துச்சா தே த்வம் பவாநி
க்ஷமஸ்வேதமத்ர ப்ரமுக்த:கிலாஹம்

வேதங்கள்கூட நெருங்கவில்லை உன்னை. ஹே பவாநீ!நீயோ வேதங்களையும் ஆகமங்களையும் நன்கு அறிந்துள்ளாய்!உனது அருமை பெருமைகளை தெரிந்து கொண்டவரில்லை. நான் மயங்கிப் போய்தான் உன்னை ஸ்தோத்திரம் செய்ய முற்பட்டேன். இதை c பொருத்தருள் அன்னையே!

குருஸ்த்வம் சிவஸ்த்வம்ச சக்திஸ்த்வமேவ
த்வமேவாஸிமாதா பிதாச த்வமேவ
த்வமேவாஸி வித்யா த்வமேவாஸி பந்து:
கதிர்மே மதிர்தேவி ஸர்வம் த்வமேவ

ஹே தேவி!நீதான் எனக்கு குரு. சிவனும் சக்தியும் நீயே. நீயே எனக்கு தாயும் தந்தையும், நீயே எனது கல்வி. நீயேதான் எனது உறவினரும் கூட. என் மேல்நோக்கிய போக்கும், புத்தியும் எல்லாமும் நீயேதான்!

சரண்யே வரேண்யே ஸுகாருண்ய மூர்த்தே
ஹிரண்யோதராத்யை ரகண்யே ஸுபுண்யே
பவாரண்யபீதேஸ்ச மாம்பாஹி பத்ரே
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே பவாநி

நல்ல புண்யமான, மங்கமான ஹே பவாநி தேவி!நீ இரக்கம் நிரம்பி சிறந்து காப்பவள். ஹிரண்யகர்பர் முதலியோராலும் c நெருங்க முடியாதவள். உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம், என்னை ஸம்ஸார பீதியிலிருந்து காப்பாயாக.

இதீமாம் மஹத்ஸ்ரீ பவாநீ புஜங்க
ஸ்துதிம்ய:படேத் பக்தியுக்தஸ்ச தஸ்மை
ஸ்வகீயம் பதம் சாச்வதம் வேதஸாரம்
ச்ரேயம் சாஷ்டஸித்திம் பவாநீ ததாதி

இவ்வாறிந்த பெரிய ஸ்ரீபவாநீ புஜங்க ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவருக்கு ஸ்ரீ பவாநீதேவி, தனது பதவியையும் முக்தியையும் செல்வத்தையும் அஷ்டமாஸித்திகளையும் தந்து அருள்வாள்.

பவாநீ பவாநீ பவாநீ த்ரிவாரம்
உதாரம்முதா ஸர்வதா யே ஜபந்தி
நசோகோ நமோஹோ நபாபம் நபீதி:
கதாசித் கதம்சித் குதஸ்சித் ஜனாநாம்

எவரெவர், பவாநீ பவாநீ பவாநீ என்று மூன்று முறை மகிழ்ச்சியுடனும் எப்பொழுதும் உரக்கஜபம் செய்கிறார்களோ, அவரனைவருக்கும் துன்பமும், மோஹமும், அச்சமும் எங்கிருந்தும், எவ்வகையிலும், எதன் மூலமும் ஏற்படாது.

Friday, 5 April 2013

அகத்தியர் சன்மார்க்க சங்கம் , அகத்தீசன் திருவிழா , அன்னதான பெருவிழா , சித்ரா பௌர்ணமி விழா ,அகத்தியர் ஓங்கார குடில் , துறையூர்

அகத்தியர் சன்மார்க்க சங்கம் , அகத்தீசன் திருவிழா , அன்னதான பெருவிழா , சித்ரா பௌர்ணமி விழா

அகத்தியர் ஓங்கார குடில் , துறையூர்





அனைவரும் கலந்து கொண்டு அகத்தியர் மகரிஷியின் ஆசி பெறுவோம்






ஓம் அகத்தீசாய நமஹ  ! 

 ஓம் அகத்தீசாய நமஹ !!

 ஓம் அகத்தீசாய நமஹ !!!



Wednesday, 3 April 2013

ஹனூமத் பஞ்சரத்னம்.MP3- ஆதி சங்கரர் அருளியது

 


ஹனூமத் பஞ்சரத்னம்.MP3


                                           http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRIPbWzMUInXNRUcgxFV1kJO_H03QSFRikUB6B5Ilv9zgwsOr8VbA

தாகில விஷயேச்சம் ஜாதானந்தாச்ரு புலகமத்யச்சம்  
ஸீதாபதிதூதாத்யம் வாதாத்மஜமத்ய பாவயே ஹ்ருத்யம்

உலக விஷயங்களனைத்திலும் விருப்பல்லாதவர், ஆனந்தக் கண்ணீர் பெருக்கும் ரோமாஞ்தமும் கொண்டு கத்தூய்மையுள்ளவர். ஸீதாபதியான ஸ்ரீராமரின் முதல் தூதனவர், இனியவர், அப்படிப்பட்ட வாதாத்மஜரான ஹனுமனை தியானிக்கிறேன்.


தருணாருண முககமலம் கருணாரசபூர பூரிதாபாங்கம்

ஸஞ்ஜீவனமாசாஸே மஞ்ஜுளமஹிமான மஞ்ஜனாபாக்யம்

இளம் சூர்யனையத்து சிவந்த முகமுள்ளவர், கருணைததும்பும் கடைக்கண்கள் கொண்டவர், உயிர்நாடியைத் தூண்டும் பெரும் பெருமையுடையவர். அவர் அஞ்ஜனாதேவியின் அதிர்ஷ்டமான அருமைப்புதல்வர். அவரை வாழ்த்துகிறேன்.


சம்பரவைரிசராதிக மம்புஜதலவிபுலலோசனோதாரம்

கம்புகல மனிலதிஷ்டம் பிம்பஜ்வாலிதோஷ்டமேக மவலம்பே

மன்மதபாணத்தையும் விஞ்சியவர், தாமரை இதழ் போன்று மலர்ச்சிபெற்ற கண்கள் கொண்டவர். சங்கு போன்ற கழுத்தும், கொவ்வைப்பழ மெனத்திகழும் உதடும் கொண்ட வாயு புத்திரரான ஹனுமனை ஆச்ரயிக்கிறேன்.


தூரிக்ருதஸீதார்தி: ப்ரகடீக்ருத ராமவைபவஸ்பூர்தி:

தாரித தசமுக கீர்தி:புரதோ மம பாது ஹனுமதோ மூர்தி :

ஸீதையின் துன்பத்தை விலக்கியவர், ஸ்ரீராமரின் வைபவத்தை உலகறியச் செய்தவர், ராவணனின் புகழை கிழித்தெறிந்தவர், அப்படிப்பட்ட ஹனுமனின் மூர்த்தி என்னெதிரே பளிச்சிடுகிறது.


வானர நிகராத்யக்ஷம் தானவகுல குமுத ரவிகரஸத்சத்ருக்ஷம்

தீன ஜனாவன தீக்ஷம் பவனதப: பாக புஞ்ஜ மத்ராக்ஷம்

வானரக் கூட்டத்தின் தலைவர், ராக்ஷஸ குலமாகிய அல்லிப் பூக்களுக்கு சூர்ய கிரணம் போன்றவர், எளிய ஜனங்களைக் காக்கும் வ்ரதம் கொண்டவர். வாயு தேவன் செய்த தவத்தின் திறன் போன்றவர்- அந்த ஹனுமனை கணடுகொண்டேன்.


ஏதத் பவனஸுதஸ்யஸ்தோத்ரம் ய: படதி பஞ்சரத்னாக்யம்

சிரஹ நிகிலான் போகான் புக்த்வா ஸ்ரீராம பக்திபாக்பவதி


இந்த ஹனுமனின் பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்ரத்தைப் படிப்பவர் இவ்வுலகில் அனைத்து ஸுகபோகங்களையும் அனுபவித்து பின் ஸ்ரீராம பக்திக்கவராக ஆவர்.



ஹனுமத்பஞ்சரத்னம் முற்றுப்பெறுகிறது. 

 http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g13.jpg
 

Tuesday, 26 March 2013

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

http://www.boompowerofrhythm.org/wp-content/uploads/2013/02/art-of-meditation-1821.jpg

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

 " உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

 தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

 ' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

 ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSTrMrLQ9Gf5hQWcZWSiV-SKIxkYS6lYBb6V2YAkpHY_qKpXnHH

Saturday, 23 March 2013

ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3





http://www.vodburner.com/wp-content/uploads/2010/04/Download-button-small3.jpg


 ஸ்ரீமந்த்ர ராஜபத லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரம்.MP3


சகல காரியங்களும் தடையின்றி நிறைவேற தினசரி பாராயணம் செய்யவும்

 ஸ்ரீ ஈச் வர உவாச:
வ்ருத்தோத் புல்ல விசாலாக்ஷம்
விபக்ஷ க்ஷய தீக்ஷிதம்
நிநாத த்ரஸ்த விச் வாண்டம்
விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம்

 ஸர்வை ரவத்யதாம் ப்ராப்தம்
ஸபலௌகம் திதே ஸூதம்
நகாக்ரை: சகலீசக்ரே
யஸ்தம் வீரம் நமாம்யஹம்

 பதா வஷ்டபத் பாதாளம்
மூர்த்தா விஷ்ட த்ரிவி டபம்
புஜ ப்ரவிஷ்டாஷ்ட திசம்
மஹா விஷ்ணும் நமாம்யஹம்

 ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர
ஜ்வலநாதீந் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய
தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்

 ஸர்வேந்த்ரியை ரபி விநா
ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா
யோ ஜாநாதி நமாம்யாத்யம்
தமஹம் ஸர்வதோமுகம்
 

 நரவத் ஸிம்ஹவச்சைவ
யஸ்ய ரூபம் மஹாத்மந
மஹா ஸடம் மஹா தம்ஷ்ட்ரம்
தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
 

 யந்நாம ஸ்மரமணாத் பீதா
பூத வேதாள ராக்ஷஸா
ரோகாத்யாஸ்ச ப்ரணச்யந்தி
பீஷணம் தம் நமாம்யஹம்

ஸர்வோபி யம் ஸமார்ச்ரித்ய
ஸகலம் பத்ர மச்நுதே
ச்ரியா ச பத்ரயா ஜூஷ்ட
யஸ் தம் பத்ரம் நமாம்யஹம்

ஸாக்ஷõத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம்
ம்ருத்யும் சத்ரு கணாந்விதம்
பக்தாநாம் நாசயேத் யஸ்து
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

நமஸ்காரத்மகம் யஸ்மை
விதாய ஆத்ம நிவேதநம்
த்யக்தது: கோகிலாந் காமாந்
அச்நந்தம் தம் நமாமயஹம்

தாஸபூதா: ஸ்வத: ஸர்வே
ஹ்யாத்மாந பரமாத்மந
அதோஹமபி தே தாஸ
இதி மத்வா நமாம்யஹம்

சங்கரேண ஆதராத் ப்ரோக்தம்
பதாநாம் தத்வ நிர்ணயம்
த்ரிஸந்த்யம் ய: படேத் தஸ்ய
ஸ்ரீர்வித் யாயுஸ்ச வர்த்ததே

உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

மேற்கொண்ட ஒவ்வொன்றையும் தினந்தோறும் 11 முறை பாராயணம் செய்யவும்

ஸ்ரீ மதே ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ஹ்மணே நம
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நம
ஓம் பூம் பூம்யே நம
ஓம் நீம் நீளாயை நம

மேற்கண்டவற்றை குங்குமத்தால் ஒவ்வொன்றையும் 12 முறை கூறி அர்ச்சனை செய்யவும்.