SHIRDI LIVE DARSHAN

Wednesday 25 February 2015

அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு



அகத்தியர் பூஜை நேரடி ஒளிபரப்பு 
-----------------------------------------------


ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!


அன்பான அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்.அய்யா திரு.சண்முகம் அவுடையப்பா(அகஸ்தியர்வனம்,மலேசியா)அவர்களின் இல்லத்தில் தவகோலத்தில் அமர்ந்திருக்கும் மகரிஷி அகத்தியருக்கு நடைபெறும் பூஜை,அபிஷேகம்,ஹோமம் மற்றும் இனிமையான பஜனை பாடல்களை  சித்தர்களின் கருணையால் நமக்காக நேரடி ஒளிபரப்பு செய்கிறார்கள்..




நாள்: 15.01.2015
நேரம்:மலேசியா(7.00 pm )இந்தியா-(4.30pm)

மூன்று கட்டங்களாக நிகழ்ச்சி ஒளிபரப்பபடும்.
(முதலில் ஹோமம்-சிறிதுஇடைவெளி-அபிஷேகம்-இடைவெளி-பின்பு பஜனை.)

குறிப்பு:அய்யாவின் இல்லதில்லும் வாழ்விலும் அகஸ்திய பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ,விரிவான தகவல்களுக்கு வலைமனையில் சென்று பார்க்கவும்.நன்றி.ஓம் அகஸ்திய மகரிஷி நமஹ!!!(http://agathiyarvanam.blogspot.com/2013/09/miracles.html)
 ( ஒரு அன்பர் ஈமெயில் அனுப்பிய தகவல் இந்த பதிவு )


Here is the tentative schedule of broadcast of the Siddahr Pooja from Agathiyar Vanam, Malaysia.

SCHEDULE (all times are Malaysian Standard Times +8 hours ahead of Greenwich)


1 January 2015 Thursday Guru Naal @ 6.00 pm
4 January 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm
8 January 2015 Thursday Agathiyar Jayanthi & Guru Pooja @ 10.00 am
15 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 January 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
22 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm
29 January 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 February 2015 Tuesday Pormani Pooja @ 7.00 pm
5 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 February 2015 Tuesday Maha Sivarathri @ 6.00 pm, 9.00pm, 12.00 midnight, 3.00 am, & 6.00 am
18 February 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
19 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm
26 February 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 March 2015 Thursday Masi Magam Pornami @ 7.00 pm
12 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm
20 March 2015 Friday Amavasai Pooja @ 7.00 pm
26 March 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
4 April 2015 Saturday Panguni Uthiram Pornami Pooja @ 6.00 pm
9 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
18 April 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
23 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 April 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 May 2015 Sunday Chitra Pornami Pooja @ 6.00 pm
7 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
17 May 2015 Sunday Amavasai Pooja @ 6.00 pm
21 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 May 2015 Thursday Guru Naal @ 7.00 pm

2 June 2015 Tuesday Vaikasi Visagam Pornami Pooja @ 7.00 pm
4 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
16 June 2015 Tuesday Amavasai Pooja @ 7.00 pm
18 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 June 2015 Thursday Guru Naal @ 7.00 pm

1 July 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
2 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
9 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
15 July 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
16 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
23 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
30 July 2015 Thursday Guru Naal @ 7.00 pm
31 July 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

6 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
13 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
14 August 2015 Friday Adi Mavasai Pooja @ 7.00 pm
20 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 August 2015 Thursday Guru Naal @ 7.00 pm
28 August 2015 Friday Pornami Pooja @ 7.00 pm

3 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 September 2015 Saturday Amavasai Pooja @ 6.00 pm
17 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 September 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 September 2015 Sunday Pornami Pooja @ 6.00 pm

1 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
8 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
12 October 2015 Monday Mahalaya Amavasai Pooja @ 7.00 pm
15 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
22 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm
27 October 2015 Tuesday Pornami Pooja @ 7.00 pm
29 October 2015 Thursday Guru Naal @ 7.00 pm

5 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
11 November 2015 Wednesday Amavasai Pooja @ 7.00 pm
12 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
19 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 November 2015 Wednesday Pornami Pooja @ 7.00 pm
26 November 2015 Thursday Guru Naal @ 7.00 pm

3 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
10 December 2015 Thursday Amavasai Pooja @ 7.00 pm
17 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
24 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm
25 December 2015 Friday Pornami Pooja @ 6.00 pm
31 December 2015 Thursday Guru Naal @ 7.00 pm


 I shall try to stream live the puja conducted at Agathiyar Vanam every Thursdays, on Full Moon and New Moon days too. Please bookmark this page http://www.ustream.tv/channel/siddha-heartbeat and come check it out on these days. The puja usually starts at 7 pm Malaysian time, 8 hours east of Greenwich.

We shall be broadcasting in three portions, with a break in transmission in between each portion. We shall start with the Homam. There will be a break in transmission to give us time to clear up and prepare for the next stage, the Abhisegam. We shall take another break to clear up and prepare for the final stage, the Bhajans. So please stay with us. If it is necessary, please refresh the page after every break._shanAiya

பூசையின் பலன்

நிகண்டு நாடியில் இருந்து அகத்திய மா முனிவர் அருளிய ஆசி சுக்கமம் 
12.7.2010

உண்மையும் உத்தமமும் நிறைந்த பூசை
நிறைந்த இன்பம் தந்திடுமே மகத்துவப் பூசை
நிதானமானதொரு அற்புத பூசை
அறமுடனே அகிலம் காக்கும் பூசை 

அருளான மாந்தரோடு செய்வாய் நன்றாய்
நன்றன புண்ணியங்கள் காக்கும் பூசை
நற்கதியும் பலர் அடைய செய்யும் பூசை
எண்ணாத சக்தி எல்லாம் தந்திடும் பூசை 

எகாந்த நிலை அடைய வைக்கும் பூசை
வையகத்தின் மாந்தரின் அகத்தின் ஜோதி 

வலமாக்கும் முழுமதி பூசை அப்பா
ஐயத்தை நீக்கிடும் பூசைதானே 

ஆண்டவனை அடைய செய்யும் வழியும் இதுவே
வழி வகுக்கும் சேய்க்கும் மாந்தற்கும் தான்
வளத்திற்கும் அருளுக்கும் பொருளுக்கும்
அழியாத மார்கத்தில் இருந்த வண்ணம் 

அகிலத்தில் நிலை பெற்று வாழ் வழிக்கும் பூசை
பூசையால் புண்ணியங்கள் கிட்டும் பூசை
பூர்வமும் போக்கிடும் பூசை அப்பா
இசையுடனே குடும்பவளம் தந்திடும் பூசை
எவை எல்லாம் வேண்டினும் தந்திடும் பூசை
தந்திடுமே தர்மம் தவ சிந்தை
தரித்திரியம் போக்கும் பூசை யாகும்
அந்தமும் ஆதியும் இல்லா
அகிலமதில் உயர்வு தரும் பூசை அப்பா
அப்பனே ஆண்டவனே உருகும் பூசை
அறிவிழந்தோன் அறிவாளி ஆக்கும் பூசை
ஒப்பில்லா மகத்துவம் கொண்ட பூசை
உயர்வோடு நீ எடுத்து செய்வாய் அப்பா
ஒப்பில்லா மாற்றங்கள் மகத்துவமும்
உயர் நிலை பூசையாலே இருக்குதப்பா



Tuesday 17 February 2015

வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3





                         வேதஸாரசிவ ஸ்தோத்திரம் .MP3


http://www.mediafire.com/listen/wddau8iauidxug3/Vedasaara_SHIVA_STOTRAM.mp3
 
பசூனாம் பதிம் பாபநாசம் பரேசம்
கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வஸாநம் வரேண்டம்!
ஜடாஜூடமத்யே ய்புரத் காங்கவாரிம்
மஹாதேவ மேகம் ஸ்மராமி ஸ்மராரிம் !!

பாபங்களைப் போக்கும் பரமேச்வரன் பசுபதியாய், கஜேந்திரனின் தோலை ஆடையாக அணிந்தும், ஜடையின் நடுவில் கங்கையைத் தாங்கியும் இருக்கிறார். அந்த மஹாதேவன் ஒருவரையே மனதில் ஸ்மரிக்கிறேன்.

மஹேசம் ஸுரேசம் ஸுராராதிநாசம்
விபும் விச்வதாம் விபூத்யங்கபூஷம் !
விரூபாக்ஷமிந்த்வர்க வஹ்நித்ரிநேத்ரம்
ஸதானந்தமீடே ப்ரபும் பஞ்சவக்த்ரம்!!

மஹேச்வரனுக்கும் தேவர்களுக்கு ஈசனும், அஸுரர்களை விரட்டி அடித்தவரும், விபுவாயும், உலகத்திற்கு நாதனும், விபூதியைப் பூசியவரும், சந்திர, சூர்ய, அக்னி ஆகிய முக்கண்களை உடையவரும், எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பவருமான ஐந்து முகத்துடைய பரமேச்வரனை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

கிரீசம் கணேசம் கலே நீலவர்ணம்
கவேந்த்ராதிரூடம் குணாதீதரூபம் !
பவம் பாஸ்வரம் பஸ்மனா பூஷிதாங்கம்
பவானீ கலத்ரம் பஜே பஞ்ச வக்த்ரம் !!

மலையில் வசிக்கும், கணங்களுக்குத் தலைவனும், நீலகண்டரும், ரிஷபத்தில் ஏறி வருபவரும், குணங்களைக் கண்ட உருவம் கொண்டவரும், விபூதி அணிந்து விளங்குபவரும் பார்வதியை மணந்தவரும், ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட பரமேச்வரனை ஸேவிக்கிறேன்.

சிவாகாந்த சம்போ சசாங்கார்தமௌலே
மஹேசான சூலின் ஜடாஜூடதாரின் !
த்வமேகோ ஜகத்வ்யாபகோ விச்வரூப:
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ பூர்ணரூப!!

பார்வதீமனாளனும், சந்திரப் பிறைகொண்டவரும், சூலம் ஏந்தியவரும், ஜடாபாரம் தாங்கியவரும் ஆன ஹே சம்போ!நீர் ஒருவரே உலகம் அளாவிய உலகேயானவர். நீர் முழுமையானவர். ஹே!ப்ரபோ அருளவேண்டும்.

பராத்மன மேகம் ஜகத் பீஜமாத்யம்
நிரீஹம் நிராகாரமோங்காரவேத்யம்
யதோ ஜாயதே பால்பதே யேந விச்வம்
தமீசம் பஜே லீயதேயத்ர விச்வம்!!

உலகத்தின் ஒரே முதற்காரணமான பரமாத்மா அவரே:பற்று அற்ற:வடிவம் கொள்ளாத:ஒங்காரப் பொருளாக இருப்பவர் அவரே. உலகம் தோன்றுவதும், இருப்பதும், லயிப்பதும் அவரிடமே, அந்த ஈசனை ஸேவிக்கிறேன்.

நபூமிர்நசாபோ நவஹ்நி:ந வாயு:
நசாகாசமாஸ்தே ந தந்த்ரா ந நித்ரா!
நசோஷ்ணம் ந சீதம் நதேசா நவேஷோ
ந யஸ்யாஸ்தி மூர்தி:த்ரிமூர்திம்தமீடே!!

ப்ருதிவி, அப், தேஜஸ், வாயு, ஆகாசமாகிய ஐந்து பூதங்களும் அவர் அல்ல. சோம்பலோ நித்ரையோ அவரல்ல, சூடு, குளிர், தேசம், வேஷம் என்பவையும் அவரல்ல. அவருக்கு வடிவவே இல்லை. பிரஹ்ம, விஷ்ணு, மஹேச்வரரூபியான அவரை ஸ்தோத்திரம் செய்கிறேன்.

அஜம் சாச்வதம் காரணம் காரணாநாம்
சிவம் கேவலம் பாஸகம் பாஸகாநாம்!
துரீயம் தம:பாரமாத்யந்தஹீணம்
ப்ரபத்யே பரம் பாவனம் த்வைதஹீநம்!!

பிறவியில்லாத எப்பொழுதும் விளங்கும் அவர் மற்றெல்லாகாரணங்களுக்கும் முதற்காரணமாணவர். சிவமே உருவானவர். ஒளிகளுக்கெல்லாம் ஒளியானவர். அஞ்ஞான இருளுக்கு அப்பாலே ஆதியந்தமில்லாத துரீயமாயுள்ளவர். இரண்டற்ற தூயதான பரம்பொருளாம் அவரை சரணடைகிறேன்.

நமஸ்தே நமஸ்தே விபோ விச்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதானந்த மூர்தே !
நமஸ்தே நமஸ்தே தபோயோக கம்ய
நமஸ்தே நமஸ்தே ஸ்ரீதிஜ்ஞானகம்ய!!

உலகமே உருவான எங்கும் நிறைந்த உமக்கு நமஸ்காரம். ஞானம் ஆனந்தம் என்பனவற்றின் உருவான உமக்கு நமஸ்காரம். தவம் யோகம், வேத உணர்வு இவற்றின் மூலம் அடையத்தக்கவரான உமக்கு நமஸ்காரம்.

ப்ரபோ சூலபாணே விபோ விச்வ நாத
மஹாதேவ சம்போ மஹேச த்ரிநேத்ர !
சிவாகாந்த சாந்த ஸ்மராரே புராரே
த்வதன்யோ வரேண்யோ ந மான்யோ நகண்ய: !!

ப்ரபோ!விச்வநாத!மஹாதேவ, சம்போ!மஹேச!முக்கண்ணா!பார்வதீ மனாள!சாந்தரூப!மன்மதன், த்ரிபுரங்கள் ஆகியவற்றை தொலைத்தவரே!உம்மைத் தவிர சிறப்பு மிக்கவரும், போற்றத்தக்கவரும், எண்ணத்தக்கவரும் வேறு எவருமில்லை.

 சம்போ மஹேச கருணாமய சூலபாணே !
கௌரீபதே பதுபதே பசுபதே நாசின் !
காசீபதே கருணாயா ஜகதேதத் ஏக:
த்வம் ஹம்ஸி பாஸி விததாஸி மஹேச்வரோஸி !!

சம்போ. மஹேச்வர:கருணையுருவே. சூலபாணே. கௌரீபதே. பசுபதே, பசுபாசம் நீக்கிய காசீபதே. நீர் ஒருவரே இவ்வுலகைப் படைத்துக் காத்து பிறகு அழித்தும் வருகிறீர். அதனால் நீரே பெருங்கடவுள்.

த்வத்தோ ஜகத்பவதி தேவ பவ ஸ்மராரே !
த்வய்யேவ திஷ்டதி ஜகத் ம்ருட விச்வநாத !
த்வய்யேவ கச்சதிலயம் ஜகதேதத் ஈச
லிங்காத்மகே ஹர சராசர விச்வரூபின் !!

தேவனே!பவனே!மன்மதனே வென்றவனே!உம்மிடமிருந்தே இந்த உலகம் தோன்றியது. ஹேவிச்வநாத!உம்மிடமே நிலை பெறுகிறது இந்த உலகம். பின் உம்மிடமே லயமும் அடைகிறது. சராசரங்களின் வடிவினன் அன்றோ நீர்!