SHIRDI LIVE DARSHAN

Friday 7 June 2013

நரசிம்மர் பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg 









அஹோ பிலம் நாராஸிம்ஹம்
கத்வாராம ப்ரதாபவான்
நமஸ்க்ருதவா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
அஸ்தௌஷீத்கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ
விச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப
ஸ்ரீ பத்மனாப புரு÷ஷாத்தம புஷ்கராக்ஷ

நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே
தேவாஸ்ஸமஸ்தா: கலுயோகிமுக்யா
கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச
யத்பாதமூலம் ஸததம் நமந்தி
தம்நாராஸிம்ஹம் ஸரணம் கதோஸ்மி

வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ரகர்ப்பாந்
வித்யாபலேகீர்திம தீஞ்சலக்ஷ்மீம்
யஸ்யப்ரஸாதாத் ஸததம் லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரும்மா சிவஸ்த்வம் புரு÷ஷாத்தமஸ்ச
நாராயணோஸெள மருதாம் பதிஸ்ச
சந்த்ரார்க்கவாய்வக்னி ம்ருத்கணாஸ்ச
த்வமேவதம்த்வாம் ஸததம் நதோஸ்மி

ஸ்வப்னேஸபி நித்யம் ஜகதாம்த்ரயாணாம்
ஸ்ரஷ்டாசஹந்தா விபுப்ரமேய
த்ரா: தாத்வமேகஸ்த்ரிவிதோவிபிந்த
தம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி

இதிஸ்துத்வா ரகுச்ரேஷ்ட
பூஜயமாஸா தம்விபும்
புஷ்பவ்ருஷ்டி: பபாதாசு
தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி

ஸாதுஸாத்விகிதம் ப்ரோசு
தேவாரிஷி கணைஸ்ஸஹ
தேவா ஊசு
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம்
பஞ்சாம்ருதமனுத் தமம்
படந்தியேத்விஜ வரா
தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத

ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.




Monday 3 June 2013

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க .MP3


சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)




                    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க.MP3


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன்
அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 



எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே
ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து
சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------------------------------



பொல்லா வினையேன்
நின் பெரும்சீர்
 புகழுமாறு ஒன்று அறியேன் 

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
மெய்யா விமலா விடைப்பாகா

வேதங்கள் ஐயா எனவோங்கி 
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

எஞ்ஞானம் இல்லாதேன் 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே



இன்பப் பெருமானே

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்  வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 


செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்


உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே 

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
 

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 


வல்வினையேன் தன்னை 

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
 

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
 

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
 

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே


 வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே


 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
 

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


அல்லல் பிறவி அறுப்பானே 
சொல்லற்கு அரியானைச் சொல்லிய பாட்டின் பொருள் 
உணர்ந்து சொல்லித் திருவடிக்கீழ்

 சிவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
 முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்


 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்


 சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
 

 பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
 

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


 என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே



 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
 

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
 

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி  

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 


 ------------------------------------------------------------------------------------------------------

12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)






 live dharshan -  நேரடி ஒளிபரப்பு  மூலஸ்தானத்தில் இருந்து 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு  மூலஸ்தானத்தில் இருந்து


http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm



ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   மூலஸ்தானத்தில் இருந்து

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 


 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   மூலஸ்தானத்தில் இருந்து


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx


இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் - பூவேறு கோனும் புரந்தரனும்.MP3

 

திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்

                        

    பூவேறு கோனும் புரந்தரனும்.MP3

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்


பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218


அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220


சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226


நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229


உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230


பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232

கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233

பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)





 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

இளையராஜா இசையமைத்த- - திருவாசகம் - யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்- பூவார் சென்னி.MP3

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்

                          

                             பூவார் சென்னி மன்னனெம்.MP3

(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம் )

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 



புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607


அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609


புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611


பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)





 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - அச்சப்பத்து - ஆனந்தம் உறுதல் - புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்.MP3

அச்சப்பத்து - ஆனந்தம் உறுதல்

 


                                   
                புற்றிள்வாள் அரவும் அஞ்சேன்.MP3


(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம் 



புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு
அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 516 



வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்
இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்
திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன
அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 517

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்
என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற
என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா
அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 518

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்
வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்
துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு
அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 519

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்
துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்
திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு
அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 520


வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்
தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்
தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்
ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 521

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்
புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்
முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி
அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 522

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்
வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்
செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா
அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 523


மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்
நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்
செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது
அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 524

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்
நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு
வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 525


திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------

12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)




 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல் - உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த.MP3

பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்

                                   

           உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த.MP3


(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)

திருச்சிற்றம்பலம் 


உம்பர்கட்கரசே ஒழிவறநிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு
வம்பெனப் பழுத்தென் குடிமுழுதாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே
செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெருமானே
எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 536


விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே
முடைவிடா தடியேன் மூத்தறமண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து
கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே
இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 537

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 538


அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெருமானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 539


ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 540

அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டு அளவிலா ஆனந்த மருளிப்
பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பெருளே
திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெருமானே
இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 541

பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெருமானே
ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 542


அத்தனே அண்டார் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெருமானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 543

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்துநீ பாவியே னுடைய
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய
தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 544

புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென்
என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே
துன்பமே பிறப்பே இறப்போடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற்சோதி
இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே. 545


திருச்சிற்றம்பலம்

------------------------------------------------------------------------------------------------------------------

12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)


 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

 

Saturday 1 June 2013

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி .MP3 - இளையராஜா



      திருப்பொற் சுண்ணம் - ஆனந்த மனோலயம்


    (தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம்)

    திருச்சிற்றம்பலம் 

    முத்துநல் தாழம்பூ மாலைதூக்கி
    முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின்
    சக்தியும் சோமியும் பார்மகளும்
    நாமகளோடுபல்லாண்டிசைமின்
    சித்தியுங் கௌரியும் பார்ப்பதியும்
    கங்கையும் வந்து கவரிகொண்மின்
    அத்தன் ஐயாறன்அம்மானைபாடி
    ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 195


    பூவியல் வார்சடை எம்பிராற்குப்
    பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும்
    மாவின் வடுவகி ரன்ன கண்ணீர்
    வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள்
    கூவுமின் தொண்டர் புறநிலாமே
    குனிமின் தொழுமினெங் கோனெங்கூத்தன்
    தேவியுந் தானும்வந்தெம்மையாளச்
    செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 196

    சுந்தர நீறணந் தும்மெழுகித்
    தூயபொன்சிந்தி நிதிநிரப்பி
    இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
    எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின்
    அந்தார் கோன்அயன் தன்பெருமான்
    ஆழியான் நாதன்நல் வேலன்தாதை
    எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்
    கேய்ந்த பொற்சுண்ணம் இடித்துநாமே. 197

    காசணி மின்கள் உலக்கையெல்லாம்
    காம்பணி மின்கள் கறையுரலை
    நேசமுடைய அடியவர்கள்
    நின்று நிலாவுக என்றுவாழ்த்தித்
    தேசமெல்லாம் புகழ்ந் தாடுங் கச்சித்
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப்
    பாசவினையைப் பறிந்துநின்று
    பாடிப் பொற்சுண்ணம் இடித்துநாமே. 198

    அறுகெடுப்பார் அயனும்அரியும்
    அன்றிமற்றிந்திர னோடமரர்
    நறுமுது தேவர்கணங்கெளெல்லாம்
    நம்மிற்பின் பல்லதெடுக்க வொட்டோ ம்
    செறிவுடை மும்மதில் எய்தவில்லி
    திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி
    முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
    காடப்பொற்சுண்ணம் இடித்துநாமே. 199

    உலக்கை பலஒச்சு வார்பெரியர்
    உலகமெலாம்உரல் போதாதென்றே
    கலக்க அடியவர் வந்துநின்றார்
    காண உலகங்கள் போதாதென்றே
    நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
    நாண்மலர்ப் பாதங்கள் சூடந்தந்த
    மலைக்கு மருகனைப் பாடிப்பாடி மகிழந்து
    பொற்சுண்ணம் இடிந்தும்நாமே. 200

    சூடகந் தோள்வரை ஆர்ப்ப ஆர்ப்பத்
    தொண்டர் குழாமெழுந் தார்ப்ப ஆர்ப்ப
    நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
    நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்பப்
    பாடக மெல்லடி யார்க்கு மங்கை
    பங்கினன் எங்கள் பராபரனுக்கு
    ஆடக மாமலை அன்னகோவுக்
    காடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 201

    வாள்தடங்கண்மட மங்கைநல்லீர்
    வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத்
    தோள்திரு முண்டந் துதைந்திலங்கச்
    சோத்தெம்பி ரானென்று சொல்லிச்சொல்லி
    நாட்கோண்ட நாண்மலர்ந் பாதங்காட்டி
    நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை
    ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
    ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 202

    வையகம் எல்லாம் உரலதாக
    மாமேரு என்னும் உலக்கை நாட்டி
    மெய்யனும் மஞ்சள் நிறைய அட்டி
    மேதரு தென்னன் பெருந்துறையான்
    செய்ய திருவடி பாடிப்பாடிச்
    செம்பொன் உலக்கை வலக்கைபற்றி
    ஐயன் அணிதில்லை வாணனுக்கே
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 203

    முத்தணி கொங்கைகள் ஆடஆட
    மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
    சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
    செங்கயற் கண்பனி ஆடஆடப்
    பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
    பிறவி பிறரொடும் ஆடஆட
    அத்தன் கருணையொ டாடஆட
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 204


    மாடு நகைவாள் நிலாவெறிப்ப
    வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப்
    பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
    பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித்
    தேடுமின் எம்பெருமானைத்தேடி
    சித்தங் களிப்பத் திகைத்துத்தேறி
    ஆடுமின் அம்பலத் தாடினானுக்
    காடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 205

    மையமர் கண்டனை வானநாடர்
    மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை
    ஐயனை ஐயர்பிரானைநம்மை
    அகப்படுத் தாட்கொண் டருமைகாட்டும்
    பொய்யர் தம் பொய்யனை மெய்யர் மெய்யைப்
    போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள்
    பையர வல்குல் மடந்தைநல்லீர்
    பாடிப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 206

    மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
    வெண்ணகைப் பண்ணமர் மென்மொழியீர்
    என்னுடை ஆரமுதெங்களப்பன்
    எம்பெருமான் இம வான்மகட்குத்
    தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
    தமையன்எம் ஐயன் தாள்கள் பாடிப்
    பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
    பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 207

    சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
    தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
    செங்கனி வாயிதழுந்துடிப்பச்
    சேயிழை யீர் சிவலோகம் பாடிக்
    கங்கை இரைப்ப அராஇரைக்குங்
    கற்றைச் சடைமுடி யான்கழற்கே
    பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
    பொற்றிருச்சுண்ணம் இடித்தும்நாமே. 208

    ஞானக் கரும்பின் தெளியைப் பாகை
    நாடற் கரிய நலத்தை நந்தாத்
    தேனைப் பழச்சுவை ஆயினானைச்
    சித்தம் புகுந்துதித் திக்கவல்ல
    கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
    கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப்
    பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
    பாடிப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 209

    ஆவகை நாமும் வந்தன்பர்தம்போ
    டாட்செய்யும் வண்ணங்கள் பாடிவிண்மேல்
    தேவர் கனாவிலுங் கண்டறியாச்
    செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச்
    சேவகம் ஏந்திய வெல்கொடியான்
    சிவபெரு மான் புரஞ் செற்றகொற்றச்
    சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
    செம்பொன் செய்சுண்ணம் இடித்தும்நாமே. 210

    தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
    சிவபுரம் பாடித் திருச்சடைமேன்
    வானக மாமதிப் பிள்ளைபாடி
    மால்விடை பாடி வலக்கையேந்தும்
    ஊனக மாமழுச் சூலம்பாடி
    உம்பரும் இம்பரும் உய்யஅன்று
    போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
    பொற்றிச்சுண்ணம் இடித்தும்நாமே. 211

    அயன்தலை கொண்டுசெண்டாடல்பாடி
    அருக்கன் எயிறு பறித்தல்பாடி
    கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடிக்
    காலனைக்காலால் உதைத்தல்பாடி
    இயைந்தன முப்புரம் எய்தல் பாடி
    ஏழை அடியோமை ஆண்டுகொண்ட
    நயந்தனைப் பாடிநின் றாடியாடி
    நாதற்குச் சுண்ணம் இடித்தும்நாமே. 212

    வட்டமலர்க்கொன்றை மாலைபாடி
    மத்தமும்பாடி மதியம்பாடிச்
    சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
    சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக்
    கட்டிய மாசுணக்கச்சைப் பாடிக்
    கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல்
    இட்டுநின் றாடும் அரவம்பாடி
    ஈசற்குச்சுண்ணம் இடித்தும்நாமே. 213

    வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
    மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
    சோதிய மாய் இருள் ஆயினார்க்குத்
    துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப்
    பாதியு மாய் முற்றும் ஆயினார்க்குப்
    பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
    ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு
    ஆடப்பொற்சுண்ணம் இடித்தும்நாமே. 214 




    திருச்சிற்றம்பலம்

    --------------------------------------------------------------------------------------------------

    12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

    1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

    2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

    3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

    4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

    5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

    6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

    7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

    8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

    9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

    10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

    11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

    12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

     

    சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)


     live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

     http://www.somnath.org/live-darshans.aspx 


    மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



     live dharshan - நேரடி ஒளிபரப்பு 

    http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


    ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



    live dharshan - நேரடி ஒளிபரப்பு   

    http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

     
    காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




    live dharshan - நேரடி ஒளிபரப்பு   


    http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx