SHIRDI LIVE DARSHAN

Thursday 18 April 2013

தியானம் செய்ய வழி என்ன ? தென்கச்சி கோ .சுவாமிநாதன்


ஒரு சின்ன ஊர் . அங்கே ஒரு பள்ளிக்கூடம் . அதிகமாக யாரும் அங்கே படிக்க வருவதில்லை .

பெற்றோர்களுக்கும் அக்கறை இல்லை .

எதோ பள்ளிக்கூடம் என ஒன்று இருப்பதால் ,தங்கள் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள் அவ்வளவுதான் .

வகுப்புக்கு வந்த ஒரு மாணவன் மிகவும் மந்தமாக உக்கார்ந்திருந்தான் .

ஆசிரியர் அவனை கவனித்தார் .

" என்னப்பா ...   இப்படி உக்கார்ந்திருக்கே ... படிப்பில் கவனமில்லையா ...?

" ஐயா ... என் கவனமெல்லாம் எங்க வீட்டுலேயே இருக்கு !"

"அப்படி என்ன உங்க வீட்டுல இருக்கு ?"

" ஒரு பசுமாடு இருக்கு ! "

என்னப்பா சொல்றே

ஐயா .. நேத்து எங்க அப்பா புதுசா ஒரு பசுமாடு வாங்கிட்டு வந்தார் , அதை எங்க வீட்டு  வாசல்ல கட்டி  போட்டிருக்கார் .

என் நினைவெல்லாம் பசுமாடு மேலேயே இருக்கு

ஆசிரியர் கோபமடைந்தார் , யோசித்தார் ,

தம்பி ! ஒண்ணு செய்

" நான் உனக்கு ஒரு வாரம் லீவு தர்றேன்  .. நீ என்ன பண்ற ... நம்ம ஊர் எல்லையில  ஒரு மலை இருக்கே .. அங்க ஒரு குகை இருக்கு ... அதுல போய்  உக்கார்ந்துக்க ! ஒரு வாரம் பூரா மாட்டை பத்தியே நினை ... பிறகு வா ...!"

" சரி .. சார் ...! என்று சொல்லிவிட்டு அவன் புறப்பட்டான் .

ஆசிரியர் நினைத்து கொண்டார்

" ஆசை தீரும் வரையில் அவன் மாட்டை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பான் . பிறகு கொஞ்ச நேரத்திலேயே மறந்து விடுவான் "

ஒரு வாரம் கழிந்தது .

ஆசிரியர் வகுப்பறையில் நுழைந்தார் .

அந்த மாணவன் வெளியே நின்று கொண்டு இருந்தான் .

அவர் அவனிடம்

" என்னப்பா!  மாட்டை பத்தி யோசித்து முடிச்சிட்டியா ? இப்போ மாட்டை பத்தின நினைவில்லையே ?

அவன் இல்லை என  தலை ஆட்டினான் .

அப்பறம் ஏன் இன்னும் வெளியே நிக்கிறாய் ?

அவன் சொன்னான் " சார் நான் உள்ளே வரலாம்னு தான் நினைக்கிறேன் , ஆனா என் தலைல இருக்கற  கொம்பு உள்ள வர முடியாதபடி மேலே இடிச்சிகிட்டு நிக்குது ".

ஆசிரியர் திகைத்து நின்றார் . மாட்டை பற்றியே சிந்தித்து சிந்தித்து , இவன் தான் அதுவாக மாறிவிட்டதாக உணர்கின்றான் .

ஜென் கதையில தியானம் எப்படி செய்யணும் என்பதற்க்காக  தியானத்தை பற்றி இப்படி ஒரு கதையை சொல்வதுண்டு .

நாம யாரை  பத்தி அடிக்கடி  நினைத்து கொண்டு இருக்கிறோமோ , பேசி கொண்டு இருக்கிறோமோ  அவங்களோட குணாதிசயம் நமக்கு வந்துரும் , நாம அவங்களா மாறுகிறோம் .


விவேகானந்தர் கூட சொல்லுவர்

" நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் " என்று .
     
                                                        - தென்கச்சி கோ .சுவாமிநாதன்
------------------------------------------------------------------------------------------



( ஸ்ரீ சாயி சத்சரித்ரம் -- அத்தியாயம் 18 -- page no 146 -- திருமதி ராதாபாய் தேச்முக் )

ஸ்ரீ சாயி சத்சரித்ரம்  MP 3   chapter_18.mp3  26.9 MB14:51 நிமிஷத்துல இருந்து 29:20 நிமிஷம் வரைக்கும் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEinKlD1stAwwNtGfcSl79Aa818WSv5pnWcPI9rdsHAMmRUBEtZYSxyW7PwCE9kes8IZmsDnMSQdIhgcGW5MmOW6ajK9P4D3HQgCAk_k3E1oqH4-itAq3aK7BC-9rxwDk__aCoOmpxwbVdGf/s1600/golden-throne-sai-baba.jpg


ஸ்ரீ சாய் சத்ச்சரித்ரம் - அத்தியாயம் 18 - இல் 

பாபாவே தனக்கு ஏற்பட்ட தியான அனுபவத்தையும் , தான் கற்ற தியான முறையை பற்றியும் கூறுகிறார் , மேலும் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் எனவும் இந்த அத்தியாயத்தின் முடிவில் அவரே விளக்குகிறார் .

அந்த முறையில் பாபாவை தியானிப்பவர்கள் விரைவிலே பாபாவை அடைய முடியும். 
 
மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கட்டும் 

மனத்தினுடைய தொழில் எதையாவது  சிந்தனை செய்வது, ஆலோசிப்பதுஅதைச் செய்யாமல் மனதால் ஒரு கணமும் சும்மா இருக்க முடியாது . 

புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப் பற்றியே சிந்திக்கும்;

 பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கும். அப்போது பாபா நமக்குள்ளாக தோன்றி விடுவார் .

ஷிர்டி சாயிபாபா கோவில் 

ஷீரடி  சாய் பாபா  சமாதி மந்திர் தரிசனம் ஷீரடியில் இருந்து நேரடி ஒளிபரப்பு 

LIVE TV காலை  4 மணி முதல் இரவு 11.15 வரை நேரடி ஒளிபரப்பு 

https://www.shrisaibabasansthan.org/darshanflash_1.html
Or
http://www.saibabaofindia.com/shirdi_sai_baba_live_online_samadhi_mandir_darshan.htm
( To view the live darshan use "IE" Internet explorer browser or Apple's Safari browser ) 



................ ஓம் சாய் ராம் ..................

1 comment:

  1. நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய் - அருமை...

    தகவலுக்கு நன்றி...

    ReplyDelete