SHIRDI LIVE DARSHAN

Thursday 21 February 2013

ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் - மாசி மகம் - பௌர்ணமி திருவிளக்கு பூஜை அழைப்பிதழ் துறையூர் , திருச்சி மாவட்டம்

ஸ்ரீ அகத்தியர்  சன்மார்க்க சங்கம் ஓங்காரக்குடில் ( அகத்தியர்  கோவில் ) ,

துறையூர் , திருச்சி மாவட்டம்



மாசி மகம் - பௌர்ணமி திருவிளக்கு பூஜை அழைப்பிதழ் 




குடிலில் அகத்தியர் 












ஓம் அகத்தீசாய நமக 

Tuesday 19 February 2013

ஸ்ரீ சுதர்சனர் ஸ்தோத்திரம் .MP3

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj_qx6cvlBgWQTAA7LsmImX9UdG6R7uW5O5BpgQ5dz7xWU3jD_A0bLoxr-kFVYiFneyMygc_Bo5uCmrcE9t5HVkFP-L0CHLYmCdowewvxK4aBac2WxzkSbfynmn3ywLFXZPnK1Gug_XlsMb/s1600/elumalayan.jpg

ஸ்ரீ சுதர்சனர் ஸ்தோத்திரம் .MP3

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSV9EnAE_lUxzOb85ux_Fpr4p3TA2SolmvkZx5BMfpXNbmEzKo_LA

 த்வம் அக்னிர் பகவான் ஸூர்ய: த்வம் ஜ்யோதிஷாம் பதி:
த்வம் ஆபஸ்த்வ க்ஷிதிர் வ்யோம வாயுர் மாத்ரேந்தரியாணிச

 ஸுதர்சன நமஸ்துப்யம் ஸஹஸ்ராரச்யுத ப்ரிய
ஸர்வாஸ்த்ர காதித் விப்ராய ஸ்வஸ்திர் பூயா இடஸ் பதே

 த்வம் தர்ம: த்வம் அம்ருதம் ஸத்யம் த்வம் யக்ஞோ (அ) கில யக்ஞபுக்
த்வம் லோக பால: ஸர்வாத்மா த்வம் தேஜ: பௌருஷம் பரம்

 நம: ஸூநாம ஆகில தர்மஸீனவே ஹி ஆதர்ஸ்ரீலாஸூரதூம கேதவே
த்ரைலோக்ய கோபாய விசுத்த வர்ச்சஸே மநோ ஜவாயாத்புத கர்மணே க்ருணே

 த்வத் தேஜஸா தர்மமயேவ ஸம்ஹ்ருதம் நம ப்ரகாபாஸ்ச க்ருதோமஹாத்ம் நாம்
துரத்யயஸ்தே மஹிமா கிராம் பதே த்வத்ரூபம் ஏதத் ஸதஸத் பராவராம்

 யதா விஸ்ருஷ்ட த்வம் அஞ்ஜனேன வை பலம் ப்ரவிஷ்டோஜயத் தைத்ய தாநவாம்
பாஹீத்தராவாங்க்ரி ஸிரோதராணி வ்ருக்ணந்நஜஸ்ரம் ப்ரதநே விராஜஸே

 ஸ த்வம் ஜகத்ராண கலப்ரஹாணவே நிரூபிதி ஸர்வஸஹோ கதாம்ருதா
விப்ரஸ்ய ச அஸ்மத் குல தைவ ஹேதவே விதேஹி பத்ரம்தத் அநுக்ஹோ ஹித:

 யத்யஸ்தி தத்தம் இஷ்டம் வா ஸ்வதர்மோ வா ஸ்வநுஷ்டிதகுலம் நோ விப்ரனதவம்
சத்விஜோ பவது விஜ்வர: விஜ்வர:

 யதி நோ பகவான் ப்ரீதோ ஏகஸர்வகுணாச்ரய:
ஸர்வ பூதாத்ம பாவேந த்விஜோ பவது விஜ்வர:


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSUOI72LK5V58_WxNBvV32R6q475_hymP11Mwa9243umLXnmABd

Friday 15 February 2013

வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்.MP3

http://www.vallalar.net/vallalar/images/ramalinga_adigalar.jpg
அருட்பெருஞ்ஜோதி அகவல்.MP3 Part 1 

55.6MB

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTGsd8RB4O8pz3EV6o3DD2kVy4XZ5LXmCoU1zsHrRoXSpNp-AN4

அருட்பெருஞ்ஜோதி அகவல்.MP3 part 2

47.79 MB

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTGsd8RB4O8pz3EV6o3DD2kVy4XZ5LXmCoU1zsHrRoXSpNp-AN4

http://imgv2-1.scribdassets.com/img/word_document/17194813/255x300/e145335f4f/1342027313
திருச்சிற்றம்பலம்

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ் ஜோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்

ஆகநின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ் ஜோதி
ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய்
ஆனலின் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி

உரைமனம் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசுசெய் தோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்திஎன்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
ஏறா நிலைமிசை ஏற்றிஎன் தனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ் ஜோதி
ஐயமும் திரிபும் அறுத்தென துடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

ஒன்றென இரண்டென ஒன்றிரண் டெனஇவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ் ஜோதி
ஓதா துணர்ந்திட ஒளிஅளித் தெனக்கே
ஆதாரம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
ஒளவியம் ஆதிஓர் ஆறுந் தவிர்த்தபேர்

அவ்வியல் வழுத்தம் அருட்பெருஞ் ஜோதி
திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும்ஓர்
அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ் ஜோதி
சுத்தசன் மார்க்கச் சுகத்தனி வெளிஎனும்
அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

சுத்தமெய்ஞ் ஞானச் சுகோதய வெளிஎனும்
அத்துவி தச்சபை அருட்பெருஞ் ஜோதி
தூய கலாந்தச் சுகந்தரு வெளிஎனும்
ஆயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஞானயோ காந்த நடத்திரு வெளிஎனும்

ஆனியில் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
விமலபோ தாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்
அமலசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்
அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சுத்தவே தாந்தத் துரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுத்தசித் தாந்தத் சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்

அகர நிலைப்பதி அருட்பெருஞ் ஜோதி
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி
சச்சிதா னந்தத் தனிப்பர வெளிஎனும்
அச்சியல் அம்பலத் தருட்பெருஞ் ஜோதி

சாகாக் கலைநிலை தழைத்திடு வெளிஎனும்
ஆகா யத்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
காரண காரியம் காட்டிடு வெளிஎனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
ஏகம் அனேகம் எனப்பகர் வெளிஎனும்

ஆகமச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
வேதாக மங்களின் விளைவுகட் கெல்லாம்
ஆதார மாம்சபை அருட்பெருஞ் ஜோதி
என்றா தியசுடர்க் கியனிலை ஆய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையுந் திருச்சபை அருட்பெருஞ் ஜோதி
முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுட ராம்சபை அருட்பெருஞ் ஜோதி
துரியமும் கடந்த சுகபூ ரணந்தரும்

அரியசிற் றம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
இயற்கைஉண் மையதாய் இயற்கைஇன் பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி

சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
சுட்டுதற் கரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
நவந்தவிர் நிலைகளும் நண்ணும்ஓர் நிலையாய்

அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
உபயபக் கங்களும் ஒன்றெனக் காட்டிய
அபயசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாம்சபை அருட்பெருஞ் ஜோதி

மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
அனாதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
ஓதிநின் றுணர்ந்துணர்தற் கரிதாம்
ஆதிசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
வாரமும் அழியா வரமும் தரும்திரு

ஆரமு தாம்சபை அருட்பெருஞ் ஜோதி
இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
அழியாச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
கற்பம் பலபல கழியினும் அழிவுறா
அற்புதம் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி

எனைத்தும் துன்பிலா இயல்அளித் தெண்ணிய
அனைத்தும் தரும்சபை அருட்பெருஞ் ஜோதி
பாணிப் பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
ஆணிப்பொன் னம்பலத் தருட்பெருஞ் ஜோதி
எம்பலம் எனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி

அம்பலத் தாடல்செய் அருட்பெருஞ் ஜோதி
தம்பர ஞானசி தம்பரம் எனும்ஓர்
அம்பலத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ் ஜோதி

வாடுதல் நீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல அருட்பெருஞ் ஜோதி
நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
ஆடகப் பொதுஒளிர் அருட்பெருஞ் ஜோதி
கற்பனை முழுவதும் கடந்தொளி தரும்ஓர்

அற்புதச் சிற்சபை அருட்பெருஞ் ஜோதி
ஈன்றநற் றாயினும் இனிய பெருந்தய
வானறசிற் சபையில் அருட்பெருஞ் ஜோதி
இன்புறு நான்உளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை அருட்பெருஞ் ஜோதி

எம்மையும் என்னைவிட் டிறையும் பிரியா
தம்மை அப்பனுமாம் அருட்பெருஞ் ஜோதி
பிரிவுற் றறியாப் பெரும்பொரு ளாய்என்
அறிவுக் கறிவாம் அருட்பெருஞ் ஜோதி
சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதிஅ னாதியாம் அருட்பெருஞ் ஜோதி
தனுகர ணாதிகள் தாங்கடந் தறியும்ஓர்
அனுபவம் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
உனும்உணர் வுணர்வாய் உணர்வெலாம் கடந்த
அனுபவா தீத அருட்பெருஞ் ஜோதி

பொதுவுணர்வு வுணரும் போதலால் பிரித்தே
அதுஎனில் தோன்றா அருட்பெருஞ் ஜோதி
உளவினில் அறிந்தால் ஒழியமற் றளக்கின்
அளவினில் அளவா அருட்பெருஞ் ஜோதி
என்னையும் பணிகொண் டிறவா வரமளித்

தன்னையில் உவந்த அருட்பெருஞ் ஜோதி
ஓதிஓ தாமல் உறஎனக் களித்த
ஆதிஈ றில்லா அருட்பெருஞ் ஜோதி
படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா
அடிமுடி எனும்ஓர் அருட்பெருஞ் ஜோதி

பவனத்தின் அண்டப் பரப்பின்எங் கெங்கும்
அவனுக் கவனாம் அருட்பெருஞ் ஜோதி
திவள்உற்ற அண்டத் திரளின்எங் கெங்கும்
அவளுக் கவளாம் அருட்பெருஞ் ஜோதி
மதன்உற்ற அண்ட வரைப்பின்எங் கெங்கும்

அதனுக் கதுவாம் அருட்பெருஞ் ஜோதி
எப்பாலு மாய்வெளி எல்லாம் கடந்துமேல்
அப்பாலும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
வல்லதாய் எல்லாம் ஆகிஎல் லாமும்
அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி

எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய் கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
றாங்குற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்

தத்திசை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
சக்திகள் எல்லாம் தழைக்கஎங் கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
முந்துறும் ஐந்தொழில் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ் ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகஎன்

றன்புடன் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
இறவா வரமளித் தென்னைமேல் ஏற்றிய
அறவாழி யாம்தனி அருட்பெருஞ் ஜோதி
நான்அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ் ஜோதி

எண்ணிய எண்ணியாங் கியற்றுக என்றெனை
அண்ணிஉள் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீஅது
ஆயினை என்றருள் அருட்பெருஞ் ஜோதி
எண்ணிற் செழுந்தேன் இனியதெள் ளமுதென

அண்ணித் தினிக்கும் அருட்பெருஞ் ஜோதி
சிந்தையில் துன்பொழி சிவம்பெறு கெனகத்தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
எங்கெங் கிருந்துயிர் ஏதேது வேண்டினும்
அங்கங் கிருந்தருள் அருட்பெருஞ் ஜோதி

சகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகம்புறம் முற்றுமாம் அருட்பெருஞ் ஜோதி
சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்

அபரமும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி
மந்தணம் இதுஎன மறுவிலா மதியால்
அந்தணர் வழுத்தும் அருட்பெருஞ் ஜோதி
எம்புயக் கனிஎன எண்ணுவார் இதய
அம்புயத் தமர்ந்த அருட்பெருஞ் ஜோதி

செடிஅறுத் தேதிட தேகமும் போகமும்
அடியருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி
துன்பறுத் தொருசிவ துரிய சுகந்தனை
அன்பருக் கேதரும் அருட்பெருஞ் ஜோதி
பொதுஅது சிறப்பது புதியது பயைழதென்

றதுஅது வாய்த்திகழ் அருட்பெருஞ் ஜோதி
சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை
ஆதனத் தோங்கிய அருட்பெருஞ் ஜோதி
ஓமயத் திருவுரு உவப்புடன் அளித்தெனக்
காமயத் தடைதவிர் அருட்பெருஞ் ஜோதி

எப்படி எண்ணிய தென்கருத் திங்கெனக்
கப்படி அருளிய அருட்பெருஞ் ஜோதி
எத்தகை விழைந்தன என்மனம் இங்கெனக்
கத்தகை அருளிய அருட்பெருஞ் ஜோதி
இங்குறத் திரிந்துளம் இளையா வகைஎனக்

கங்கையில் கனியாம் அருட்பெருஞ் ஜோதி
பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளிஎன்
ஆருயிர்க் குள்ஒளிர் அருட்பெருஞ் ஜோதி
தேவியுற் றொளிர்தரு திருவுரு உடன்என
தாவியில் கலந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி

எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்
அவ்வழி எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்
ஐயறி வளித்த அருட்பெருஞ் ஜோதி
சாமா றனைத்தும் தவிர்த்திங் கெனக்கே

ஆமா றருளிய அருட்பெருஞ் ஜோதி
சத்திய மாம்சிவ சத்தியை ஈந்தெனக்
கத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ் ஜோதி
சாவா நிலைஇது தந்தனம் உனக்கே
ஆவா எனஅருள் அருட்பெருஞ் ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி
மயர்ந்திடேல் சிறிதும் மனந்தளர்ந் தஞ்சேல்
அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்

ஆசறத் தெரித்த அருட்பெருஞ் ஜோதி
காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்
ஆட்டியல் புரியும் அருட்பெருஞ் ஜோதி
எங்குலம் எம்மினம் என்பதொண் ணூற்றா
றங்குலம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

எம்மதம் எம்இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறியல் எனஉரை அருட்பெருஞ் ஜோதி
எண்தர முடியா திலங்கிய பற்பல

அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ் ஜோதி
சாருயிர்க் கெல்லாம் தாரக மாம்பரை
ஆருயிர்க் குயிராம் அருட்பெருஞ் ஜோதி
வாழிநீ டூழி வாழிஎன் றோங்குபேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ் ஜோதி

மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திகை
ஆய்ந்திடென் றுரைத்த அருட்பெருஞ் ஜோதி
எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுகஎன்
றச்சம் தவிர்த்தஎன் அருட்பெருஞ் ஜோதி
நீடுக நீயே நீள்உல கனைத்தும்நின்

றாடுக என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னியாங் கெய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

கருமசித் திகளின் கலைபல கோடியம்
அரசுற எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
யோகசித் திகழ்வகை உறுபல கோடியும்
ஆகஎன் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்

ஆனியின் றெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
அடைவதென் றருளிய அருட்பெருஞ் ஜோதி
முத்திஎன் பதுநிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றஎன் அருட்பெருஞ் ஜோதி

சித்திஎன் பதுநிலை சேர்ந்த அனுபவம்
அத்திறம் என்றஎன் அருட்பெருஞ் ஜோதி
ஏகசிற் சித்தியே இயல்உற அனேகம்
ஆகிய தென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
இன்பசித் தியின் இயல் ஏகம்அ னேகம்

அன்பருக் கென்றஎன் அருட்பெருஞ் ஜோதி
எட்டிரண் டென்பன இயலும்முற் படிஎன்
அட்டநின் றருளிய அருட்பெருஞ் ஜோதி
இப்படி கண்டனை இனிஉறு படிஎலாம்
அப்படி யேஎனும் அருட்பெருஞ் ஜோதி

படிமுடி கடந்தனை பார்இது பார்என
அடிமுடி காட்டிய அருட்பெருஞ் ஜோதி
சோதியுட் சோதியின் சொரூபமே அந்தம்
ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி
இந்தசிற் ஜோதியின் இயல்உரு ஆதி

அந்தம்என் றருளிய அருட்பெருஞ் ஜோதி
ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதிஎன் றருளிய அருட்பெருஞ் ஜோதி
நல்அமு தென்ஒரு நாஉளம் காட்டிஎன்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

கற்பகம் என்உளங் கைதனில் கொடுத்தே
அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
கதிர்நலம் என்இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
அருள்ஒளி என்தனி அறிவினில் விரித்தே

அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ் ஜோதி
பரைஒளி என்மனப் பதியினில் விரித்தே
அரசது இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி
வல்லப சத்திகள் வலைஎலாம் அளித்தென
தல்லலை நீக்கிய அருட்பெருஞ் ஜோதி

ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
ஆரமு தெனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சூரிய சந்திர சோதியுட் சோதிஎன்
றாரியர் புகழ்தரும் அருட்பெருஞ் ஜோதி
பிறிவே தினிஉனைப் பிடித்தனம் உனக்குநம்

அறிவே வடிவெனும் அருட்பெருஞ் ஜோதி
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ் ஜோதி
மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
ஆண்டுகொண் டருளிய அருட்பெருஞ் ஜோதி

பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
தற்றுமும் நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ் ஜோதி
வாய்தற் குரித்தெனும் மறைஆ கமங்களால்

ஆய்தற் கரிய அருட்பெருஞ் ஜோதி
எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
அல்லா திலைஎனும் அருட்பெருஞ் ஜோதி
நவைஇலா உளத்தில் நாடிய நாடிய
அவைஎலாம் அளிக்கும் அருட்பெருஞ் ஜோதி

கூற்றுதைத் தென்பால் குற்றமும் குணங்கொண்
டாற்றல்மிக் களித்த அருட்பெருஞ் ஜோதி
நன்றறி வறியா நாயினேன் தனையும்
அன்றுவந் தாண்ட அருட்பெருஞ் ஜோதி
நாயினும் கடையேன் ஈயினும்இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி
தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்
ஆத்திரம் அளித்த அருட்பெருஞ் ஜோதி
எச்சோ தனைகளும் இயற்றா தெனக்கே
அச்சோ என்றருள் அருட்பெருஞ் ஜோதி

ஏறா நிலைநடு ஏற்றிஎன் றனைஈண்
டாறாறு கடத்திய அருட்பெருஞ் ஜோதி
தாபத் துயரம் தவிர்த்துல குறும்எலா
ஆபத்து நீக்கிய அருட்பெருஞ் ஜோதி
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே

அருட்குரு வாகிய அருட்பெருஞ் ஜோதி
உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ் ஜோதி
இருளறுத் தென்உளத் தெண்ணியாங் கருளி
அருளமு தளித்த அருட்பெருஞ் ஜோதி

தெருள்நிலை இதுவெனத் தெருட்டிஎன் உளத்திருந்
தருள்நிலை காட்டிய அருட்பெருஞ் ஜோதி
பொருட்பதம் எல்லாம் புரிந்துமேல் ஓங்கிய
அருட்பதம் அளித்த அருட்பெருஞ் ஜோதி
உருள்சக டாகிய உளஞ்சலி யாவகை

அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ் ஜோதி
வெருள்மன மாயை வினைஇருள் நீக்கிஉள்
அருள்விளக் கேற்றிய அருட்பெருஞ் ஜோதி
சுருள்விரி வுடைமனச் சுழல்எலாம் அறுத்தே
அருள்ஒளி நிரப்பிய அருட்பெருஞ் ஜோதி

விருப்போ டிகல்உறு வெறுப்பும் தவிர்த்தே
அருட்பே றளித்த அருட்பெருஞ் ஜோதி
அருட்பேர் தரித்துல கனைத்தும் மலர்ந்திட
அருட்சீர் அளித்த அருட்பெருஞ் ஜோதி
உலகெலாம் பரவஎன் னுள்ளத் திருந்தே

அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ் ஜோதி
விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
அண்ணி நிறைந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
அண்ணி வயங்கும் அருட்பெருஞ் ஜோதி

காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி
காற்றுறு காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
ஆற்ற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்

அனலுற விளங்கும் அருட்பெருஞ் ஜோதி
அனலுறும் அனலாய் அனல்நிலை அனலாய்
அனலுற வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புனலினுள் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
அனைஎன வயங்கும் அருட்பெருஞ் ஜோதி

புனலுறு புனலாய்ப் புனல்நிலைப் புனலாய்
அனைஎனப் பெருகும் அருட்பெருஞ் ஜோதி
புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
அவைதர வயங்கும் அருட்பெருஞ் ஜோதி
புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்

அவைகொள விரிந்த அருட்பெருஞ் ஜோதி
விண்ணிலை சிவத்தின் வியனிலை அளவி
அண்ணுற அமைந்த அருட்பெருஞ் ஜோதி
வளிநிலைச் சத்தியின் வளர்நிலை அளவி
அளிஉற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

நெருப்பது நிலைநடு நிலைஎலாம் அளவி
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புவிநிலைச் சுத்தமாம் பொற்பதி அளவி

அவையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் திண்மையை வகுத்ததிற் கிடக்கை
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பொன்மை வகுத்ததில் ஐம்மையை
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணினில் ஐம்பூ வகுத்ததில் ஐந்திரம்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் நாற்றம் வகுத்தது பல்வகை
அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் பற்பல வகைகரு நிலஇயல்

அண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணினில் ஐந்தியல் வகுத்ததில் பல்பயன்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிடை அடிநிலை வகுத்ததில் பல்நிலை
அண்னுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணில்ஐந் தைந்து வகையும் கலந்துகொண்
டண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணியல் சத்திகள் மண்செயல் ஜோதி
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவர
அண்கொள அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிணிற் பொருள்பல வகைவிரி வெவ்வே

றண்ணுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மண்ணிடைப் பக்குவம் வகுத்ததில் பயன்பல
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதிற்பல

ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழ்உறு திறஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரினில் சுவைநிலை நிறைத்ததில் பல்வகை
ஆருறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல
ஆருற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை நான்கியல் நிலவுவித் ததிற்பல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை அடிநடு நிலைஉற வகுத்தனல்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை ஒளிஇயல் நிகழ்பல குணஇயல்
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
ஆர்தர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை
ஆர்தரப்  புரிந்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீரிடை நிலைபல நிலைஉறு செயல்பல

ஆர்கொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்உறு பக்குவ நிறைவுறு பயன்பல
ஆருற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்இயல் பலபல நிறைத்ததிற் பிறவும்
ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

தீயினில் சூட்டியல் சேர்தரச் செலவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் வெண்மைத் திகழ்இயல் பலவாய்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பூஎலாம் திகழுறு திறல்எலாம்

ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை ஒளியே திகழுற அமைத்ததில்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை அருநிலை திருநிலை கருநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல

ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்
ஆயுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயினில் பக்குவம் சேர்குணம் இயற்குணம்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
ஆயுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தீஇயல் பலபல செறித்ததில் பலவும்
ஆயுறப் புரிந்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடை அசைஇயல் கலைஇயல் உயிரியல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைப் பூவியல் கருதுறு திறஇயல்
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல

ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை ஈரியல் காட்டி அதிற்பல
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றினில் இடைநடு கடைநடு அகப்புறம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்திகள் கணக்கில் உலப்பில

ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய
ஆற்றுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றிடைச் செயல்எலாம் கருதிய பயன்எலாம்

ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் பக்குவக் கதிஎலாம் விளைவித்
தாற்றிலின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காற்றினில் காலம் கருதுறு வகைஎலாம்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பூஎலாம் வியப்புறு திறன்எலாம்

அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் ஒலிநிறை வியனிலை அனைத்தும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
அளிகொள வகுத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
அளிபெற விளக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்
அளியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை ஒன்றே விரித்ததில் பற்பல

அளிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடைப் பலவே விரித்ததில் பற்பல
அளிதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வெளியிடை உயிரியல் வித்தியல் சித்தியல்
அளிபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

வெளியின் அனைத்தையும் விரித்ததில் பிறவும்
அளியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
புறநடு வொடுகடை புணர்ப்பித் தொருமுதல்
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறத்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை

அறம்பெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
அகப்பட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி

கருதக நடுவொடு கடைஅணைந் தகக்கடை
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தணிஅக நடுவொடு தலைஅணைந் தகக்கடை
அணியுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு புறக்கடை அணைந்தகப் புறமுதல்

அகமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு புறத்தலை அணைந்தகப் புறக்கடை
அகலிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகநடு அதனால் அகப்புற நடுவை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்புற நடுவால் அணிபுற நடுவை
அகப்பட அமைத்த அருட்பெருஞ் ஜோதி
புறநடு அதனால் புறப்புற நடுவை
அறமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புகலரும் அகண்ட பூரண நடுவால்

அகநடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புறம்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
அறக்கணம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
அகத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகக்கடை முதல்புணர்ப் பதனால் அகக்கணம்
அகத்திடை  வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்

ஆனற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
அருப்பிட வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
அனல்மேல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பகுதிவான் வெளியில் படர்ந்தமாபூத
அகல்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி

அயவெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
அயலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
அலர்வெளி வகுத்த அருட்பெருஞ் ஜோதி

சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
அத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரவெளி அதனைப் பரம்பா வெளியில்
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரம்பர வெளியைப் பராபர வெளியில்

அரந்தெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
அராவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
அனமுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காலமே முதலிய கருவிகள் கலைவெளி

ஆலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
அரசுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
இவ்வெளி எல்லாம் இலங்கஅண் டங்கள்
அவ்வயின் அமைத்த அருட்பெருஞ் ஜோதி

ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்
ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சிருட்டித் தலைவரைச் சிருட்டிஅண் டங்களை
அருட்டிறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
காவல் செய் தலைவரைக் காவல்அண் டங்களை

ஆவகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அழித்தல்செய் தலைவரை அவரண் டங்களை
அழுக்கற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
மறைத்திடு தலைவரை மற்றும்அண் டங்களை
அறத்தொடு வகுத்த அருட்பெருஞ் ஜோதி

தெளிவுசெய் தலைவரைத் திகழும்அண் டங்களை
அளிபெற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
விந்துவாம் சத்தியை விந்தின்அண் டங்களை
அந்திறல் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஓங்கார சத்திகள் உற்றஅண் டங்களை

ஆங்காக வமைத்த அருட்பெருஞ் ஜோதி
சத்தத் தலைவரைச் சாற்றும்அண் டங்களை
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நாதமாம் பிரமமும் நாதஅண் டங்களும்
ஆதரம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பகர்பரா சத்தியைப் பதியும்அண் டங்களை
அகமற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
அரசுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
எண்ணில்பல் சத்தியை எண்ணில்அண் டங்களை

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அளவில்பல் சத்தரை அளவில்அண் டங்களை
அளவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உயிர்வகை அண்டம் உலப்பில் எண்ணில
அயர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

களவில கடல்வகை கங்கில கரைஇல
அளவில வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கடலவை அனைத்துங் கரைஇன்றி நிலையுற
அடல்அனல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்

அடலுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கடலிடைப் பல்வளங் கணிதத்திற் பல்உயிர்
அடலுற வகுத்த  அருட்பெருஞ் ஜோதி
மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்உயிர்
அலைவற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
அன்றற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பத்திடை ஆயிரம் பகரதில் கோடி
அத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
நூற்றிடை இலக்கம் நுவலதில் அனந்தம்

ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
கோடியில் அனந்த கோடிபல் கோடி
ஆடுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய்
அத்தகை அமைத்த அருட்பெருஞ் ஜோதி

விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க
அளவுசெய் தமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
அத்திறல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்திடை முளையும் முளையிடை விளைவும்

அத்தக அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
அத்திறம் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
அளையுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

முளையதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்

அதிர்வற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றென வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய
அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி

உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறனுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பகையினிற் பகையும் பகையினில் உறவும்
அகைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்

ஆதியும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்
அணைவுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உருவதின் உருவும் உருவினுள் உருவும்
அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

அருவினுள் அருவும் அருவதில் அருவும்
அருளியல் அமைத்த அருட்பெருஞ் ஜோதி
கரணமும் இடமும் கலைமுதல் அணையுமோர்
அரணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உருவதில் அருவும் அருவதில் உருவும்

அருளுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
அருணிலை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
அண்மையின் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
மெண்மையில் மென்மையும் மென்மையில் வண்மையும்

அன்மையற் றமைத்த அருட்பெருஞ் ஜோதி
அடியினுள் அடியும் அடியிடை அடியும்
அடியுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்
அடர்வுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

முடியினுள் முடியும் முடியினில் முடியும்
அடர்தர அமைத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்பூ அகவுறுப் பாக்க அதற்கவை
அகத்தே வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட

அறத்துடன் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அகப்புறப் பூஅகப் புறவுறுப் பியற்றிட
அகத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற
அறத்திடை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ் ஜோதி
ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல

அசலற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
அறிவொரு வகைமுதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ் ஜோதி
வெவ்வே றியலொடு வெவ்வேறு பயன்உற
அவ்வா றமைத்த அருட்பெருஞ் ஜோதி

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணியல் ஆணும் ஆணியல் பெண்ணும்
அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி

பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
பெண்ணியல் மனமும் ஆணியல் அறிவும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
தனித்தனி வடிவினும் தக்கஆண் பெண்இயல்

அனைத்துற வகுத்த அருட்பெருஞ் ஜோதி
உனற்கரும் உயிருள உடலுள உலகுள
அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ் ஜோதி
ஓவுறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்
ஆவகை வகுத்த அருட்பெருஞ் ஜோதி

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐபெற அமைத்த அருட்பெருஞ் ஜோதி
தாய்கருப் பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
முட்டைவாய்ப் பயிலும் முழுஉயிர்த் திரள்களை

அட்டமே காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
வேர்வுற உதித்த மிகும்உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

உடலுறு பிணியால் உயிர்உடல் கெடாவகை
அடலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
சிசுமுதல் பருவச் செயல்களின் உயிர்களை
அசைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
உயிருறும் உடலையும் உடலுறும் உயிரையும்

அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
முச்சுட ராதியால் எச்சக வுயிரையும்
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

வான்முகில் சத்தியால் மழைபொழி வித்துயிர்
ஆனறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்
தன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
எண்இயல் சத்தியால் எல்லா உலகினும்

அண்உயிர் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
அண்டப் புறப்புற அமுதம் பொழிந்துயிர்
அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்
தாவகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

அகப்புற அமுதளித் தைவரா திகளை
அகப்படக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
தரும்அக அமுதால் சத்திசத் தர்களை
அருளினிற் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
காலமும் நியதியும் காட்டிஎவ் வுயிரையும்

ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
விச்சையை இச்சையை விளைவித் துயிர்களை
அச்சறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
போகமும் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
ஆகமுட் காக்கும் அருட்பெருஞ் ஜோதி

கலைஅறி வளித்துக் களிப்பினில் உயிரெலாம்
அலைவறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
விடய நிகழ்ச்சியால் மிகும்உயிர் அனைத்தையும்
அடைவுறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை

அன்புறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
கரணேந்தி யத்தால் களிப்புற உயிர்களை
அரணேர்ந் தளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கத்தகை அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி

எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்
கப்படி அளித்தருள் அருட்பெருஞ் ஜோதி
ஏங்கா துயிர்த்திரள் எங்கெங் கிருந்தன
ஆங்காங் களித்தருள் அருட்பெருஞ் ஜோதி
சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை

அல்லலில் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்உயிர்க் கிருமையின்
அத்தகை காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
வாய்ந்திடும் சுத்த வகைஉயிர்க் கொருமையின்
ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி

எவைஎலாம் எவையெலாம் ஈண்டின ஈண்டின
அவைஎலாம் காத்தருள் அருட்பெருஞ் ஜோதி
அண்டத் துரிசையும் அகிலத் துரிசையும்
அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
உயிருறு மாயையின் உறுவிரி வனைத்தும்
அயிரற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
உயிர்உறும் இருவினை உறுவிரி வனைத்தும்
அயர்வற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

காமப் புடைப்புயிர் கண்தொட ராவகை
ஆமற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்
அங்கற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்

கதம்பெற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்
அடர்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

நால்வயிற் றுரிசு நண்ணுயிர் ஆதியில்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
ஆலற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்

ஆவிடத் தடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி

சுத்தமா நிலையில் சூழ்வுறு விரிவை
அத்தகை அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பேருறு நீலப் பெருந்திரை அதனால்

ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

பொன்மைத் திரையால் பொருளுறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
கலப்புத் திரையால் கருதனு பவங்களை

அலப்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
அடர்புற மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி
தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

திரைமறைப் பெல்லாம் தீர்த்தாங் காங்கே
அரைசுறக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி
தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளின்
ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ் ஜோதி
சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளை

அத்தகை காட்டும் அருட்பெருஞ் ஜோதி
எனைத்தா ணவமுதல் எல்லாந் தவிர்த்தே
அனுக்கிர கம்புரி அருட்பெருஞ் ஜோதி
விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

சொருப மறைப்பெலாம் தொலைப்பித் துயிர்களை
அருளினில் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே

அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி

சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
அத்தகை தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை
அடைப்புறப் படைக்கம் அருட்பெருஞ் ஜோதி
காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை










ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ் ஜோதி
அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்
அடப்பற அடக்கும் அருட்பெருஞ் ஜோதி
மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை
அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ் ஜோதி

தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
அருட்டிறம் தெருட்டும் அருட்பெருஞ் ஜோதி
ஐந்தொழி லாதிசெய் ஐவரா திகளை
ஐந்தொழி லாதிசெய் அருட்பெருஞ் ஜோதி
இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்

அறந்தலை அளித்த அருட்பெருஞ் ஜோதி
செத்தவர் எல்லாம் சிரித்தாங் கெழுதிறல்
அத்தகை காட்டிய அருட்பெருஞ் ஜோதி
இறந்தவர் எழுகஎன் றெண்ணியாங் கெழுப்பிட
அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி

செத்தவர் எழுகெனச் செப்பியாங் கெழுப்பிட
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ் ஜோதி
சித்தெலாம் வல்ல திறல்அளித் தெனக்கே
அத்தன்என் றோங்கும் அருட்பெருஞ் ஜோதி
ஒன்றதி ரண்டது ஒன்றின்இ ரண்டது

ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
ஒன்றல இரண்டல ஒன்றின்இ ரண்டல
ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே

களங்கநீத் துலகங் களிப்புற மெய்ந்நெறி
விளங்கஎன் உள்ளே விளங்குமெய்ப் பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமைமெய்ப் பொருளே
எழுநிலை மிசையே இன்புரு வாகி

வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
ஏகா தசநிலை யாததின் நடுவே
ஏகா தனமிசை இருந்தமெய்ப் பொருளே

திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
ஈரெண் நிலைஎன இயம்புமேல் நிலையில்
பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
எல்லா நிலைகளும் இசைந்தாங் காங்கே

எல்லா மாகி இலங்குமெய்ப் பொருளே
மணாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதிஉண் மையதாய் அமர்ந்தமெய்ப் பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளங்கும் ஒருதனிப் பொருளே

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே
அருவினுள் அருவாய் அருஅரு அருவாய்

உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே
அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்
உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே
பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளாய்
ஒருமையின் விளங்கும் ஒருதனிப் பொருளே

ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே
கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
ஆட்டுற விளங்கும் அருட்பெரும் பொருளே
அறிவுறு சித்திகள் அனந்த கோ டிகளும்

பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
ஆடல்செய் தருளும் அரும்பெரும் பொருளே
பற்றுகள் எல்லாம் பதிநெறி விளங்க
உற்றரு ளாடல்செய் ஒருதனிப் பொருளே

பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
பரம்பதம் பரமே பரஞ்சிதம் பரமே
பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே

பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
பரங்கொள்சிற் பரமே பரஞ்செதற் பரமே
தரங்கொள்பொற் பரமே தனிப்பெரும் பரமே
வரம்பரா பரமே வணம்பரா பரமே
பரம்பரா பரமே பதம்பரா பரமே

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே
தத்துவ பதமே தற்பத பதமே
சித்துறு பதமே தற்பத பதமே
தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே

அம்பரம் பதமே அருட்பரம் பதமே
தந்திர பதமே சந்திர பதமே
மந்திர பதமே மந்தண பதமே
நவந்தரு பதமே நடந்தரு பதமே
சிவந்தரு பதமே சிவசிவ பதமே

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
பரமமே பரம பதந்தரும் சிவமே
அவனோ டவளாய் அதுவாய் அலவாய்

நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
எம்பொரு ளாகி எமக்கருள் புரியும்
செம்பொரு ளாகி சிவமே சிவமே
ஒருநிலை இதுவே உயர்நிலை எனும்ஒரு
திருநிலை மேவிய சிவமே சிவமே

மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுறு
தெய்வப் பதியாம் சிவமே சிவமே
புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
சிரமுற நாட்டிய சிவமே சிவமே
கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்

செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்
தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே
சத்தெலா மாகியும் தான்ஒரு தானாம்
சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே
ஆரே என்னினும் இரங்குகின் றார்க்குச்
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
பொய்ந்நெறி அனைத்தினும் புகுத்தா தெனைஅருள்

செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
கொல்லா நெறியே குருவருள் நெறிஎனப்
பல்கால் எனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே

பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே
உயிருள்யாம் எம்முள் உயிர்இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவு கென் றுரைத்தமெய்ச் சிவமே
இயலருள் ஒளிஓர் ஏகதே சத்தினாம்

உயிர்ஒளி காண்கஎன் றுரைத்தமெய்ச் சிவமே
அருளலா தணுவும் அசைந்திடா ததனால்
அருள்நலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும்ஈ துண்மை
அருளுற முயல்கஎன் றருளிய சிவமே

அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
இருள்நெறி எனஎனக் கியம்பிய சிவமே
அருள்பெறில் துரும்பும்ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள்இது எனவே செப்பிய சிவமே
அருளறி வொன்றே அறிவுமற் றெல்லாம்

மருளறிவென்றே வகுத்தமெய்ச் சிவமே
அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறஎன வகுத்தமெய்ச் சிவமே
அருட்பே றதுவே அரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறக்கும்என் றியம்பிய சிவமே

அருட்டனி வல்லபம் அதுவே எலாம்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
அருளறி யார்தமை அறியார் எம்மையும்
பொருளறி யார்எனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை

பொருள்நிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
அருள்வடி வதுவே அழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம்வடி வாம்என்ற சிவமே

அருளே நம்அடி அருளே நம்முடி
அருளே நம்நடு வாம்என்ற சிவமே
அருளே நம்அறி வருளே நம்மனம்
அருளே நம்குண மாம்என்ற சிவமே
அருளே நம்பதி அருளே நம்பதம்

அருளே நம்இட மாம்என்ற சிவமே
அருளே நம்துணை அருளே நம்தொழில்
அருளே நம்விருப் பாம்என்ற சிவமே
அருளே நம்பொருள் அருளே நம்ஒளி
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே

அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
அருளே நம்சுகம் அருளே நம்பெயர்
அருளே நாம்அறி வாய்என்ற சிவமே
அருள்ஒளி அடைந்தனை அருள்அமு துண்டனை

அருண்மதி வாழ்கஎன் றருளிய சிவமே
அருள்நிலை பெற்றனை அருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே
உள்ளகத் தமர்ந்தென துயிரில் கலந்தருள்
வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே

நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்
தகவொடு காக்கும் தனிச்சிவ பதியே
சுத்தசன் மார்க்கச் சுகநிலை தனில்எனைச்
சத்தியன் ஆக்கிய தனிச்சிவ பதியே
ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருள்என்

கைவரப் புரிந்த கதிசிவ பதியே
துன்பம் தொலைத்தருட் சோதியால் நிறைந்த
இன்பம் எனக்கருள் எழிற்சிவ பதியே
சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை
ஒத்துற வேற்றிய ஒருசிவ பதியே

கையற வனைத்தும் கடிந்தெனைத் தேற்றி
வையமேல் வைத்த மாசிவ பதியே
இன்புறச் சிறியேன் எண்ணுதோ றெண்ணுதோ
றன்பொடென் கண்ணுறும் அருட்சிவ பதியே
பிழைஎலாம் பொறுத்தெனுள் பிறங்கிய கருணை

மழைஎலாம் பொழிந்து வளர்சிவ பதியே
உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது
குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே
பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத்
திரமுற அருளிய திருவருட் குருவே

மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்
திதிநிலை அனைத்தும் தெரித்தசற் குருவே
கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
பதிநிலை பசுநிலை பாச நிலைஎலாம்

மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
பிரம ரகசியம் பேசிஎன் உளத்தே
தரமுற விளங்கும் சாந்தசற் குருவே
பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே

சிவரக சியம்எலாம் தெரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே
சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுதும்
அத்தகை தெரித்த அருட்சிவ குருவே
அறிபவை எல்லாம் அறிவித்தெனுள்ளே

பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
கேட்பவை எல்லாம் கேட்பித் தெனக்கே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
காண்பவை எல்லாம் காட்டுவித் தெனக்கே
மாண்பதம் அளித்து வயங்குசற் குருவே

செய்பவை எல்லாம் செய்வித் தெனக்கே
உய்பவை அளித்தெனுள் ஓங்குசற் குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
சாகாக் கல்வியின் தரம்எலாம் கற்பித்

தேகாக் கரப்பொருள் ஈந்தசற் குருவே
சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற் குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்
வல்லான் எனஎனை வைத்தசற் குருவே

சீருற அருளாம் தேசுற அழியாப்
பேருற என்னைப் பெற்றநற் றாயே
பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்
பெருந்தய வால்எனைப் பெற்றநற் றாயே
ஆன்றசன் மார்க்கம் அணிபெற எனைத்தான்

ஈன்றமு தளித்த இனியநற் றாயே
பசித்திடு தோறும்என் பால்அணைந் தருளால்
வசித்தமு தருள்புரி வாய்மைநற் றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஒருமைநற் றாயே

அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்
தெருளுற எனக்கருள் செல்வநற் றாயே
இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்
உயலுற எனக்கருள் உரியநற் றாயே
நண்புறும் எண்வகை நலவகை அமுதமும்

பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே
மற்றுள அமுத வகைஎலாம் எனக்கே
உற்றுண வளித்தருள் ஓங்குநற் றாயே
கலக்கமும் அச்சமும் கடிந்தென துளத்தே
அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத் தாயே

துய்ப்பினில் அனைத்தும் சுகம்பெற அளித்தெனக்
கெய்ப்பெலாந் தவிர்த்த இன்புடைத் தாயே
சித்திகள் எல்லாம் தெளிந்திட எனக்கே
சத்தியை அளித்த தயவுடைத் தாயே
சத்தினி பாதந் தனைஅளித் தெனைமேல்

வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
சத்திசத் தர்கள்எலாஞ் சார்ந்தென தேவல்செய்
சித்தியை அளித்த தெய்வநற் றாயே
தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
என்னைமேல் ஏற்றிய இனியநற் றாயே

வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே
அளித்தளித் தின்புசெய் அன்புடைத் தாயே
எண்ணகத் தொடுபுறத் தென்னைஎஞ் ஞான்றும்
கண்எனக் காக்கும் கருணைநற் றாயே
இன்னருள் அமுதளித் திறவாத் திறல்புரிந்

தென்னை வளர்த்திடும் இன்புடைத் தாயே
என்னுடல் என்னுயிர் என்னறி வெல்லாம்
தன்னஎன் றாக்கிய தயவுடைத் தாயே
தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
தரியா தணைத்த தயவுடைத் தாயே

சினமுதல் அனைத்தையுந் தீர்த்தெனை நனவினும்
கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
தூக்கமும் சோம்பும்என்துன்பமும் அச்சமும்
ஏக்கமும் நீக்கிய என்தனித் தாயே
துன்பெலாம் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப

இன்பெலாம் அளித்த என்தனித் தந்தையே
எல்லா நன்மையும் என்தனக் களித்த
எல்லாம் வல்லசித் தென்தனித் தந்தையே
நாயிற் கடையேன் நலம்பெறக் காட்டிய
தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே

அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
பிறிவிலா தமர்ந்த பேரருள் தந்தையே
புன்னிகர் இல்லேன் பொருட்டிவண் அடைந்த
தன்நிகர் இல்லாத் தனிப்பெருந் தந்தையே
அகத்தினும் புறத்தினும் அமர்ந்தருட் ஜோதி

சகத்தினில் எனக்கே தந்தமெய்த் தந்தையே
இணைஇலாக் களிப்புற் றிருந்திட எனக்கே
துணைஅடி சென்னியில் சூட்டிய தந்தையே
ஆதியீ றறியா அருளர சாட்சியில்
சோதிமா மகுடம் சூட்டிய தந்தையே

எட்டிரண் டறிவித் தெனைத்தனி ஏற்றிப்
பட்டிமண் டபத்தில் பதித்தமெய்த் தந்தையே
தங்கோல் அளவது தந்தருள் ஜோதிச்
செங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
தன்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே

என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே
தன்வடி வனைத்தையும் தன்அர சாட்சியில்
என்வடி வாக்கிய என்தனித் தந்தையே
தன்சித் தனைத்தையும் தன்சமு கத்தினில்
என்சித் தாக்கிய என்தனித் தந்தையே

தன்வச மாகிய தத்துவம் அனைத்தையும்
என்வசம் ஆக்கிய என்உயிர்த் தந்தையே
தன்கையில் பிடித்த தனிஅருட் ஜோதி
என்கையில் கொடுத்த என்தனித் தந்தையே
தன்னையும் தன்அருட் சத்தியின் வடிவையும்

என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே
தன்இயல் என்இயல் தன்செயல் என்செயல்
என்ன இயற்றிய என்தனித் தந்தையே
தன்உரு என்உரு தன்உரை என்உரை
என்ன இயற்றிய என்தனித் தந்தையே

சதுரப் பேரருள் தனிப்பெருந் தலைவன்என்
றெதிரற் றோங்கிய என்னுடைத் தந்தையே
மனவாக் கறியா வரைப்பினில் எனக்கே
இனவாக் கருளிய என்னுயிர்த் தந்தையே
உணர்ந் துணர்ந் துணரினும் உணராப் பெருநிலை

அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
துரியவாழ் வுடனே சுகபூ ரணம்எனும்
பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே

எவ்வகைத் திறத்தினும் எய்துதற் கரிதாம்
அவ்வகை நிலைஎனக் களித்தநல் தந்தையே
இனிப்பிற வாநெறி எனக்களித் தருளிய
தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண் டணைந்தெனைச்

சற்றும்அஞ் சேல்எனத் தாங்கிய துணையே
தளர்ந்தஅத் தருணம்என் தளர்வெலாம் தவிர்ந்துட்
கிளர்ந்திட எனக்குக் கிடைத்தமெய்த் துணையே
துறைஇது வழிஇது துணிவிது நீசெயும்
முறைஇது எனவே மொழிந்தமெய்த் துணையே

எங்குறு தீமையும் எனைத்தொட ராவகை
கங்குலும் பகலும்மெய்க் காவல்செய் துணையே
வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே
ஈண்டிருந் தருள்புரி என்னுயிர்த் துணையே
இகத்தினும் பரத்தினும் எனக்கிடர் சாரா

தகத்தினும் புறத்தினும் அமர்ந்தமெய்த் துணையே
அயர்வற எனக்கே அருட்டுணை ஆகிஎன்
உயிரினும் சிறந்த ஒருமைஎன் நட்பே
அன்பினில் கலந்தென தறிவினில் பயின்றே
இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர் நட்பே

நான்புரி வனஎலாம் தான்புரிந் தெனக்கே
வான்பத மளிக்க வாய்த்தநல் நட்பே
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்துகொண்
டெள்ளுறு நெய்யில்என் உள்ளுறு நட்பே
செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த

குற்றமும் குணமாக் கொண்டஎன் நட்பே
குணங்குறி முதலிய குறித்தியா தெனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்கும் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே

சவலைநெஞ் சகத்திகன் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்தெனைக் கலந்தநல் நட்பே
களைப்பறிந் தெடுத்துக் கலக்கம் தவிர்த்தெனக்
கிளைப்பறிந் துதவிய என்உயிர் உறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா

என்னைத் தழுவிய என்உயிர் உறவே
மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
எனக்குற வாகிய என்உயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
தென்உறவாகிய என்உயிர் உறவே

என்றும்ஓர் நிலையாய் என்றும்ஓர் இயலாய்
என்றும்உள் ளதுவாம் என்தனிச் சத்தே
அனைத்துல கவைகளும் ஆங்காங் குணரினும்
இனைத்தென அறியா என்தனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்

இதுஎனற் கரிதாம் என்தனிச் சத்தே
ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்
ஏகுதற் கரிதாம் என்தனிச் சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழுத்தம் என்தனிச் சத்தே

துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருள்என
உரைசெய்வே தங்கள் உன்னும்மெய்ச் சத்தே
அன்றதன் அப்பால் அதன்பரத் ததுதான்
என்றிட நிறைந்த என்தனிச் சத்தே
என்றும்உள் ளதும்வாய் எங்கும்ஓர் நிறைவாய்

என்றும் விளங்கிடும் என்தனிச் சித்தே
சத்திகள் பலவாய்ச் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என்தனிச் சித்தே

படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்
இடிவற விளங்கிடும் என்தனிச் சித்தே
மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
ஏற்பட விளங்கிடும் என்தனிச் சித்தே
உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்

இயலுற விளக்கிடும் என்தனிச் சித்தே
அறிவவை பலவாய் அறிவன பலவாய்
எறிவற விளக்கிடும் என்தனிச் சித்தே
நினைவவை பலவாய் நினைவன பலவாய்
இனைவற விளக்கிடும் என்தனிச் சித்தே

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
ஏட்சியின் விளக்கிடும் என்தனிச் சித்தே
செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்
எய்வற விளக்கிடும் என்தனிச் சித்தே
அண்ட சராசரம் அனைஹத்தையும் பிறவையும்

எண்தர விளக்கும் என்தனிச் சித்தே
எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
எல்லாம் விளக்கிடும் என்தனித் சித்தே
ஒன்றதில் ஒன்றென் றுரைக்கவும் படாதாய்
என்றும்ஓர் படித்தாம் என்தனி இன்பே

இதுஅது என்னா இயலுடை அதுவாய்
எதிர் அறநிறைந்த என்தனி இன்பே
ஆக்குறும் அவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த என்தனி இன்பே
அறிவுக் கறிவினில் அதுவது அதுவாய்

எறிவற் றோங்கிய என்தனி இன்பே
விடயம் எவற்றினும் மேன்மேல் விளைந்தவை
இடைஇடை ஓங்கிய என்தனி இன்பே
இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என்தனி இன்பே

முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமாம் என்தனி இன்பே
எல்லா நிலைகளின் எல்லா உயிர்உறும்
எல்லா இன்புமாம் என்தனி இன்பே
கரும்புறு சாறும் கனிந்தமுக் கனியின்

விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்
குணங்கொள்கோற் றேனும் கூட்டிஒன் றாக்கி
மனங்கொளப் பதஞ்செய் வகையுறு இயற்றிய
உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா
வணம்உறும் இன்ப மயமே அதுவாய்க்

கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
நலத்தரு விளக்கமும் நவில்அருந் தண்மையும்
உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
உள்ளதாய் என்றன் உயிர்உளம் உடம்புடன்
எல்லாம் இனிப்ப இயலுறு சுவைஅளித்

தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
சாகா வரமும் தனித்தபேர் அறிவும்
மாகா தலிற்சிவ வல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்

பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்தென தறிவாம் கனமேல் சபைநடு
நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞான ஆரமுதே
சத்திய அமுதே தனித்திரு அமுதே

நித்திய அமுதே நிறைசிவ அமுதே
சச்சிதா னந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருள்ஒளி அமுதே
தானந்த மில்லாத் தத்துவ அமுதே

நவநிலை தரும்ஓர் நல்லதெள் ளமுதே
சிவநிலை தனிலே திரண்டஉள் ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வான் அமுதே
அகம்புறும் அகப்புறம் ஆகிய புறப்புறம்

உகந்தநான் கிடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதல் லாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே

அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே
பிண்டமும் அதில்உறு பிண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பராபர மணியே
நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற

அனைத்தையும் தரும்ஓர் அரும்பெறல் மணியே
விண்பதம் அனைத்தும் மேற்பத முழுவதும்
கண்பெற நடத்தும் ககனமா மணியே
பார்பதம் அனைத்தும் பகர்அடி முழுவதும்
சார்புற நடத்தும் சரஒளி மணியே

அண்டகோ டிகள்எலாம் அரைக்கணத் தேகிக்
கண்டுகொண் டிடஒளிர் கலைநிறை மணியே
சராசர உயிர்தொறும் சாற்றிய பொருள்தொறும்
விராவியுள் விளங்கும் வித்தக மணியே
மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்

தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே
தாழ்வெலாம் தவிர்த்துச் சகமிசை அழியா
வாழ்வெனக் களித்த வளர்ஒளி மணியே
நவமணி முதலிய நலம்எலாம் தரும்ஒரு
சிவமணி எனும்அருட் செல்வமா மணியே

வான்பெறற் கரிய வகைஎலாம் விரைந்து
நான்பெற அளித்த நாதமந் திரமே
கற்பம் பலபல கழியினும் அழியாப்
பொற்புற அளித்த புனிதமந் திரமே
அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்

வகரமும் ஆகிய வாய்மைமந் திரமே
ஐந்தென எட்டென ஆறென நான்கென
முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்
ஓதநின் றுலவா தோங்குமந் திரமே

உயற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும்
அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே
சித்திக்கு மூலமாம் சிவமருந் தெனஉளம்
தித்திக்கும் ஞானத் திருவருள் மருந்தே
இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்

சிறந்தவல் லபம்உறு திருவருள் மருந்தே
மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீர் உடையநல் மருந்தே

என்றே என்னினும் இளமையோ டிருக்க
நன்றே தரும்ஒரு ஞானமா மருந்தே
மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை அதுஎன நாட்டிய மருந்தே
சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே
இடையுறப் படாத இயற்கை விளக்கமாய்த்
தடைஒன்றும் இல்லாத் தகவுடை யதுவாய்
மாற்றிவை என்ன மதித்தளப் பரிதாய்
ஊற்றமும் வண்ணமும் ஒருங்குடை யதுவாய்க்

காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்க்
கைதவர் கனவினும் காண்டற் கரிதாய்ச்
செய்தவப் பயனாம் திருவருள் வலத்தால்
உளம்பெறும் இடம்எலாம் உதவுக எனவே

வளம்பட வாய்த்த மன்னிய பொன்னே
புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
மும்மையும் தரும்ஒரு செம்மையை உடைத்தாய்
இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே

எடுத்தெடுத் துதவினும் என்றும் குறையா
தடுத்தடுத் தோங்குமெய் அருளுடைப் பொன்னே
தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேம்எனக்
கிளர்ந்திட உரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
எண்ணிய தோறும் இயற்றுக என்றெனை

அண்ணிஎன் கரத்தில் அமர்ந்தபைம் பொன்னே
நீகேள் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
போகேம் எனஎனைப் பொருந்திய பொன்னே
எண்ணிய எண்ணியாங் கெய்திட எனக்குப்
பண்ணிய தவத்தால் பழுத்தசெம் பொன்னே

விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்
புண்ணியப் பயனால் பூத்தசெம் பொன்னே
நால்வகை நெறியினும் நாட்டுக எனவே
பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
எழுவகை நெறியினும் இயற்றுக எனவே

முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
எண்ணிய படிஎலாம் இயற்றுக என்றெனைப்
புண்ணிய பலத்தால் பொருந்திய நிதியே
ஊழிதோ றூழி உலப்புறா தோங்கி
வாழிஎன் றெனக்கு வாய்த்தநல் நிதியே

இதமுற ஊழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
குதவினும் உலவா தோங்குநல்நிதியே
இருநிதி எழுநிதி இயல்நவ நிதிமுதல்
திருநிதி எல்லாம் தரும்ஒரு நிதியே
எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை

அவ்வகை கிடைக்கும்என் றருளிய நிதியே
அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே
கற்பனை கடந்த கருணைமா நிதியே
நற்குண நிதியே சற்குண நிதியே
நிர்க்குண நிதியே சிற்குண நிதியே

பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
வளம்எலாம் நிறைந்த மாணிக்க மலையே
மதியுற விளங்கும் மரகத மலையே
வதிதரு பேரொளி வச்சிர மலையே
உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே

துரியமேல் வெளியில் சோதிமா மலையே
புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்
அற்புதக் கடலே அமுதத்தண் கடலே
இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய
அருட்பெருங் கடலே ஆனந்தக் கடலே

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
உவப்புறு வளங்கொண் டோங்கிய கரையே
என்றுயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்
நன்றுற விளங்கிய நந்தனக் காவே
சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்

ஊற்றுநீர் நிரம்ப உடையபூந் தடமே
கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
களைப்பறக் கிடைத்த கருணை நன் னீரே
இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே

தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
தென்னைவான் பலத்தில் திருகுதீம் பாலே
நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே
வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
கட்டுமாம் பழமே கதலிவான் பழமே

இட்டநற் சுவைசெய் இலந்தையங் கனியே
கனிஎலாம் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
இதந்தரு கரும்பில் எடுத்ததீஞ் சாறே
பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே
சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே

ஏலவே நாவுக் கினியகற் கண்டே
உலப்புறா தினிக்கும் உயர்மலைத் தேனே
கலப்புறா மதுரம் கனிந்தகோற் றேனே
நவைஇலா தெனக்கு நண்ணிய நறவே
சுவைஎலாம் திரட்டிய தூயதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே
உலர்ந்திடா தென்றும் ஒருபடித் தாகி
மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே
இகந்தரு புவிமுதல் எவ்வுல குயிர்களும்

உகந்திட மணக்கும் சுகந்தநல் மணமே
யாழுறும் இசையே இனியஇன் இசையே
ஏழுறும் இசையே இயல்அருள் இசையே
திவள்ஒளிப் பருவம் சேர்ந்தநல் லவளே
அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே

நாதநல்வரைப்பின் நண்ணிய பாட்டே
வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே

எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே
என்மனக் கண்ணே என்அருட் கண்ணே
என்னிரு கண்ணே என்கணுள் மணியே
என்பெருங் களிப்பே என்பெரும் பொருளே
என்பெருந் திறலே என்பெருஞ் செயலே

என்பெருந் தவமே என்தவப் பலனே
என்பெருஞ் சுகமே என்பெரும் பேறே
என்பெரு வாழ்வே என்றன்வாம் முதலே
என்பெரு வழக்கே என்பெருங் கணக்கே
என்பெரு நலமே என்பெருங் குலமே

என்பெரு வலமே என்பெரும் புலமே
என்பெரு வரமே என்பெருந் தரமே
என்பெரு நெறியே என்பெரு நிலையே
என்பெருங் குணமே என்பெருங் கருத்தே
என்பெருந் தயவே என்பெருங் கதியே

என்பெரும் பதியே என்னுயிர் இயலே
என்பெரு நிறைவே என்தனி அறிவே
தோலெலாம் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாம் கட்டவை விட்டுவிட் டியங்கிட
என்பெலாம் நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட

மென்புடைத் தசைஎலாம் மெய்உறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும்உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட
மடம்எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல்எலாம் ஊற்றெடுத் தோடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில்நீர் பெருகிக் கால்வழிந் தோடிட
வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளில்

கூயிசைப் பொறிஎலாம் கும்மெனக் கொட்டிட
மெய்எலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கைஎலாம் குவிந்திடக் கால்எலாம் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுரு அனைத்தும் ஆனந்த மாயிடப்
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத்
தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்

சத்துவம் ஒன்றே தனித்துநின் றோங்கிட
உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசைமேற் பொங்கிட
என்னுளத் தெழுந்துயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்தனி அன்பே

பொன்னடி கண்டருள் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த என்னுடை அன்பே
தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னைவே தித்த என்தனி அன்பே
என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து

என்னுளே விரிந்த என்னுடை அன்பே
என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே
தன்னுளே நிறைவுறு தரம்எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்தென துருவை
இன்புரு வாக்கிய என்னுடை அன்பே
பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த என்தனி அன்பே
தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி

என்வசங் கடந்த என்னுடை அன்பே
தன்னுளே பொங்கிய தண்அமு துணவே
என்னுளே பொங்கிய என்தனி அன்பே
அருளொளி விளங்கிட ஆணவம் எனும்ஓர்
இருளற என்னுளத் தேற்றிய விளக்கே

துன்புறு தத்துவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுளத் தேற்றிய விளக்கே
மயலற அழியா வாழ்வுமேன் மேலும்
இயலுற என்னுளத் தேற்றிய விளக்கே
இடுவெளி அனைத்தும் இயல்ஒளி விளங்கிட

நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிர்தரு விளக்கே
தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
ஏற்றிய ஞானி இயல்ஒளி விளக்கே

ஆகம முடிமேல் அருள்ஒளி விளங்கிட
வேகம தறவே விளங்கொளி விளக்கே
ஆரியர் வழுத்திய அருள்நிலை அனாதி
காரியம் விளக்கும்ஓர் காரண விளக்கே
தண்ணிய அமுதே தந்தென துளத்தே

புண்ணியம் பலித்த பூரண மதியே
உய்தர அமுதம் தந்தென துளத்தே
செய்தவம் பலித்த திருவளர் மதியே
பதிஎலாம் தழைக்கப் பதம்பெறும் அமுத
நிதிஎலாம் அளித்த நிறைதிரு மதியே

பால்எனத் தண்கதிர் பரப்பிஎஞ் ஞான்றும்
மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
உயங்கிய உள்ளமும் உயிருந் தழைத்திட
வயங்கிய கருணை மழைபொழி மழையே
என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப

மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளும் எனக்கே உவகைமேற் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலத்தர உடல்உயிர் நல்அறி வெனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே

தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்
வாய்மையால் கருணை மழைபொழி மழையே
வெம்மல இரவது விடிதரு ணந்தனில்
செம்மையில் உதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே
திரைஎலாம் தவிர்த்துச் செவ்விஉற் றாங்கே

வரைஎலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
அலகிலாத் தலைவர்கள் அரசுசெய் தத்துவ
உலகெலாம் விளங்க ஓங்குசெஞ் சுடரே
முன்னுற மலஇருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்தசெஞ் சுடரே

ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
சோதியாய் என்உளம் சூழ்ந்தமெய்ச் சுடரே
உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட
வெள்ஒளி காட்டிய மெய்அருட் கனலே
நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை

வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
வேதமும் ஆகம விரிவும் பரம்பர
நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே
எண்ணிய எண்ணிய எல்லாந் தரஎனுள்
நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
நலம்எலாம் அளித்த ஞானமெய்க் கனலே
இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு
பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே
வாநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி

பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
சபைஎன துளம்எனத் தான்அமர்ந் தௌக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி

மருள்எலாம் தவிர்த்து வரம்எலாம் கொடுத்தே
அருள்அமு தருத்திய அருட்பெருஞ் ஜோதி
வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
ஆழிஒன் றளித்த அருட்பெருஞ் ஜோதி
என்னையும் பொருள்என எண்ணிஎன் உளத்தே

அன்னையும் அப்பனும் ஆகிவீற் றிருந்து
உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை
அலகில்பேர் அருளால் அறிவது விளக்கிச்
சிறுநெறி செல்லாத் திறன்அளித் தழியா
துறுநெறி உணர்ச்சிதந் தொளிஉறப் புரிந்து

சாகாக் கல்வியின் தரம்எலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்துமேன் மேலும்
அன்பையும் விளைவித் தருட்பேர் ஒளியால்
இன்பையும் நிறைவித் தென்னையும் நின்னையும்
ஓர்உரு ஆக்கியான் உன்னிய படிஎலாம்

சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமு தளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருள்அறி வளித்தனை அருட்பெருஞ் ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கல்இன் றோங்கிய அருட்பெருஞ் ஜோதி

உலகுயிர்த் திரள்எலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும்ஐந் தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றிலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

யாவரும் பெற்றிடா இயல்எனக் களித்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
சித்திகள் அனைத்தையும் தெளிவித் தெனக்கே
சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
உலகினில் உயிர்களுக் குறும்இடை யூறெலாம்
விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்ச் சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி

- திருச்சிற்றம்பலம்.

 http://img.youtube.com/vi/S7s3U_2GKV8/0.jpg

Wednesday 6 February 2013

ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்க ஸ்தோத்ரம் .MP3

 https://lh4.googleusercontent.com/-ayr98-x3h14/UPU7CRKdj0I/AAAAAAAAFR0/jvfBIl72pzM/s685/shriram-darbar.jpg


ஆதிசங்கரர் அருளிய ஸ்ரீ ராம புஜங்கப்ரயாத ஸ்தோத்ரம்.MP3
 
                                  
1.விசுத்தம் பரம் ஸச்சிதானந்த ரூபம்
குணாதாரமாதாரஹீநம் வரேண்யம்
மஹாந்தம் விபாந்தம் குஹாந்தம் குணாந்தம்
சுகாந்தம் ஸ்வயம் தாம ராமம் ப்ரபத்யே

மேன்மை, தூய்மை பெற்று ஸத்-சித்-ஆனந்தம் என்ற மைந்தவரும், குணங்களுக்கு ஆதாரமாயும், ஆனால் ஆதாரமேதுல்லாதவரும், சிறந்தவரும், பெரியவரும், விளங்குபவரும், சூக்ஷ்மம், குணம் இவற்றின் எல்லையாயும் ஸ்வயம் பிரகாசமாயுருக்கிற ராமரை சரணடைகிறேன்.


2.சிவம் நித்யமேகம் விபும் தாரகாக்யம்
ஸுகாதார மாகாரசூன்யம் ஸுமான்யம்
மஹேசம் கலேசம், ஸுரேசம் பரேசம்
நரேசம் நரீசம் மஹீசம் ப்ரபத்யே

ஸ்ரீதராக ராமர் என்ற ஒருவரே நித்யமானவர், எங்கும் வியாபித்தமங்கல ரூபமானவர். அவர் உருவமற்றவரெனினும் ஆனந்தமே உருவானவர், அனைவரும் போற்றக்குரியவர் மஹேசர், கலைகளுக்கு ஈசர், தேவர்களுக்கு ஈசர், பர-ஈசர், நரர்களுக்கு ஈசர், பூக்கு ஈசர், ஆனால் தனக்குமேல் ஈசர் இல்லாதவர் அந்த ராமரை சரணடைகிறேன்.


3.யதாவர்ணயத் கர்ணமூலேsந்த காலே
சிவோ ராம ராமேதி ராமேதி காச்யாம்
ததேகம் பரம் தாரகப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்

காசியில் சிவன் உபதேசித்த வண்ணம் ( ராம ராம ராம ) என்ற ஒரே தாரகப்ரஹமரூபமான அந்த ராமனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.

4.மஹாரத்னபீடே சுபே கல்பமூலே
ஸுகாஸீன மாதித்ய கோடி ப்ரகாசம்
ஸதாஜானகீ லக்ஷ்மணோபேத மேகம்
ஸதா ராமசந்த்ரம் பஜேஹம் பஜேஹம்

கல்பகமரத்தடியில் நல்ல ரத்ன பீடத்தில் ஸுகமாக அமர்ந்திருப்பவரும் பலசூர்யர்கள் போன்று ப்ரகாசிக்கிறவரும், எப்பொழுதும் ஸ்ரீஸீதாலக்ஷ்மணர்களோடு சேர்ந்திருப்பவரும் ஆன ஸ்ரீராம சந்த்ரனை எப்பொழுதும் சேவிக்கிறேன்.


5.க்வணத்ரத்ன மஞ்ஜீர பாதாரவிந்தம்
லஸன் மேகலா சாருபீதாம்பராட்யம்
மஹாரத்ன ஹாரோல்லஸத்கௌஸ்பாங்கம்
நதத் சஞ்சரீ மஞ்ஜரீலோல மாலம்

ஒலிக்கும் சதங்கை திருவடித்தாமரையில், அழகிய ஒட்டியாணமும் பீதாம்பரமும் இடையில், பெரிய வைரஹாரமும், கௌஸ்துபமும் மார்பில், தேனீக்கள் ரீங்காரம் செய்யும் மாலையும் அவனது மார்பில் அன்றோ!


6.லஸத் சந்த்ரிகா ஸ்மேர சோணாதராபம்
ஸமுத்யத்பதங்கேந்து கோடிப்ரகாசம்
நமத்ப்ரஹ்மருத்ராதிகோடீரரத்ன
ஸ்புரத்காந்தி நீராஜனா ராதிதாங்க்ரிம்

செவ்விய உதட்டில் தவழும் நிலவே போன்ற புன்சிரிப்புடையவர், உதயகால சூர்ய சந்த்ரர்களின் ஒளி போன்று ப்ராகாசிப்பவர், பிரம்மன், ருத்ரன் இவர்கள் வணங்கும் பொழுது அவர்களின் கிரீடரத்ன ப்ரபைபால் நீராஜனம் செய்விக்கப்பட்ட திருவடிகளையுடையவர் அப்பெருமான்.


7.புர:ப்ராஞ்ஜலீன் ஆஞ்ஜனேயாதிபக்தான்
ஸ்வசின் முத்ரயா பத்ரயா போதயந்தம்
பஜேஹம் பஜேஹம் ஸதா ராமசந்த்ரம்
த்வதன்யம் ந மன்யே ந மன்யே ந மன்யே

தன் எதிரில் கைகூப்பிய வண்ணம் நிற்கும் ஆஞ்ஜனேயர் முதலிய பக்தர்களை சீரிய சின்முத்ரையால் போதித்துக் கொண்டிருக்கிற ஸ்ரீராமசந்திரனை சேவிக்கிறேன். அவனன்றி வேறேவரையும் நினைக்கவில்லை. நினைக்கவில்லை.


8.யதா மத்யமீபம் க்ருதாந்த: ஸமேத்ய
ப்ரசண்டப்ரகோபை: படை: பீஷயேத்மாம்
ததாவிஷ்கரோஷி த்வதீயம் ஸ்வரூபம்
ஸதாபத்ப்ரணாசம் ஸகோண்ட பாணம்

என்னருகில் யமன் வந்து கக்கோபங்கொண்ட தூதர்கள் மூலம் என்னை பயமுறுத்தும் பொழுது, ஆபத்தை நீக்கும், கோதண்டம், பாணம் இவற்றுடன் விளங்கும் உனதுஸ்வயரூபத்தைக்காட்டியருள்வாயல்லவா?


9.த்வமேவாஸி தைவம் பரம் மே யதேகம்
ஸுசைதன்யமேதத் த்வதன்யம் ந மன்யே
யதோபூத் அமேயம் வியத்வாயுதேஜோ
ஜலோர்வ்யாதி கார்யம் சரம் ச அசரம்ச

ராம! எனக்கு நீர் ஒருவரே மேலான தைவம், உன்னையன்றி வேறொரு சைதன்யத்தை மனதாலும் நினையேன். உம்டருந்து தானே இந்த அளவற்ற அப்தேஜோ வாயு ஆகாசாதி சராசரப்ரபஞ்சம் தோன்றியுள்ளது!


10.நம:ஸச்சிதானந்தரூபாய தஸ்மை
மோ தேவதேவாய ராமாய துப்யம்
நமோ ஜானகூ ஜீவிதேசாய துப்யம்
நம:புண்டரீகாயதாக்ஷ£ய துப்யம்

ஸத்-சித்-ஆனந்த ரூபியான அந்தராமனுக்கு நமஸ்காரம், தேவர்களுக்கெல்லாம் தேவனான, ஜானகீபிராண நாதனான, வெண்தாமரை போன்ற கண்களையுடைய ராமனுக்கு நமஸ்காரம்.


11.நமோ பக்தியுக்தாணுரக்தாய துப்யம்
நம: புண்யபுஞ்ஜைக லப்யாய துப்யம்
நமோ வேத வேத்யாய ச ஆத்யாய துப்பம்
நம: ஸுந்தராயேந்திராவல்லபாய

பக்தியும், அன்பும் கொண்ட சேவகர்களையுடைய உமக்கு நமஸ்காரம். புண்யம் ஒன்றால் மட்டுமேயடைய முடிந்த உமக்கு நமஸ்காரம். வேதத்தால் அறியதக்க ஆதிபுருஷரான உமக்கு நமஸ்காரம். லக்ஷ்தேவியின் அழகிய மணாளனான உமக்கு நமஸ்காரம்.


12.நமோ விச்வகர்த்ரே நமோ விச்வஹர்த்ரேத
நமோ விச்வபோக்த்ரே நமோ விச்வமாத்ரே
நமோ விச்வநேத்ரே நமோ விச்வஜேத்ரே
நமோ விச்வபித்ரே நமோ விச்வமாத்ரே

உலகை ஆக்கியும், அழித்தும், வருகிற உமக்கு நமஸ்காரம். உலகை அனுபவிப்பவரும், அதை உள்ளவாரு அளப்பவரும், அதன் தலைவரும், அதையே வெற்றி கொள்பவரும், உலகத்தாயும் தந்தையுமான ஸ்ரீ ராமருக்கு நமஸ்காரம்.


13.நமஸ்தே நமஸ்தே ஸமஸ்தப்ரபஞ்ச
ப்ரபோக ப்ரயோகப்ரமாண ப்ரண
மதீயம் மனஸ்த்வத் மதத்வந்த்வ ஸேவாம்
விதாதும் ப்ரவ்ருத்தம் ஸுசைத்ன்யஸித்யை

உலகமனைத்தையும் அனுபவிக்கவோ, இயக்கவோ, அளவிடவோ தக்கபடி அறிந்துள்ள உமக்கு, ஹேராம! நமஸ்காரம். நல்ல ஞானம் பெறுவதற்கு என்மனம் உன்திருவடிசேவையை மேற்கொண்டுள்ளது.


14.சிலாபி த்வதங்க்ரி-க்ஷமா-ஸங்கிரேணு-
ப்ரஸாதாத்  சைதன்ய மாதத்த ராம
நரஸ்த்வத் பதத்வந்த்வ ஸேவாவிதானாத்
ஸுசைதன்யமேதீதி கிம்சித்ரமத்ர

 ஹே ராம! உனது திருவடிமண் தூசு பட்டதால் அல்லவா சிலைவடிவமாகிய அஹல்யை ஸ்வய உணர்வு பெற்றால். உனது திருவடி சேவைபுரிந்து மனிதன் நல்ல ஞானம் பெறுவதில் என்ன வியப்பு உள்ளது?


15.பவித்ரம் சரித்ரம் விசித்ரம் த்வதீயம்
நரா யே ஸ்மரந்த்யன் வஹம் ராமசந்த்ர
பவந்தம் பவாந்தம் பரந்தம் பஜந்தோ
லபந்தே: க்ருதாந்தம் நபச்யந்த்யதோந்தே

உனது விசித்ரமான சரித்ரம் கப்புண்யம் வாய்ந்தது. ஹேராம! அந்த சரிரத்தை தினமும் ஸ்மரிக்கின்ற மனிதர்களும், போஷித்து வளர்க்கும் உன்னை சேவிப்பவரும் ஸம்ஸாரத்தை முடித்துவிட்டு அதன் பின் யமனைக்காணவே மாட்டார்.


16.ஸ புண்ய: ஸ கண்ய: சரண்யோ மமாயம்
நரோ வேத யோ தேவசூடாமணிம் த்வாம்
ஸதாகாரமேகம் சிதானந்த ரூபம்
மனோவாக கம்யம் பரம் தாம ராம

ஹேராம! எந்த ஒரு மனிதர், தேவர்தலைவனாயும் ஸத்வடிவமாயும், சித் ஆனந்தஸ்வரூபியாயும், மனம், வாக் இவற்றிற்கு எட்டாதவராயும், பெரும் ஒளியாயுருக்கிற உம்மை அறிந்துள்ளாரோ அவர் புண்யமானவர், மதிக்கத்தக்கவர்; எனக்கு சரணடையத்தகுந்தவர்.


17.ப்ரசண்ட் ப்ரதாபப்ரபாவாபிபூத-
ப்ரபூதாரிர ப்ரபோ ராமசந்த்ர
பலம் தே கதம் வர்ண்யதே தீவ பால்யே
யதோ கண்டி சண்டீச கோதண்டதண்ட:

 ஹேப்ரபா! ராமசந்த்ர! கடியப்ரதாபத்தின் தாக்கம் மேலிட்ட பலப்பகைவரை ழ்த்தியவரே! உமது பலம் வர்ணிக்கமுடியாதது; ஏனெனில் சிறுவயதிலேயே மகேச்வரன்வில்லை ஓடித்தீரே!


18.தசக்ரீவமுக்ரம் ஸபுத்ரம் ஸத்ரம்

ஸரித் துர்க மத்யஸ்தரக்ஷே£கணேசம்
பவந்தம் விநா ராம! ரோ நரோவா
ஸுரோ வாமரோ வா ஜயேத்க: த்ரிலோக்யாம்

ஸமுத்திரத்தின் நடுவில் இருந்த ராக்ஷஸத்தலைவனான கொடிய ராவனனை பிள்ளையுடனும், நண்பர்களுடனும் ஜயிக்கவல்லவர் உம்மைத்தவிர வேறு யார் மூவுலகிலும் உள்ளனர்?


19.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதாராம மானந்த நிஷ்யந்த கந்தம்
பிபந்தம் நமந்தம் ஸுதந்தம் ஹஸந்தம்
ஹனூமந்த மந்தர்பஜே தம் நிதாந்தம்

எப்பொழுதும் ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகி, வணங்கி, வாய்விட்டு சிரித்து சாதுக்களின் களிப்பிடமாயும், ஆனந்தப்பெருக்கின் வேறாகவும் இருக்கின்ற ஹனுமனை எப்பொழுதும் மனதில் தியானிக்கிறேன்.


20.ஸதா ராம ராமேதி ராமாம்ருதம் தே
ஸதா ராம மானந்த நிஷ்யந்தகந்தம்
பிபன் அன்வஹம் நன்வஹம் நைவ ம்ருத்யோ:
பிபே ப்ரஸாதாத் அஸாதாத் தவைவ

சாதுக்களைக்களிக்கச்தெய்யும் ஆனந்தப்பெருக்கின் வேறுபோலிருக்கின்ற ராம ராம என்ற உனது ராமாம்ருதத்தைப் பருகிக் கொண்டு அனுதினமும் நான் இருப்பேன். உனது குறைவற்ற அருளால் மரணத்திற்காக பயப்படமாட்டேன்.


21.அஸீதாஸமேதை ரகோதண்ட பூஷை:
அஸெளத்ரிவந்த்யை ரசண்யப்ரதாபை :
அலங்கேச காலை ரஸுக்ரீவ த்ரை:
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ஸீதையுடனில்லாத, கோதண்டத்தால் அழகுபெறாத, லக்ஷ்மணன் ஸேவிக்காத, ரல்லாத, ராவணனை அழிக்காத, சுக்ரீவனைத் தோழமை கொள்ளாத, ராமன் என்று பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்களுக்கு தெய்வல்லை.


22.அராஸனஸ்தை ரசின் முத்ரிகாட்யை :
அபக்தாஞ்ஜனேயாதி த்த்வப்ரகாசை :
அமந்தாரமூலை ரமந்தாரமாலை :
அராமாபிதேயைரலம் தைவதைர்ந:

ராஸனத்தில் அமராத, சின்முத்ரை தரிக்காத, பக்தஆஞ்ஜயர் முதலிய தத்வப்ரகாசகரில்லாத, மந்தாரமரத்தடியில் அமராத, மந்தாரமாலை யணியாத, ராமர் எனப்பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.


23.அஸிந்துப்ரகோபை ரவந்த்யப்ரதாபை :
அபந்துப்ரயாணை: அமந்தஸ்தாட்யை:
அதண்யப்ரவாஸை: அகண்டப்ரபோதை:
அராமாபிதேயை ரலம் தைவதைர்ந :

ஸமுத்ரராஜாவிடம் கோபங்கொள்ளாத புகழ்க்கப்ரதாபல்லாத, பரதன் போன்ற உறவினர் சந்திப்பில்லாத, புன்சிரிப்பு இல்லாத, தண்டகவனத்தில் பிரவாசம் கொள்ளாத, அகண்ட ஞானம் பெறாத ஸ்ரீ ராமர் என்ற பெயர் பெறாத எந்த தெய்வமும் எங்கள் தெய்வமன்று.


24.ஹரே ராம ஸீதாபதே ராவணாரே
கராகே முராரே ஸுராரே பரேதி
லபந்தம் நயந்தம் ஸதா கால மேவம்
ஸமாலோகயா லோகயாசேஷபந்தோ

ஹே ஹரே ராம! ஸீதாபதே! ராவணனின் பகாவனே! கரனையழித்தவனே! முராரே! அஸுரர்களை ழ்த்தியவரே பரனே என்று எப்பொழுதும் ஜபித்துக்கொண்டு காலம் கழிக்கும் இந்த அடியேனை அனைவரையும் உறவுகொண்டாடும் ஹேராம நன்குகவனி, கவனி!


25.நமஸ்தே ஸுத்ராஸுபுத்ராபிவந்த்ய
நமஸ்தேஸதா கைகயாநந்தனேட்ய
நமஸ்தேஸதா வாநராதீசவந்த்ய
நமஸ்தே நமஸ்தேஸதா ராமசந்த்ர

ஸுத்ரையின் மகன் மக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டவனே! எப்பொழுதும் கைகயீபுத்ரனான பரதனால் பூஜிக்கப்பட்டவனே ! வானரத்தலைவன் வணங்கும் ஹே ராமசந்ர! உனக்கு நமஸ்காரம், நமஸ்காரம், நமஸ்காரம்.


26.ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்யப்ரதாப
ப்ரஸீத ப்ரஸீத ப்ரசண்டாரிகால
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபன்னானுகம்பின்
ப்ரஸீத ப்ரஸீத ப்ரபோ ராமசந்த்ர

கோரப்ரதாபம் வாய்ந்த ஹேராம! எனக்கு அருள்செய். கொடியபகைவரை அழித்த ஹேராம! எனக்கருள்வாயாக சரணடைந்தோரிடம் பரிவுகொள்ளும் ஸ்ரீராமனே! எனக்கு அருள்செய். ஹேப்ரபோ ராமசந்த்ரா அருள்வாய் அருள்வாய்.


27.புஜங்கப்ரயாதம் பரம் வேதஸாரம்
முதாராமசந்த்ரஸ்ய பக்த்யா ச நித்யம்
படன் ஸந்ததம் சிந்தயன் ஸ்வாந்தரங்கே
ஸ ஏவ ஸ்வயம் ராமசந்த்ர: ஸ தன்ய:

எவனெருவன் ஸ்ரீ ராமனிடம் பக்தியுடன் இந்த வேதஸாரமான புஜங்கப்ரயாதஸ்தோத்ரத்தை படித்து வருகிறானோ அவனே ஸ்ரீ ராமனாகிவிடுகிறான் அவனே புண்யசாலியாகவும் ஆவான்.


 ஸ்ரீ ராமபுஜங்கப்ரயாதஸ்தோத்ரம் முற்றுப் பெற்றது.

http://www.indianetzone.com/photos_gallery/35/TiruvangadSriRama_23868.jpg

 http://imagegallery.taragana.com/images/wk/2010/03/23/Srisita_ram_laxman_hanuman_manor_125201_M.JPG