SHIRDI LIVE DARSHAN

Wednesday 4 December 2013

ஆதி சங்கரர் அருளிய லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் .MP3





லலிதா பஞ்சரத்ன ஸ்தோத்ரம் .MP3


                                                                  
http://www.mediafire.com/listen/kr1pdi1ajoqouhl/LALITHA%20PANCHARATNAM.mp3
                                                                                                                 

ப்ராத: ஸ்மராமி லலிதா வதனாரவிந்தம்
பிம்பாதரம் ப்ருதுல மௌக்திகசோபிநாஸம்
ஆகர்ண தீர்க்க நயனம் மணிகுண்ட லாட்யம்
மந்தஸ்மிதம் ம்ருக மதோஜ் ஜ்வல பாலதேசம்.

ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்ப வல்லீம்
ரத்னாங்குளீய லஸதங்குளி பல்ல வாட்யாம்
மாணிக்ய ஹேமவலயாங்கத சோபமானாம்
புண்ட்ரேக்ஷசாப குஸுமேக்ஷஸ்ருணீன்ததானாம்

பராதர் நமாமி லலிதா சரணார விந்தம்
பக்தேஷ்டதான நிரதம் பவஸிந்து போதம்
பத்மாஸனாதி ஸுரநாயக பூஜனியம்
பத்மாங்குச த்வஜ ஸுதர்சன லாஞ்சனாட்யம்.

ப்ராத: ஸ்துவே பரசிவாம் லலிதாம் பவானீம்
த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணானவத்யாம்
விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்
விச்வேச்வரீம் நிகம வாங்க மனஸாதி தூராம்

ப்ராதர் வதாமி லலிதே தவ புண்ய நாம
காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி
ஸ்ரீ சாம்பவீத ஜகதாம் ஜனனீ பரேதி
வாக்தேவ தேதி வசஸா த்ரிபுரேச்வரீதி

ய: ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா
ஸெபாக்யதம் ஸுலலிதம் படதி ப்ரபாதே
தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸன்னா
வித்யாம் ச்ரியம் விபுலஸெளக்ய மனந்த கீர்த்திம்.




இந்த மந்திரத்தை செவ்வாய்க் கிழமை, வெள்ளிக் கிழமை தோறும் மாலையில் திருவிளக்கின் முன் அமர்ந்து கூறுவதால் பெண்களுக்கு மன நிம்மதியும், மாங்கல்ய பாக்யம், மாங்கல்ய பலம் ஆகியவைகள் ஏற்படும். ஆண்கள் பாராயணம் செய்து வந்தால் புகழ், பொருளாதாரக் குறைகள் நிவர்த்தியாகி நிம்மதி ஏற்படும். .

மாங்கல்ய பாக்கியம், மாங்கல்ய பலம், சகல சவுபாக்கியங்களைத் தரும் 

 ஆதி சங்கரர் அருளியது 


Monday 25 November 2013

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க எளிய பரிகாரம்

வீட்டில் உள்ள / வீடு அமைப்பில் உள்ள தோஷம் / குறைகள் நீங்க
எளிய பரிகாரம் 

என் குருநாதர் சாய்பாபா உபாசகர் அருளிய பரிகாரம்

வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக குடி போனதிலேயிருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும் , எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் எதாவது குறையோ  தோஷமோஇருந்து கொண்டே இருக்கும்

இப்படிபட்ட தோஷங்கள் / குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .

90 நாள் என்பது ஒரு கணக்கு தான்

நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை , பிரச்னை இல்லை அப்படின்னு நாம உணரும் வரை விளக்கு போட வேண்டும்

வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம் .

ஒருவேளை வீட்டுக்கு காம்போண்டு சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைபாங்க அப்படின்னு சங்கடபட்டால் , வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , ( விளக்கு எரிந்து முடியும் வரை கவனம் தேவை  ).

விளக்கு ஏற்றும் பொது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என எதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்

ஓம் ஸ்ரீ காலபைரவாய நமஹ 

இவ்வழிபாட்டினைஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி ( வழிபாடு வெற்றி அடைய ) பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று
பிறகு வீட்டுற்கு  வந்து விநாயகரை வணக்கி அவருக்கும்  ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்

இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள்

தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி 

அப்படியும் இல்லையென்றால்  உங்கள் குடும்ப உறுபினர்கள் நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம் வராத நாள் எதுவானாலும் ஆரம்பிக்கலாம்


என் குருநாதர் வாக்கு என்றுமே பொய்க்காது , நிச்சயம் இவ்வழிபாட்டினை செய்பவர் வீட்டில் அணைத்து மங்களமும் உண்டாகும் .


குருநாதர் சாய் பாபா உபாசகர் ( திரு விஸ்வநாதன் ) அவர்களை சந்திக்க விருப்பம் உள்ளவர்கள்
saibabatrichy@gmail.com   ங்கற ஈமெயில் id க்கு தொடர்பு கொள்ளவும்


ஓம் சாய்ராம்

குருநாதர் திருவடி சரணம்







Wednesday 23 October 2013

சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



சிவ மானஸ பூஜா ஸ்தோத்திரம்.MP3



ரத்னை: கல்பித மாஸனம் ஹி மஜலை:
ஸ்நானம் ச திவ்யாம்பரம்
நானாரத்ன விபூஷிதம் ம்ருகமதா
மோதாம்கிதம் சந்தனம்
ஜாதீ சம்பக பில்வ பத்ராசிதம்
புஷ்பம் ச தூபம் ததா
தீபம் தேவ தயாநிதே பஸுபதே
ஹ்ருத் கல்பிதம் க்ருஹ்யதாம்

ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே
பாத்ரே க்ருதாம் பாயஸசம்
பாக்ஷ?யம் பஞ்சவிதம் பயோததியுதம்
ரம்பாபலம் பானகம்
ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம்
கற்பூர கண்டோஜ்வலம்
தாம்பூலம் மனஸா மயா விரசிதம்
பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு

சத்ரம் சாமரயோர் யுகம்வ்யஜனகம்
சாதர் ஸகம் நிர்மலம்
வீணாபேரி ம்ருதங்க காஹல கலா
கீதம் ச ந்ருத்யம் ததா
ஸாஷ்டாங்கம் ப்ரணதீ: ஸ்துதிர்பஹுவிதா
ஹ்யேதத் ஸமஸ்தம் மயா
ஸம்கல்பேன ஸமர்பிதம் தவவிபோ
பூஜாம் க்ருஹாண ப்ரபோ

ஆத்மா த்வம்கிரிஜாமதி: ஸஹசரா
ப்ராணா: ஸரீரம் க்ருஹாம்
பூஜாதே விஷயோப போக ரசனா
நித்ரா ஸமா திஸ் திதி:
ஸம்சார: பதயோ: ப்ரதக்ஷ?ணவிதி:
ஸ்தோத்ராணி ஸர்வாகிரோ
யத்யத் கர்ம கரோமி தத்ததகிலம்
ஸம்போ த வாராதனம்

கர சரண க்ருதம் வாக்காய ஜம் கர்மஜம்வா
ஸ்ரவண நயனஜம் வா மானஸம் வா பராதம்
விஹித மவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
ஜயஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ


இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி ஷேமம்  ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும்.
ஸ்ரீ சிவாபசாரமும் நீங்கி சகல
ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரம் படித்தலே பூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.





VI

SIVA MANASA STOTHRAM,MP3,DOWNLOAD,DEVOTIONAL SONGS


K.NESARAAJAN,

Wednesday 25 September 2013

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3

ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3




 01 ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3

 




02 ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம்.MP3




வாஸுதேவம் ஹ்ரிஷிகேசம் வாமனம் ஜலஸாயினம் !

ஜனார்தனம் ஹரிம் க்ருஷ்ணம் ஸ்ரீவக்ஷம் கருடத்வஜம் !!

வாராஹம் புண்டரீகாக்ஷம் ந்ருசிம்ஹம் நரகாந்தகம் !

அவ்யக்தம் ஸாஸ்வதம் விஷ்ணும் அனந்தமஜமவ்யயம் !!

நாராயணம் கதாத்யக்ஷம் கோவிந்தம் கீர்த்திபாஜனம் !

கோவர்த்தனோத்தரம் தேவம் பூதரம் புவனேஸ்வரம் !!

வேத்தாரம் யஞ்யபுருஷம் யஞேசம் யஞ்யவாஹகம் !

சக்ரபாணிம் கதாபாணிம் சங்கபாணிம் நரோத்தமம் !!

வைகுண்டம் துஷ்டதமனம் பூகர்பம் பீதவாஸஸம் !

த்ரிவிக்ரமம் த்ரிகாலஞம் த்ரிமூர்த்திம் நந்திகேஷ்வரம் !!

ராமம் ராமம் ஹயக்ரீவம் பீமம் ரௌத்ரம் பவோத்பவம் !

ஸ்ரீபதிம் ஸ்ரீதரம் ஸ்ரீஷம் மங்களம் மங்களாயுதம் !!

தாமோதரம் தமோபேதம் கேசவம் கேசிஸூதனம் !

வரேண்யம் வரதம் விஷ்ணும் ஆனந்தம் வஸுதேவஜம் !! 

ஹிரண்யரேதஸம் தீப்தம் புராணம் புருஷோத்தமம் !

ஸகலம் நிஷ்கலம் சுத்தம் நிர்குணம் குணஸாஸ்வதம் !! 

ஹிரண்யதனு ஸங்காஸம் சூர்யாயுத ஸமப் பிரபம் !

மேகஷ்யாமம் சதுர்பாஹும் குசலம் கமலேக்ஷணம் !!

ஜ்யோதிரூபமரூபம் ச ஸ்வரூபம் ரூபஸம்ஸ்திதம் !

ஸர்வஞம் ஸர்வரூபஸ்தம் ஸர்வேஸம் ஸர்வதோமுகம் !!

ஞானம் கூடஸ்தமசலம் ஞானதம் பரமம் ப்ரபும் !

யோகீசம் யோகநிஷ்ணாதம் யோகினம் யோகரூபிணம் !! 

ஈஸ்வரம் ஸர்வபூதானாம் வந்தே பூதமயம் ப்ரபும் !

இதி நாம சதம் திவ்யம் வைஷ்ணவம் கலு பாபஹம் !!

வ்யாஸேன கதிதம் பூர்வம் ஸர்வ பாப ப்ரணாஸனம் !

ய: படேத் ப்ராத ருத்தாய ஸ பவேத் வைஷ்ணவோ நர: !!

ஸர்வபாப விசுத்தாத்மா விஷ்ணு ஸாயுஜ்யமாப்னுயாத் !

சாந்த்ராயண ஸஹஸ்ராணி கன்யாதான சதானி ச !!

கவாம் லக்ஷ ஸஹஸ்ராணி முக்திபாகீ பவேன்னர: !

அஸ்வமேதாயுதம் புண்யம் பலம் ப்ராப்னோதி மானவ: !!

 இதி ஸ்ரீ விஷ்ணு சத நாம ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்


K.NESARAAJAN
SRI VISHNU SATHA NAAMA STOTHRAM , MP3,DOWNLOAD,SLOGAM

Monday 16 September 2013

ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்.MP3



ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம்.MP3

                                      

                                                      

பஜே விசேஷ சுந்தரம் ஸமஸ்தபாப கண்டனம்
ஸ்வபக்த சித்தரஞ்ஜனம் ஸ தைவ ராம மத்வயம்

 

அதீதமான அழகுள்ளவரும், அனைத்துப் பாவங்களையும் போக்குபவரும், தனது பக்தர்களின் மனதை களிக்கச் செய்கிறவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

ஜடாகலாப சோபிதம் ஸமஸ்தபாப நாஸனம்
ஸ்வபக்த பீதி பஜ்ஜனம் பஜேஹராம மத்வயம்

 

அழகான திருமுடியினை உடையவரும், எல்லாப் பாவங்களையும் அழிப்பவரும், தன் பக்தர்களின் பயத்தைப் போக்குகின்றவருமான இணையற்ற ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

நிஜ ஸ்வரூப போதகம் க்ருபாகரம் பவாபஹம்
ஸமம் சிவம் நிரஞ்ஜனம் பஜேஹ ராமமத்வயம்

 

ஆன்மாவின் வடிவினை உணர்த்தி உபதேசிப்பவரும், கருணைக்கடலும், பிறப்பு இறப்பு என்ற பயத்தைப் போக்குபவரும், எங்கும் எப்போதும் ஒரே சம நிலையிலிருப்பவரும், மங்களத்தைச் செய்கிறவரும், தோஷமற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை வணங்குகிறேன்.

ஸப்ரபஞ்ச கல்பிதம் ஹ்யநாமரூப வாஸ்தவம்
நிராக்ருதிம் நிராமயம் பஜேஹ ராமமத்வயம்



உலகத்தையே காப்பவரும் நாமரூப மற்றவரும், எப்பொழுதுமுள்ளவரும், உருவமற்றவரும், அழிவற்றவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை நமஸ்கரிக்கிறேன்.

நிஷ்ப்ரபஞ்ச நிர்விகல்ப நிர்மலம் நிராமயம்
சிதேகரூப ஸந்ததம் பஜேஹ ராமமத்வயம்

 

பந்த பாசங்களுக்கு அப்பாற்பட்டவரும், நிர்குணமானவரும், பாபமற்றவரும், அழிவற்றவரும், ஒளிமயமானவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை பூஜிக்கிறேன்.

பவாப்தி போதரூபகம் ஹ்யசேஷ தேஹ கல்பிதம்
குணாகரம் க்ருபாகரம் பஜேஹ ராம மத்வயம்

 

சம்சார சாகரத்தினைக் கடக்க உதவும் தோணி போன்றவரும், எல்லோருடைய ஆன்மாவிலும் வியாபித்துள்ளவரும், குணங்களுக்கு இருப்பிடமானவரும், கருணைக் கடலும் இணையற்றவருமான ஸ்ரீராமனை போற்றுகிறேன்.

மஹாவாக்ய போதகைர் விராஜமான வாக்பதை
பரப்ரஹ்மவ்யாபகம் பஜேஹ ராமமத்வயம்

 

மஹா வாக்கியத்தின் பொருளை வெளிப்படுத்துகின்ற சிறந்த சொற்களால் கூறப்படும் பரப்பிரம்மமாயும், எங்கும் நிறைந்திருப்பவராகவும், இணையற்றவருமாக உள்ள ஸ்ரீராமனை பூஜிக்கிறேன். (பரமசிவன் தேவி பார்வதியிடம் ராம என்ற மகாவாக்கியத்தை மூன்று முறை சொன்னாலே போதும், அது ஆயிரம் திருநாமங்களால் வழிபட்டதற்குச் சமம் என்று கூறியதை நினைவில் கொள்ளலாம்.)

சிவப்ரதம் ஸுகப்ரதம் பவச்சிதம் ப்ரமாபஹம்
விராஜமான தேசிகம் பஜேஹ ராமமத்வயம்
 


நன்மைகளைக் கொடுப்பவரும், சுகத்தை அளிப்பவரும், ஜனனமரண பயத்தைப் போக்குபவரும், அஞ்ஞானத்தை அழிப்பவரும், ஆசார்யனாய் பிரகாசிக்கிறவரும், இணையற்றவருமான ஸ்ரீராமனை துதிக்கிறேன்.

ராமாஷ்டகம் படத்யஸ்ஸுக கரம் ஸீபுண்யம் வ்யாஸேன பாஷித மிதம் ஸ்ருனுதே மனுஷ்ய
வித்யாம் ஸ்ரியம் விபுல ஸெளக்ய மனந்த கீர்த்தி ஸம்ப்ராவ்ய தேஹவிலயே லபதேச மோக்ஷம்


ஸ்ரீ ராம புஜங்காஷ்டகம் ஸம்பூர்ணம்

 
வியாசரால் சொல்லப்பட்டதும், எளிமையானதும், ஏராளமான புண்ணியத்தைத் தருவதுமான இந்த ராமாஷ்டகத்தைப் படிக்கிற, கேட்கிற எவரும் கல்வி, செல்வம், கலை, அளவற்ற சுகம், சர்வமங்களம் மற்றும் மங்காத புகழையடைந்து முடிவில் மோட்சத்தையும் பெறுவார் என்பது நிச்சயம்!




K.NESARAAJAN 
SRI RAMA BHUJANGA ASHTAGAM , MP3, HANUMAN , ANJANEYAR, MP3, FREE DOWNLOAD

Thursday 5 September 2013

தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3




தாரித்திரிய தஹண சிவ ஸ்தோத்திரம்.MP3
                                                       





விச்வேச்வராய நரகார்ணவதாரணாய
கர்ணாம்ருதாய சசிசேகர தாரணாய
கர்பூரகாந்தி தவளாய ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாயநம: சிவாய

கௌரீப்ரியா யரஜநீச கலாதராய
கலாந்தகாய புஜகாதி பகங்கணாய
கங்காதராய கஜராஜ விமர்தநாய
தாரித்ரியது; கதஹநாய நம: சிவாய

பக்திப்ரியாய பவரோக பயோபஹாய
உக்ராய துர்கபவஸாகர தாரணாய
ஜ்யோதிர்மயாய குணநாம ஸுஹ்ருந்யகாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

சர்மாம்பராய சவபஸ்மவிலேபநாய
பாலோக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய
மஞ்ரபாதயுகளாக ஜடாதராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய
ஹேமாம்சுகாய புவனத்ரணமண்டி தாய
ஆனந்த பூமிவரதாய தாமோயாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

பானுப்ரியாய பவஸாகரதார ணாய
காலாந்தகாய கமலாஸந பூஜிதாய
நேத்ரத்ரயாய சுபலக்ஷக்ஷ்ண லக்ஷிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய
நாகப்ரியாய நரகார்ண வதாரணாய
புண்யேஷு புண்யபரிதாயஸுரார்சிதாய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

முக்தேச்வராய பலதாயகணேச்வராய
கீதப்ரியாய வ்ருஷபேச்வர வவாஹராய
மாதங்கசர்மவஸநாய மஹேச்வராய
தாரித்ரியது: கதஹநாய நம: சிவாய

வஸஷ்டே நக்ருதம் ஸ்தோத்திரம்
ஸர்வரோக நிவாரணம்
ஸர்வஸ்ம்பத்கரம் சீக்ரம் புத்ர
பௌத்ராதி வர்த்தனம்
திரிஸந்த்யம்ய: படேந்நித்யம்
ஸஹிஸ்வர்கமவாப்னுயாத்

இதிஸ்ரீ வஸிஷ்ட விரசிதம் தாரித்ரிய
தஹந சிவஸ்தோத்திரம் ஸம்பூர்ணம்

ஓம் நமசிவாய

இந்த ஸ்லோகத்தை தினசரி மூன்று வேலை படிப்பதன் மூலம், பிறவிக்கடன், பொருளாதாரக் கடன் நீங்கி, நல்ல புத்திரர்களை அடைந்து தேக ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளோடு, சொர்க்க அனுபவத்தை அடைவார்கள்.

K.NESARAAJAN ,  Daridraya dahana stotram
என வசிஷ்டர் அருளிய தாரித்திரிய தஹன சிவ ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.





Friday 16 August 2013

உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்.MP3



 
உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்.MP3




நம: சிவாப்யாம் நவயௌநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்
நகேந்த்ர கந்யா வ்ருஷகேதநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீட் பாம்

நம: சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வர ப்ரதாப்யாம்
நாராயணே நார்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் வ்ருஷ வாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ண்வித்த்ர ஸுபூஜிதாப்யாம்
விபூதி பாடீர விலேநாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யைரபிவந்திதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜர ரஞ்ஜிதாப்யாம்
ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிஸ்திதி ஸம்ஹ்ருதிப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாமதி ஸுந்தராப்யா
மத்யந்த மாஸக்த ஹ்ருதம் புஜாப்யாம்
அசேஷலோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் கலிநாச நாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாஸ சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யா மசுபாபஹரப்யாம்
அசேஷலோகைக விசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யா ரதவா ஹநாப்யாம
ரவீந்து வைஸ்வாநர லோசநாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாம்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம்ச விவர்ஜிதாப்யாம்
ஜநார்தநாப் ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச் சதர மல்லிக தாமப்ருத்ப்யாம்
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்த்ரயீ ரக்ஷண பத்த ஹ்ருத்ப்யாம்
ஸமஸ்த தேவாஸுர பூஜி தாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீயம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய
ஸ ஸர்வ ஸெளபாக்யபலானி: புங்க்தே

சதாயுரந்தே சிவலோகமேதி




K.NESARAAJAAN
இந்த மந்திரங்களைப் படிப்பதால் சர்வ மங்களங்களும், எல்லா நன்மைகளும் கிடைப்பதுடன் எல்லா தீமைகளும் விலகும். கால காலனைத் துதிப்பதால் யம பயம் விலகி நீண்ட ஆயுளும் கிடைக்கும்.


சர்வ மங்களங்களும் உண்டாகும் 

Friday 9 August 2013

ஸ்ரீ ஹயக்ரீவ கவசம்.MP3




 ஸ்ரீ ஹயக்ரீவ கவசம்.MP3




பார்வதி உவாச --

தேவ தேவ மஹாதேவ கருணாகர சங்கர |

த்வயா ப்ரசாதசீலேன கதிதானி ரமாபதே ||

பஹூனாம் அவதாராணாம் பஹூனி கவசானி ச |

இதாநீம் ச்ரோதுமிச்சாமி ஹயாஸ்ய கவசம் விபோ ||


சிவ உவாச --


தேவி ப்ரியம்வதே துப்யம் ரஹஸ்யமபி மத்ப்ரியே |

கலசாம்புதி பீயூஷம் ஹயாஸ்ய கவசம் வதே ||

மஹா கல்பாந்த யாமின்யாம் சஞ்சரம்ஸ்து ஹரிஸ்வயம் |

லீலையா ஹயவக்த்ராக்ய ரூபமாஸ்தாய யோஹரத் ||

புத்ர வாத்ஸல்யதோ மஹ்யம் விரிஞ்சி ருபதிஷ்டவான் |

ஹயாஸ்ய கவசஸ்யாஸ்ய ரிஷிர்பிரம்மா ப்ரகீர்த்தித:||

சந்தோனுஷ்டுப் ததா தேவோ ஹயக்ரீவ உதாஹ்ருத: |

ஹ்ரௌம் பீஜம் து சமாக்யாதம் ஹ்ரீம் சக்திஸ் ஸமுதஹ்ருதா |

ஓம் கீலகம் ஸமாக்யாதம் உச்சைருத் கீலகம் ததா ||

லக்ஷ்மி கராம்போருஹ ஹேமகும்ப பீயூஷபூரை: அபிஷிக்த சீர்ஷம் |

வ்யாக்யாக்ஷ மாலாம்புஜ புஸ்தகானி ஹஸ்தைர் வஹந்தம் ஹயதுண்ட மீடே || 7

ஸுதாஸிக்தச்சிர: பாது பாலம் பாது சசிப்ரப: |

த்ருசௌ ரக்ஷது தைத்யாரி: நாஸாம் வாக்ஜ்ரும்ப வாரிதி: || 

ச்ரோத்ரம் பாது ஸ்திரச்ரோத்ர: கபோலௌ கருணாநிதி: |

முகம் பாது கிராம் ஸ்வாமீ ஜிஹ்வாம் பாது ஸுராரிஹ்ருத் ||

ஹனூம் ஹனுமதஸ்ஸேவ்ய:கண்டம் வைகுண்ட நாயக: |

க்ரீவாம் பாது ஹயக்ரீவ: ஹ்ருதயம் கமலாகர: || 

உதரம் விஷ்வப்ருத் பாது நாபிம் பங்கஜலோசன: |

மேட்ரம் ப்ரஜாபதி: பாது ஊரூ பாது கதாதர: ||

ஜானுனீ விஷ்வப்ருத் பாது ஜங்கே ச ஜகதாம்பதி : |

குல்பௌ பாது ஹயத்வம்ஸீ பாதௌ விஞானவாரிதி: !! 

ப்ராச்யாம் ரக்ஷது வாகீச: தக்ஷிணச்யாம் வராயுத: |

ப்ரதீச்யாம் விஷ்வப்ருத் பாது உதீச்யாம் சிவவந்தித: ||

ஊர்த்வம் பாது ஹரிஸ் ஸாக்ஷாத் அத: பாது குணாகர: |

அந்தரிக்ஷே ஹரி: பாது விஷ்வத: பாது விஷ்வஸ்ருட் ||

ய எதத் கவசம் தீமான் சன்னஹ்யேன்னிஜ விக்ரஹே |

துர்வாதி ராக்ஷஸ வ்யூஹை: ஸ கதாசின்ன பாத்யதே ||

படேத் ய எதத் கவசம் த்ரிசந்த்யம் பக்தி பாவித: |

மூடோபி கீஷ்பதிஸ்பர்தீ ஜாயதே நாத்ர ஸம்சய ||



|| இதி ஸ்ரீ ஹயக்ரீவகவசம் ஸம்பூர்ணம் ||


K.NESARAAJAN

Monday 5 August 2013

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் .MP3





ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் .MP3

                       


விஸ்வம் தர்பண த்ருஷ்யமான நகரீ துல்யம் நிஜாந்தர்கதம்
பஷ்யன்னாத்மனி மாயயா பஹிரிவோத்பூதம் யதா நித்ரயயா
ய:ஸாக்ஷாத்குருதே ப்ரபோதசமையே ச்வாத்மான மேவாத்வயம்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

பீஜஸ்யாந்த ரிவாங்குரோ ஜகதிதம் பிராங் நிர்விகல்பம் புன:
மாயா கல்பித தேஷகாலகலனா வைசித்ர்ய சித்ரீக்ருதம்
மாயாவீவ விஜ்ரும்பயத்யபி மஹா யோகீவ ய: ச்வேச்சயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

யச்யைவ ச்புரணம் சதாத்மக மசத் கல்பார்தகம் பாஸதே
சாக்ஷாத் தத்வமசீதி வேதவசஸா யோ போத யாத்யாஸ்ரிதான்
ய: சாக்ஷாத் கரணாத் பவேன்ன புனராவ்ருத்திர் பவாம்போனிதௌ
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

நானாச்சித்ர கடோதர ஸ்தித மஹா தீப பிரபா பாஸ்வரம்
ஞானம் யஸ்யது சக்ஷுராதி கரண த்வாரா பஹி:ச்பந்ததே
ஜானா மீதி தமேவ பாந்தம் அனுபாத் ஏதத்சமஸ்தம் ஜகத்
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

தேஹம் பிராணமபீந்த்ரியாண்யபி சலாம் புத்திம் ச சூன்யம் விது:
ச்த்ரீபாலாந்த ஜடோபமா ஸ்த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின:
மாயாசக்தி விலாச கல்பித மஹா வ்யாமோஹ சம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

ராஹு கிரஸ்த திவாகரேந்து சத்ருசோ மாயா சமாச் சாதநாத்
சன்மாத்ர: கரணோப சம்ஹரணதோ யோ பூத் ஸுஷுப்த: புமான்
ப்ராகச்வாப் சமிதி பிரபோத ஸமயே ய: ப்ரத்யபிக்ஞாயதே
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

பால்யாதிஷ்வபி ஜாக்ரதா திஷிததா சர்வாஸ்வ வச்தாத்வபி
வ்யாவ்ருத்தா ஸ்வனுவர்த்தமானமஹ மித்யந்த ச்புரந்தம் சதா
ஸ்வாத்மானம் பிரகடீகரோதி பஜதாம் யோ முத்ரயா பத்ரயா
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

விஸ்வம் பஸ்யதி கார்ய காரண தயா ஸ்வச்வாமி சம்பந்தத:
சிஷ்யாசார்யதயா ததைவ பித்ருபுத்ரா த்யாத்மனா பேதத:
ஸ்வப்னே ஜாக்ரதிவா ய ஏஷ புருஷோ மாயா பரிப்ராமித:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

பூரம்பாம்ச்ய நாளோ நிலோம்பர மஹர் நாதோ ஹிமாம்சு புமான்
இத்யாபாதி சராச்சராத்மகமிதம் யச்யைவ மூர்த்யஷ்டகம்
நான்யத்கிஞ்சன வித்யதே விம்ருசதாம் யஸ்மாத் பரச்மாத்விபோ:
தஸ்மை ஸ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே

சர்வாத்மத்வமிதி ச்புடீக்ருதமிதம் யச்மாதமுஷ்மின் ச்தவே
தேனாச்ய ஸ்ரவணாத் ததர்த்த மனநாத்யானாச்ச சங்கீர்த்தநாத்
சர்வாத்மத்வமஹா விபூதி ஸஹிதம் ச்யாதீஸ்வரத்வம் ஸ்வத:
சித்தயே தத்புனரஷ்டதா பரிணதம் சைஸ்வர்ய மவ்யாஹதம் 




Thursday 1 August 2013

ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். MP3

                       


ஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். MP3




ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்
நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷீத
 


 ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது.... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும்


ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரிவேதி யோவதேத்
தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத்
 


ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும்


ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி
விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம
 



ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.


ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்
வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்



ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.


 இதை அனுதினமும் படித்து ஹயக்ரீவரை வழிபட கல்வி ஞானம் ஸித்திக்கும் 




Wednesday 10 July 2013

அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம்.MP3 - ஆதி சங்கரர் அருளியது





அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம்.MP3

                                                  


சாம்பேய கௌரார்த சரீரகாயை
கர்பூர கௌரார்த சரீரகாய
தம்மில்லகாயை ச ஜ்டாதராய
நம:சிவாயை ச நம:சிவாய 

தங்க நிறங்கொண்ட பகுதி உடலையுடையவளும், கர்பூர வெண்ணிறமான பகுதி சரீரத்தையுடையவரும், கொண்டயிட்ட கேசத்தையுடையவளும், ஜடை தரித்தவரும் ஆகிய சிவைக்கும் சிவனுக்கும் நமஸ்காரம்.

கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய 
க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
நம:சிவாயை ச நம:சிவாய 

கஸ்தூரி கலந்த குங்குமம் பூசியவளும், மன்மதனை இயங்குபவளுமான பார்வதிக்கு நமஸ்காரம். சிதைப்பொடி பூசியவரும், மன்மதனை வீணாக்கியவருமான சிவனுக்கு நமஸ்காரம்.


ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய 
ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
நம:சிவாயை ச நம:சிவாய 
 

பார்வதீ தனது கையில் தங்கத் தோல்வளையும், காலில் கங்கணமும், சதங்கையும் அணிந்துள்ளாள் அவை கிலுங்கி ஒசையெழுப்புகின்றன. பரமேச்வரனோ திருவடிகளில் நாககாற்சதங்கையும், தோள்வளையும் அணிந்துள்ளார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.


விசால நீலோத்பல லோசனாயை
விகாஸி பங்கேருஹ லோசனாய
ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
நம:சிவாயை ச நம:சிவாய 

இரட்டைப் படையில் மலர்ந்த கரு நெய்தல் பூ போன்ற கண்களையுடையவள் பார்வதீ. ஒற்றைப்படையில் மலர்ந்த தாமர மலரொத்த கண்களையுடையவர் பாரமேச்வரன். இவ்விருவருக்கும் நமஸ்காரம்.


மந்தார மாலா கலிதாலகாயை
கபால மாலாங்கித கந்தராய  
திவ்யாம்பராயை ச திகம்பராய
நம:சிவாயை ச நம:சிவாய 

மிக நேர்த்தியான பட்டும், மந்தார மாலையும் அணிந்து காட்சி தருகிறாள் பார்வதீ. திகம்பரனாயும், கழுத்தில் கபால மாலையணிந்தும் காட்சி தருகிறார் பரமேச்வரன். மங்கள கரமான இந்த தம்பதியருக்கு நமஸ்காரம்.


அம்போதர ச்யாமல குந்தலாயை
தடித் ப்ரபா தாம்ரஜடாதராய  
நிரீச்வராயை நிகலேச்வராய
நம:சிவாயை ச நம:சிவாய 

அகிலாண்டிசேவரியாக, நீருண்ட மேகமெனக் கரிய குந்தகக் தோகையுடன் பார்வதியும், அகிலாண்டகோடி பிரம்ம நாயகராய, மின்னலொளி போன்ற ஜடையுடன் பரமேச்வரனும் விளங்குகின்றார். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.

ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய காயை
ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய  
ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
நம:சிவாயை ச நம:சிவாய 

உலகப் படைப்பையே நோக்கங்கொண்டு நடனம் புரிகிறாள் உலக மாதா பார்வதீ, உலகத் தந்தையாக, பிறிதொருகாலம், உலக முடிவையாக்கும் தாண்டவம் புரிகிறார் பரமேச்வரன். அவ்விருவருக்கும் நமஸ்காரம்.


ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய  
சிவான்விதாயை ச சிவான்விதாய
நம:சிவாயை ச நம:சிவாய 

ஒளிமிக்க வைரங்கள் பதித்த குண்டலத்துடன் மங்களமாய் பார்வதீயும், மிளிரும் நாகபூஷணமணிந்து மங்கள ஸ்வரூபியாய் சிவனும் காட்சி தர நான் அவர்களை நமஸ்கரிக்கிறேன்.


ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம் யோ
பக்த்யா ஸ மான்யோ புவி தீர்கஜீவீ  
ப்ராப்னோதி ஸெளபாக்ய மனந்தகாலம்
பூயாத் ஸதா தஸ்ய ஸமஸ்த ஸித்தி: 

விருப்பங்களை நிறைவேற்றும் இவ் எட்டு ஸ்லோகங்களை பக்தியுடன் படிப்பவர் பூவுலகில் மதிப்பிற்குறியவராய் நீண்ட ஆயுள் பெற்று எல்லா ஸெளபாக்கியங்களையும் பெற்றுய்வர்.

அர்த்த நாரீச்வர ஸ்தோத்ரம் முற்றிற்று.  

Friday 7 June 2013

நரசிம்மர் பஞ்சாம்ருத ஸ்தோத்திரம்.MP3



http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/lc.jpg 









அஹோ பிலம் நாராஸிம்ஹம்
கத்வாராம ப்ரதாபவான்
நமஸ்க்ருதவா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்
அஸ்தௌஷீத்கமலாபதிம்

கோவிந்த கேசவ ஜனார்த்தன வாஸுதேவ
விச்வேச விச்வ மதுஸுதன விச்வரூப
ஸ்ரீ பத்மனாப புரு÷ஷாத்தம புஷ்கராக்ஷ

நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே
தேவாஸ்ஸமஸ்தா: கலுயோகிமுக்யா
கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச
யத்பாதமூலம் ஸததம் நமந்தி
தம்நாராஸிம்ஹம் ஸரணம் கதோஸ்மி

வேதாந் ஸமஸ்தாந் கலுசாஸ்த்ரகர்ப்பாந்
வித்யாபலேகீர்திம தீஞ்சலக்ஷ்மீம்
யஸ்யப்ரஸாதாத் ஸததம் லபந்தே
தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி

ப்ரும்மா சிவஸ்த்வம் புரு÷ஷாத்தமஸ்ச
நாராயணோஸெள மருதாம் பதிஸ்ச
சந்த்ரார்க்கவாய்வக்னி ம்ருத்கணாஸ்ச
த்வமேவதம்த்வாம் ஸததம் நதோஸ்மி

ஸ்வப்னேஸபி நித்யம் ஜகதாம்த்ரயாணாம்
ஸ்ரஷ்டாசஹந்தா விபுப்ரமேய
த்ரா: தாத்வமேகஸ்த்ரிவிதோவிபிந்த
தம் த்வாம்ந்ருஸிம்ஹம் ஸததம் நதோஸ்மி

இதிஸ்துத்வா ரகுச்ரேஷ்ட
பூஜயமாஸா தம்விபும்
புஷ்பவ்ருஷ்டி: பபாதாசு
தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி

ஸாதுஸாத்விகிதம் ப்ரோசு
தேவாரிஷி கணைஸ்ஸஹ
தேவா ஊசு
ராகவேணக்ருதம் ஸ்தோத்ரம்
பஞ்சாம்ருதமனுத் தமம்
படந்தியேத்விஜ வரா
தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத

ஸ்ரீ நரசிம்ம பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.




Monday 3 June 2013

இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க .MP3


சிவபுராணம்

(திருப்பெருந்துறையில் அருளியது தற்சிறப்புப் பாயிரம்)




                    நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க.MP3


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5


வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15


ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன்
அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
25


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 



எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35


வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே
ஓ என்று என்று 85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து
சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95


திருச்சிற்றம்பலம்


--------------------------------------------------------------------------------------------------------



பொல்லா வினையேன்
நின் பெரும்சீர்
 புகழுமாறு ஒன்று அறியேன் 

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே 
மெய்யா விமலா விடைப்பாகா

வேதங்கள் ஐயா எனவோங்கி 
ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

எஞ்ஞானம் இல்லாதேன் 
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே



இன்பப் பெருமானே

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்  வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் 


செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்


உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யே 

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
 

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 


வல்வினையேன் தன்னை 

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
 

மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,


விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
 

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
 

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே


 வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே


 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
 

கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே


அல்லல் பிறவி அறுப்பானே 
சொல்லற்கு அரியானைச் சொல்லிய பாட்டின் பொருள் 
உணர்ந்து சொல்லித் திருவடிக்கீழ்

 சிவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
 முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்


 ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்


 சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே 


மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
 

 பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்


பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே 
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
 

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே


 என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே



 ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
 

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
 

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி  

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 


 ------------------------------------------------------------------------------------------------------

12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)






 live dharshan -  நேரடி ஒளிபரப்பு  மூலஸ்தானத்தில் இருந்து 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு  மூலஸ்தானத்தில் இருந்து


http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm



ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   மூலஸ்தானத்தில் இருந்து

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 


 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   மூலஸ்தானத்தில் இருந்து


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx


இளையராஜா இசையமைத்த--திருவாசகம் - திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம் - பூவேறு கோனும் புரந்தரனும்.MP3

 

திருக்கோத்தும்பி - சிவனோடு ஐக்கியம்

                        

    பூவேறு கோனும் புரந்தரனும்.MP3

திருவாசகம் (மாணிக்க வாசகர் அருளியது)

(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

திருச்சிற்றம்பலம்


பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 215

நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்
வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 216

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்
அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 217

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்
கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 218


அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே
பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற
மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 219

வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 220


சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்
கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை
ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்
சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 221

ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு
நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த
என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்
குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 222

கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்
சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு
மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த
கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 223

நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து
நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்
தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்
தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 224

வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே
கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட
அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்
பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 225

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 226


நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 227

கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே
மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி
அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட
திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 228

நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்
தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்
வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்
தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 229


உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்
கள்ளப் படாத களிவந்த வான்கருணை
வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்
கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 230


பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்
மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட
ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்
செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 231

தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்
சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 232

கள்வன் கடியன் கலதியிவன் என்னாத
வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே
உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்
தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 233

பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று
ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 234

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)





 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx

இளையராஜா இசையமைத்த- - திருவாசகம் - யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்- பூவார் சென்னி.MP3

யாத்திரைப் பத்து - அனுபவ அதீதம் உரைத்தல்

                          

                             பூவார் சென்னி மன்னனெம்.MP3

(தில்லையில் அருளியது - அறுசீர் ஆசிரிய விருத்தம் )

திருச்சிற்றம்பலம்

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 605 



புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 606

தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 607


அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 608

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 609


புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 610

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 611


பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 612

சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 613

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 614

திருச்சிற்றம்பலம்

-----------------------------------------------------------------------------------------------------------
12 ஜோதிர்லிங்கம்கோவில்கள் 

1.சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)

2.மல்லிகார்ஜுன ஜோதிர்லிங்கம் கோயில் -ஸ்ரீசைலம் (ஆந்திரா)

3. மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)

4. ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)

5. காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)

6. கேதாரேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் -இமயம் (உத்திரப்பிரதேசம்)

7. நாகேஷ்வர் ஜோதிர்லிங்கம கோயில் -நாகநாதம் (மகராஷ்டிரம்)

8. கிரிஷ்னேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

9. த்ரியம்புகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோயில் - திரியம்பகம் (மகாராஷ்டிரம்)

10.  ராமேஷ்வரம் ஜோதிர்லிங்கம் கோயில் -இராமேஸ்வரம் (தமிழ்நாடு)

11.  பீமசங்கர் ஜோதிர்லிங்கம் கோயில் - பீமசங்கரம் (மகராஷ்டிரம்)

12.  வைத்யநாத் ஜோதிர்லிங்கம் கோயில் -பரளி (மகராஷ்டிரம்) 

 

சோமநாத் ஜோதிர்லிங்கம் கோயில் - சோமநாதம் (குஜராத்)





 live dharshan -  நேரடி ஒளிபரப்பு 

 http://www.somnath.org/live-darshans.aspx 


மஹா காலேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் -உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)



 live dharshan - நேரடி ஒளிபரப்பு 

http://mahakaleshwar.nic.in/livedarshanflv.htm


ஓம்காரேஷ்வர் ஜோதிர்லிங்கம் கோயில் - ஓம்ஹாரம் (மத்தியப் பிரதேசம்)



live dharshan - நேரடி ஒளிபரப்பு   

http://www.shriomkareshwar.org/LiveDarshan.aspx 

 
காசிவிஸ்வநாதர் ஜோதிர்லிங்கம் கோயில் -வாரனாசி எனும் காசி (உத்திரப்பிரதேசம்)




live dharshan - நேரடி ஒளிபரப்பு   


http://www.shrikashivishwanath.org/en/online/live.aspx