SHIRDI LIVE DARSHAN

Wednesday 29 February 2012

தென்கச்சி கோ சுவாமிநாதன் மற்றும் சுகி சிவம் அவர்களின் சிரிப்பு வெடிகள்

தென்கச்சி கோ சுவாமிநாதன்  மற்றும் சுகி சிவம் அவர்களின்


      சிரிப்பு வெடிகள் .MP3            


http://www.4shared.com/mp3/c7h6tDon/Suki_Sivam_Thenkachi__Others_-.html


Suki Sivam,Thenkachi,Thenkachi KoSwaminathan, Thenkachi




Friday 24 February 2012

அஷ்டகம்,கவசம், ஸ்தோத்ரம் - MP3

ஸத்ய சாயி கவசம்


ஸத்ய சாயி கவசம்

ஊழ்வினையும் தொடர்வரு பழவினனயும் ஸாயி நாமம் சொல்லப் பறந்திடுமே, பர்த்தி ஸாயி காக்க என்று படிப்போர்க்குக் கிடைக்கும் இகபர இனபமே.


தாயாகத் தன்னகத்தே ஈர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
சேயன் தன் அறிவு மிளிர சிரமதைக்காக்க
ஓங்காரத்தில் வாழ் ஆனந்த ரூபி ஸ்ரீ ஸாயிராம்
ஒருமையாம் மனதில் அமர்ந்து நெற்றியினைக் காக்க
எம்மதமும் சம்மதித்திடும் ஸ்ரீ ஸாயிராம்
செம்மை சேர் வதனமதைச் சீருடன் காக்க
கீதமழை பொழிந்த ஆழிமழைக் கண்ணன் ஸ்ரீ ஸாயிராம்
தீது நோக்கா திசைவிளக்கென இரு கண்ணினைக் காக்க
அலை போன்று அடங்காது செயலுறும் ஸ்ரீ ஸாயிரரம்
புல்லறிவைப் புனிதபடுத்தி இரு புருவமதைக் காக்க
விழலாகி நொந்தவரின் விதி மாற்றி விடும் ஸ்ரீ ஸாயிராம்
அழியாத நின் புகழ் கேடக இரு செவியினைக் காக்க
ஈஸ்வராம்பா ஈன்ற ஈசனவன் ஸ்ரீ ஸாயிராம்
ஈடில்லாது ஈந்து நாசியினைக் காக்க
நந்தா விளக்காம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
நல்லறம் தழைக்க வந்தவன் இரு கன்னமதைக் காக்க
பற்றில்லாப் பரமனவன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பற்று வைத்தோரைப் பேணுபவன் பற்களைக் காக்க
ஆரவாரமற்ற அமைதி உருவம் ஸ்ரீ ஸாயிராம்
கோரிய வரமளித்து என் நாவினைக் காக்க ஒளிவீசக் காட்சி அளிப்பவன் ஸ்ரீ ஸாயிராம்
ஒழுக்க ஆட்சி புரியும் அவன் கழுத்தினைக் காக்க
நாளெல்லாம் பக்தரைச் சிந்தையில் நிறுத்தும் ஸ்ரீ ஸாயிராம்
வாழ்வெலாம் நயந்து எங்கள் இரு தோளினைக் காக்க
கற்பகச் சோலையின் கனி போலும் ஸ்ரீ ஸாயிராம்
பொற்கையினால் திருநீறு ஈந்து இரு கரமதைக் காக்க
வேத நாயகன் ஆதம் போதகன் ஸ்ரீ ஸாயிராம்
பேதமொழிந்து எம் முதுகினைக் காக்க
தஞ்சமடைவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வாஞ்சையுடன் விரைந்து வந்து நெஞ்சமதைக் காக்க
அறநெறி காட்டும் ஸ்ரீ ஸாயிராம்
மாறாத அன்புடன் மார்பகம் காக்க
ஏன் எவரென்று கேளாத ஸ்ரீ ஸாயிராம்
பரிவுடன் வந்தெமது இடையினைக் காக்க
கருணையின் கரையிலாக் கடல் ஸ்ரீ ஸாயிராம்
தருணத்தில் வந்தெமது இடையினைக் காக்க
பெற்றவர் தம் பெருமை சேர்க்கும் ஸ்ரீ ஸாயிராம்
கொற்றவன் நீ குறியதனைக் காக்க
இச்சா கிரியா ஞான சக்தியாம் ஸ்ரீ ஸாயிராம்
இதய நாயகன் இரு தொடையினைக் காக்க
கற்றவரும் வியந்து போற்றும் கவிதை தெய்வம் ஸ்ரீ ஸாயிராம்
முற்றாத அன்புடன் எங்கள் இரு பாதங்களைக் காக்க
சத்யதர்ம போதனைகளின் ஊட்டம் ஸ்ரீ ஸாயிராம்
அவை என் அங்கமெல்லாம் நிறைந்து காக்க
சாதகர் நினைவில் ஒளிர்பவன் ஸ்ரீ ஸாயிராம் - எம்
பேத மதியினைச் செம்மையுறக் காக்க
தஞ்சம் என்று வருவோரைத் தாங்கி அருளும் ஸ்ரீ ஸாயிராம்
வஞ்சகரின் அஞ்சுதலின்றும் எமைக் காக்க
சத்தியஸ்வரூபன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
சத்தியம் பிறழாமல் எமைக் காக்க
தர்மஸ்தாபகன் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
தரம் தளராமல் எமைக் காக்க
சாந்தஜோதி எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
காந்தமாகி ஈர்த்து எமைக் காக்க
பிரேமஸாகரம் எங்கள் ஸ்ரீ ஸாயிராம்
பவ ஸாகரத்திலிருந்து எமைக் காக்க
பளபள என் மின்னும் குளிர்மணி விழியான் ஸ்ரீ ஸாயிராம்
மாளாத குஷ்டமதை மாய்த்துக் காக்க
வேதாகம மூல ஞான வித்தகன் ஸ்ரீ ஸாயிராம்
வாதம் வலிப்பு பித்தமதைப் போக்கிக் காக்க
செக்கச் சிவந்த பட்டுடையான் ஸ்ரீ ஸாயிராம்
சொக்குச் சிரங்கு குன்மமதைத் தகர்த்திக் காக்க
கலையனைத்தும் படைத்த ஞானப்பிரகாசன் ஸ்ரீ ஸாயிராம்
சூலை சயம் அகல அருள்வழி நோக்கிக் காக்க
மண்விண் ஊர்த்தி மீதும் நீரிலும் நெருப்பிலும் ஸ்ரீ ஸாயிராம்
கண் மலர் வீசி எவ்விடத்திலும் காக்க
நடக்கையில் கிடக்கையில் நவில்கையில் நிமிர்கையில்
நாடி வந்து ஓடி வந்து ஸாயிராம் காக்க
என் அப்பன் என் அன்னை ஸ்ரீ ஸாயிராம்
என்றென்றும் அகந்தன்னிலிருந்து காக்க
பக்த பராதீனன் எங்கள் ஸாயிராம்
முக்தி நமக்களித்து நன்மையுடன் காக்க
இசைப்பாட இன்குரல் ஈவாய் ஸத்யஸாயி
இனியகுணம் எமை அடையக் காவாய் ஸத்யஸாயி
தன்னலம் கருதா தகைமை ஈவாய் ஸத்யஸாயி
பிறநலம் பேணும் பெருமை தருவாய் ஸத்யஸாயி
இன்பதுன்ப சமநிலை இருக்கச் செய்வாய் ஸத்யஸாயி
ஈகை இரக்கம் இவையாவும் இங்கு தருவாய் ஸத்யஸாயி
நீ நான் என்ற இரண்டு ஆகாய் ஸத்யஸாயி
நான், நீ ஒன்றெனத் தோற்றுவாய் ஸத்ய ஸாயி
அன்றலர்ந்த அன்பு மலர் எங்கள் ஸாயி மன்னன்
என்றும் உலராத தம் மலரடி சேர்க்க!
சோதனைப் பல ஈந்தாலும் போதனையால்
வேதனை தீர்க்கும் ஸாயி எங்கள் பதியவன்
ஓம் ஓம் எனும் ஓங்காரத்தின் உறைவிடமே ஸத்யஸாயி
ஒரு நினைவாக நினை தியானிக்க ஸத்யஸாயி
நீங்காத பக்திதனை அருள ஸத்யஸாயி
நின் கமல் மலர்ப்பாதம் சரணம்
சரணம் சரணம் சத்ய ஸாயி
இதை நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும் படிக்க கஷ்டங்கள் விலகுகின்றன.
சர்வே ஜனானான் சுகினோ பவந்து சாயிராம்.

sai baba , sathya sai baba , baba ,kavasam 

விநாயகர் அஷ்டகம் .MP3



விநாயகர் அஷ்டகம் MP3




ஏக தந்தம் மஹாகாயம் தப்தகாஞ்சன ஸன்னிபம்|

லம்போதரம் விஸாலாக்ஷம் வந்தே அஹம் கணநாயகம்.||(1)





மௌஞ்ஜீக் கிருஷ்ணா ஜினதரம் நாகயக்ஞோபவீதினம் |

பாலேந்து விலஸன் மௌலிம் வந்தே அஹம் கணநாயகம் ||--(2)



அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ரூபி: பரிபாலிதம் |

பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே அஹம் கணநயகம் ||--(3)



சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலாவிபூஷிதம் |

சித்ர ரூபதாம் தேவம் வந்தே அஹம் கணநாயகம்||..(4)



கஜவக்த்ரம் ஸுரஸ்ரேஷ்டம் கர்ண சாமர பூஷிதம் |

பாஸாங்குஸதரம் தேவம் வந்தே அஹம் கணநாயகம். -------(5)





மூஷிகோத்தம மாருஹ்ய தேவாஸுர மஹாஹவே |

யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே அஹம் கணநாயகம்...(6)





யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரைஸ்ஸதா |

ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே அஹம் கணநாயகம்.---(7)



ஸர்வ விக்ன கரம் தேவம் ஸர்வ விக்னவிவர்ஜிதம் |

ஸர்வ ஸித்தி ப்ரதா தாரம் வந்தே அஹம் கணநாயகம்.--(8)





கணாஷ்டக மிதம் புண்யம் பக்தி தோ ய: படேந் நர: |

விமுக்தச் ஸர்வபாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி ||..(9) 


--------------------------------------------------------------------------------------------------




பொருள்:


ஒரே தந்தத்தை உடையவரே! பெருத்த சரீரத்தைக் கொண்டவரே! உருக்கிய பொன்னைப் போன்ற நிறமுடையவரே! தொப்பைக் கணபதியே! விசாலமான பார்வையை உடையவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை நமஸ்கரிக்கின்றேன்(1)

முஞ்சாப்புல், கிருஷ்ணார்ஜினம் இவற்றை அணிந்தவரே! நாகத்தைப் பூணூலாகத் தரித்திருப்பவரே! தலையிலே பாலச்சந்திரனைச் சூடிக்கொண்டிருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணேச மூர்த்தியை வணங்குகின்றேன்...(2)

சக்தியின் மனதை மகிழ்விபவரே! சப்த மாதாக்களாலும் ரட்சிக்கப்பட்டவரே! பக்தர்களிடம் அன்பு கொண்டவரே! மதம் கொண்டவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.--(3)



பலவித ரத்தினங்களாலும், பலவித மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவரே! பல வித ருபத்தைத் தரிப்பவரே! தேவ பூத கணங்களின் தலைவருமான மகா கணபதியை வணங்குகின்றேன்..(4)

யானை முகத்தைக் கொண்டவரே! தேவர்களுக்கெல்லாம் முதன்மையானவரே! செவிகளாகின்ற விசிறிகளால் அலங்கரிக்கப் பட்டவரே! பாசம், அங்குசம் இவற்றைத் தரித்திருப்பவரே! பூத கணங்களின் தலைவரான கணபதியை வணங்குகின்றேன்.---(5)



தேவ-அசுரப் போரில் மூஞ்சூரின் மேல் ஏறிப் போர்புரிந்து ஜெயம் பெற்றவரே! சிறந்த பராக்கிரமத்தை உடையவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகாகணபதியை வணங்குகின்றேன்.--(6)



யட்சர், கின்னரர், கந்தர்வர், சித்தர், வித்யாதரர்களால் சதா பூஜிக்கப்படுபவரே! பெரிய புண்ணியரே! பூதகணங்களின் தலைவரான மகா கணபதியை வணங்குகின்றேன்.--(7)



விக்னேஸ்வரரைத் தூஷிப்பவர்க
ளுக்குத் தடையைச் செய்கின்றவரே! தேவ தேவரே! பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளை நிவர்த்திப்பவரே! எல்லாப் பாக்கியங்களையும் தருபவரே! பூத கணங்களின் தலைவரான ஸ்ரீ மகா கணபதியை வணங்குகின்றேன்.



இந்தக் கணாஷ்டகம் மகா புண்ணியமானது. பக்தியோடு இதனால் கணேசரைத் தியானிப்பவருக்கு எல்லாக் காரியங்களும் வெற்றியாகும். எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டு முடிவில் கைலாச லோகத்தையும் அடைவர் என்பதில் சந்தேகம் இல்லை..(9)


vinayagar ashtagam ,vinayagar ashtakam,ashtakam, ashtagam , ganapathi ashtagam , ganapathi ashtakam , mp3, ega thantham ,

Thursday 23 February 2012

சுந்தர காண்டம்.MP3

  சுந்தர காண்டம் . MP3 Audio Book


சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ? ,  படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ? , எப்படி படிக்க வேண்டும்?

 


சம்ஸ்கிருத மூலமும் அதன் விளக்கங்களுடன் 
முழுமையான சுந்தர காண்டம்  28 பாகங்களாக கீழே உள்ளது 


நாம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை எல்லாம் தவிடு பொடியாக்கி மங்களம் தரும் ஒரு பாராயணத்தை நமது முன்னோர் வழி வழியாகச் செய்து பலனை அனுபவித்து வந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட அற்புதமான பாராயணம் ராமாயணத்தில் ஐந்தாவது காண்டமாக அமைந்துள்ள சுந்தர காண்டம் பாராயணம் ஆகும்.
சுந்தர காண்டம் அனுமனின் செயல் திறத்தைச் சொல்லும் அற்புத காண்டம். இதில் பேசப்படும் அனைத்துமே சுந்தரமான விஷயங்கள்.
24,000 சுலோகங்கள் கொண்ட ராமாணத்தில் சுந்தரகாண்டத்தில் மட்டும் 2885 சுலோகங்கள் 68 அத்தியாயங்களில் இடம் பெறுகின்றன.

வேத மந்திரங்கள் தரும் அனைத்து மங்களத்தையும் தரவல்லது சுந்தரகாண்ட பாராயணம்.

68 அத்தியாயங்கள் உடைய இந்த காண்டத்தை ஒரே நாளில் படித்து முடிப்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு சுலோகம் என்பது வரை படிக்க முன்னோர்கள் அனுமதி அளித்துள்ளனர். என்றாலும் கூட ஒரு நாளைக்கு 7 அத்தியாயங்கள் வீதம் இதை 68 நாட்களில் ஏழு முறை படிக்கக்கூடிய 7 அத்தியாய பாராயணம் எல்லா நலன்களையும் விரைவில் அளிக்கவல்லது.

பாராயணம் ஆரம்பிக்கும் முன்னர் படிக்க வேண்டிய சுலோகங்களைப் படித்து ஏழு அத்தியாயங்கள் படித்து முடிந்தவுடன் இறுதியில் படிக்க வேண்டிய சுலோகங்களையும் அன்றாடம் படிப்பது வழக்கமாக இருக்கிறது.

 ஒருமுறை 68 அத்தியாயங்கள் படித்து முடிக்கும் போது யுத்த காண்டத்தின் 131-வது அத்தியாயமான ராம பட்டாபிஷேக அத்தியாயத்தையும் படிக்க வேண்டும் என்பது மரபாகும்.

ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க தகுந்தபடி சுந்தரகாண்ட பாராயணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் தோஷ நிவர்த்தி பெறுவதோடு நலன்களையும் பெற முடியும்.

 ஒவ்வொரு நலனைப் பெறவோ அல்லது ஒவ்வொன்றாக தோஷத்தை நீக்கவோ முயற்சி செய்வதை விட தினசரி சுந்தர காண்ட பாராயணம் செய்தால் நமது தோஷங்கள் எல்லாம் தாமாகவே விலகுவதோடு நாம் கேட்காமலேயே அனைத்து பலன்களும் நலன்களும் தாமாக நம்மை வந்து அடையும்.

  http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSYsqzM8vfcpKMiOzch3565rjLYGZ4v69dh-eCbbptcLD_mdYZV

To Download MP3

  சுந்தர காண்டம் . MP3 Audio Book


01-Sundara Kandam-01.mp3      27.3 MB   29:49 Min


02-Sundara Kandam-02.mp3      27.05 MB 30:08 Min

03-Sundara Kandam-03.mp3      27.5 MB  30:08 Min

04-Sundara Kandam-04.mp3      30.9 MB  33:49 Min

05-Sundara Kandam-05.mp3      27.6 MB  30:09 Min

06-Sundara Kandam-06.mp3      27.5 MB  30:09 Min

07-Sundara Kandam-07.mp3      27.4 MB  29:55 Min

08-Sundara Kandam-08.mp3     10.04 MB  11:24 Min

09-Sundara Kandam-09.mp3     27.6 MB 30:10 Min
  
10-Sundara Kandam-10.mp3    27.6 MB  30:09 Min

11-Sundara Kandam-11.mp3     27.6 MB 30:13 Min

12-Sundara Kandam-12.mp3    25.5 MB 27:54 Min

13-Sundara Kandam-13.mp3    27.5 MB 30:04 Min

14-Sundara Kandam-14.mp3    27.4 MB 29:54 Min

15-Sundara Kandam-15.mp3    27.5 MB 30:02 Min

16-Sundara Kandam-16.mp3    27.4 MB 29.56 Min
 
17-Sundara Kandam-17.mp3    9.13 MB 9:58 Min

18-Sundara Kandam-18.mp3    27.4 MB 29:58 Min

19-Sundara Kandam-19.mp3    27.5 MB 30:02 Min

20-Sundara Kandam-20.mp3    27.6 MB 30:10 Min

21-Sundara Kandam-21.mp3    27.6 MB 30:13 Min

22-Sundara Kandam-22.mp3    22.2 MB 24:14 Min

23-Sundara Kandam-23.mp3    27.4 MB  29.58 Min

24-Sundara Kandam-24.mp3    27.4 MB  30 Min

25-Sundara Kandam-25.mp3
   27.4 MB  29:56 Min


26-Sundara Kandam-26.mp3    27.05 MB 30:04 Min

27-Sundara Kandam-27.mp3    27.4 Mb  29.59 Min

28-Sundara Kandam-28.mp3    13.7 Mb 15:01 Min


சுந்தர காண்டத்தை படிப்பதனால் என்னென்ன நன்மைகள் உண்டாகும் ? ,  படிக்கும் போது என்னென்ன நைவேத்யம் வைக்க வேண்டும் ? , எப்படி படிக்க வேண்டும்?

 

என விளக்கும் முதல் நான்கு பகுதி


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTHwff27mAUfUZPz2G9GpTpZPKm5WT9azX0r8sDMneoZE1C-75I


{முதல் பகுதி              Track01.mp3       28.3 MB  30:56 Min

இரண்டாம் பகுதி   Track02.mp3        19.6 MB 21:28 Min  

மூன்றாம் பகுதி      Track03.mp3           28.4 MB 31:7 Min

நான்காம்  பகுதி      Track04.mp3       24.4 MB 26:40  Min}







 http://namakkalnarasimhaswamyanjaneyartemple.org/images/g3.jpg
சுந்தர காண்டம் ,sundara kaandam, sundara kandam,mp3,ebook,hanuman,anjaneyar,ஆஞ்சநேயர் அஞ்சனேயர் ,ஹனுமான் ,ஹநுமான் , ஹனுமார் ,ஹநுமார் ,pdf





Wednesday 22 February 2012

தமிழகத்தில் உள்ள பைரவர் கோவில்கள்

தமிழகத்தில் உள்ள பைரவர் கோவில்கள் 


அசிதாங்க பைரவர்





சொர்ணாகர்ஷண பைரவர்




சண்ட பைரவர்


கபால பைரவர்


உன்மத்த பைரவர்



ருரு பைரவர்



குரோத பைரவர்


சம்ஹார பைரவர்


பீஷண பைரவர்



திருவொற்றியூர்:

 சென்னை - பாரிமுனையிலிருந்து 8 கி.மீ. தொலைவில் 

உள்ள தியாகராஜசுவாமி ஆலயத்தில் (மாணிக்கத் தியாகர் - வடிவுடையம்மை) 

வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சன்னதிக்கு எதிரே சூர சூளாமணி 

பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.


சீர்காழி சட்டநாதர் ஆலயம்:

 சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் 

தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும். திருஞான சம்பந்தர் 

அவதரித்த  மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட 

பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது. இத்தலத்திலுள்ள 

மலைக்கோயில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் 

காட்சி தருகிறார். இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட 

பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது.


காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: 

திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு 

செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி 

என்னுமிடத்தில் உள்ளது. 

இங்கு பிரம்மன்சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது 

சிரத்தைக் கிள்ளியபைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான். 

இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு 

வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட 

வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது. இத்தலத்தின் உற்சவர் காஞ்சி 

ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ளது.

க்ஷத்ரபாலபுரம் கால பைரவர்: 

பைரவருக்கென்றே அமைந்த தனித்த ஆலயங்களில் இது காசிக்கு நிகரான பெருமையுடையது. 

கும்பகோணம் மயிலாடுதுறை வழியில் திருவாவடுதுறை அருகேயுள்ள இந்தத் 

தலத்தில்தான் பிரமனின் தலையைக் கொய்த கால பைரவருக்கு பிரம்மஹத்தி 

தோஷம் நீங்கியது என்று கூறுவர்.


தில்லையாடி கால பைரவ விநாயகர்:

 மயிலாடுதுறையிலிருந்து திருக்கடையூர் வழியாக செல்லும் வழியில் 

பொறையாரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும், திருக்கடையூரிலிருந்து 5 கி.மீ. 

தொலைவிலும் தில்லையாடி அமைந்துள்ளது.


அஷ்ட பைரவ யாத்திரை தலங்கள்: 

காசி நகரமே பைரவரின் பிரதான தலம் என்பதால் இந்நகரின் பல்வேறு 

பகுதிகளில் பைரவர் தலங்கள் காணப்படுகின்றன. இவைகள் 

எல்லாவற்றையும் தரிசித்து வருவது இயலாத காரியம். ஆகவே மிக 

முக்கியமான எட்டு பைரவத் தலங்களை மட்டும் சிறப்புடன் வழிபடுகின்றனர். 

கார்த்திகை, மார்கழி மாதங்களில் அஷ்டமி தினத்தன்று இந்த வழிபாடு 

செய்யப்படுகின்றது.

வடக்கே காசி நகரில் அனுமன் காட்டில், ருரு பைரவரும், துர்கா மந்திரில் 

சண்ட பைரவரும், விருத்தகாளேசுவரத்தில் அஜிதாங்க பைரவரும், லட் 

பைரவர் கோயிலில் கபால பைரவரும், திரிலோசனகஞ்ச்சில் சங்கார 

பைரவரும், தேவரா கிராமத்தில் உன்மத்த பைரவரும், காமாச்சாவில் வடுக 

பைரவரும், காசிபுராவில் பீஷாண (பூத) பைரவரும், காசி நகரில் சிறப்பாக 

வழிபடப்படுகின்றனர். தெற்கில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, 

பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி 

ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. 

இவர்களைத் தரிசிக்க செல்வதே அஷ்ட பைரவ யாத்திரை எனப்படுகிறது.


வைரவன்பட்டி: 

பிள்ளையார்பட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இந்த 

வைரவன்பட்டியில் மகா பைரவர் சிவகுமரனாகத் தனிச்சிறப்புடன் வீற்றிருந்து 

அருள்புரிந்து வருகிறார்.

சென்னிமலை: 

ஈரோடு அருகே உள்ள சென்னிமலையில் பைரவருக்கு தனிக்கோயில் 
உள்ளது.

திருப்பத்தூர் யோக பைரவர்:

 யோக பைரவரின் அருட்தலமான இந்த திருப்பத்தூர் மதுரையிலிருந்து 

காரைக்குடிக்குச் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

இலுப்பைக்குடி வடுக பைரவர்:

 காரைக்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ள இந்த இலுப்பைக்குடித் 

தலத்தில் தான்தோன்றீஸ்வரர் - வடிவுடையம்மன் மூலவர் வடிவங்களாகத் 

திகழ்ந்தாலும் பரிவாரத் தெய்வமாகத் திகழும் வடுக பைரவரே சிறப்புத் 

தெய்வமாக வழிபடப்படுகிறார். புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் 

வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், 

திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள 

பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.


ஸ்வர்ணாகர்ஷண பைரவர் கோயில் கொண்டுள்ள தலங்கள்:
 திருப்பதிஏழுமலையான் சக்கரம் ஸ்வர்ண ஆகர்ஷண சக்கரம் என்பதால் பொன் பொருள் குவிகிறது.

சிதம்பரம்:

 தில்லைவாழ் அந்தணர்களின் பசிப்பிணி போக்கிட வில்வ இலைகளைத் 

தங்கமாக மாற்றிய ஸ்வர்ண பைரவர் சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் 
அருகிலேயே உள்ளார்.

விருதுநகர்:

 இரயில்வே காலனி கடைசியில் கருப்பசாமி நகரில் சுடலைமாடன் கோயிலில் ஸ்வர்ணகர்ஷண பைரவர் உள்ளார்.

ஆடுதுறை: 

ஆபத் சகாயேச்வரர் கோயிலில் கால பைரவர் மட்டுமல்லாது ஸ்வர்ண பைரவரும் இருக்கிறார்.

தபசுமலை:

 புதுக்கோட்டையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தபசு மலையில் 

கௌசிக முனிவர் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரையும், முருகப் 

பெருமானையும் நேரெதிரே நிர்மாணித்து ஸ்வர்ண பைரவர், பைரவி உற்சவ 

மூர்த்தங்களை அமைத்துள்ளார்.

காரைக்குடி: 

இங்கு புகைவண்டி நிலையத்திற்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ளது இலுப்பைக்குடி 

என்னும் தலம். இங்குள்ள பைரவர் தனாகர்ஷண பைரவர் எனப்படுகிறார். 

ஆலயம் சிவாலயம் என்றாலும் பைரவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

படப்பை: 

தாம்பரத்திலிருந்து காஞ்சி செல்லும் சாலையில் படப்பை என்னும் 

ஸ்தலமுள்ளது. அங்கு துர்க்கை சித்தர் அவர்கள் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் 

மூர்த்திகளை சிறப்புற அமைத்துள்ளார்.

தேவகோட்டை:

 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு 

தனிக்கோயில் இங்கு தான் முதன்முதலில் கட்டப்பட்டது. மிகச் சிறப்பான 

முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்வர்ணாகர்ஷண பைரவர் எல்லா 

நலமும் வளமும் பொன்னும் பொருளும் வழங்குகிறார்.

அந்தியூர்:

 ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள செல்லீஸ்வரர் திருக்கோயிலில் 

ஸ்வர்ணாகர்ஷண பைரவர் பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக 

அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் 

வருடாவருடம் லட்சார்ச்சனை நடந்து வருகிறது.

தாடிக்கொம்பு:

 திண்டுக்கல் அருகிலுள்ள தாடிக்கொம்பு என்ற இடத்தில் அருள்மிகு 

சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் ÷க்ஷத்திர பாலகராக இருந்து 

ஸ்வர்ணாகர்ஷண பைரவராக அருள்பாலிக்கிறார். சிவன் கோயில்களில் 

மட்டுமே காணப்படும் பைரவர் இங்கே பெருமாள் கோயிலில் வீற்றிருப்பது 

ஒரு தனிச்சிறப்பு.

பஞ்சமுக பைரவர்:

 முசிறி மாவட்டம் தாத்தையங்கார் பேட்டையில் வீற்றிருக்கும் காசி 

விஸ்வநாதர் ஆலயத்தில் யாளி வாகனத்தில் அமர்ந்து பஞ்சமுக பைரவர் 
அருள்பாலிக்கிறார்.

முக்கிய பைரவர் ஸ்தலங்கள்:

வைரவன்பட்டி: 

பிள்ளையார்பட்டி அருகே 1கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தில் பைரவரே 

தோண்டிய சுனை உள்ளது. இங்குள்ள பைரவர் மகா வரப்பிரசாதி. முறையோடு 

ஈசன் அம்மையை வணங்கி பின் பைரவரை வழிபட வேண்டும்.

திருக்கோஷ்டியூர்: 

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

பயம் போக்கும் பைரவர்- பிரபலமான கோயில்கள்

இங்கு தெப்பம் நடைபெறுகின்ற திருக்குளத்தில் அருகே உள்ளது டி. 

வைரவன்பட்டி. இங்குள்ள சிவாலயத்தில் பைரவர் குழந்தை வடிவில் காட்சி 

தருகிறார். நாய் வாகனம் இவருக்கு இல்லை. இவர் மகப்பேறு தரும் ஆற்றல் 
உடையவர்.

பைரவபுரம்:

 திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெண்பாக்கம் அருகில் 

உள்ளது பைரவபுரம். ஸ்வர்ண கால பைரவர் கோயில் இங்கே உள்ளது.

சிவபுரம்: 

இது கால பைரவ க்ஷத்திரமாகும். திருவாயிலுக்கு வெளியே தனிக்கோயிலாக 

விளங்குகிறது. இத்தலம் கும்பகோணம் -சாக்கோட்டைக்கு கிழக்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது.

எமனேஸ்வரம்: 

எமனேஸ்வரமுடையார் கோயிலில் பைரவர் அருள்பாலிக்கிறார். பரமக்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

காளையார் கோயில்: 

இங்கு இரண்டு சன்னதிகளில் பைரவர் உள்ளார். 

இவரை வணங்கினால் எண்ணியது வெகு விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

திருநாகை:

 நாகைக் காரோணர் சன்னதிக்கு தென்பாகத்தில் புண்டரீக திருக்குளம் 

அமைந்துள்ளது. இத்தீர்த்தக் கரையில் தென்முகமாய் அமர்ந்திருப்பவரே கால 

சம்ஹார பைரவ மூர்த்தி.

மதுரை: 

இங்கு இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும்,  கீழ ஆவணி மூல வீதி 

புதுமண்டபம் எதிரிலும் தனி சன்னதியாக அருள்பாலிக்கும் கால பைரவர். 

மதுரையில் புட்டுத்தோப்பு புட்டு சொக்கநாதர் கோயிலில் உள்ள இரட்டை கால 

பைரவருக்கு இரண்டு நாய் வாகனங்கள் அமைந்துள்ளது. இது போன்ற 

அமைப்புள்ள பைரவரை காண்பது அரிது.

திருவண்ணாமலை:

 இங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள பைரவர் மிகப்பெரிய அளவில் அருள்பாலிக்கிறார்.

திருமயம்: 

இக்கோயில் புதுக்கோட்டையில் அமைந்துள்ளது. இங்கு மிகப் பெரிய 

கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் கீழ்ப் பகுதியில் காவல் தெய்வமான 

கால பைரவர் அருள்பாலிக்கிறார். இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் 

கோட்டை பைரவர் எனப்படுகிறார். திருமயம் கோட்டை பைரவர் சக்தி 

வாய்ந்தவர். இவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்தது 

நினைத்தபடி நடக்கும் என்பது நம்பிக்கை.

பொன்னமராவதி புதுப்பட்டி:

 இங்குள்ள பைரவர் ஆலயம் சிறப்பானது. நீண்ட நாட்கள் தீராத பிரச்சனை, 

தாமதமாகும் வழக்குகள் நல்லவிதமாய் முடிய இந்த பைரவரை வணங்கி வர 

நற்பலனை காணலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

சேந்தமங்கலம்:

 இங்கு அகோர பைரவர் பத்து கைகளுடன் தன் வாகனமான நாயுடன் 

காணப்படுகிறார். எட்டு கைகளில் படைக்கலன்களும், மற்ற இரண்டு கைகளில் 

அபய, வரத முத்திரையும் கொண்டு காணப்படுகிறார். இது சிறப்பானதொரு 

திருஉருவமாகும்.

முறப்ப நாடு:

 எந்தக் கோயிலிலும் பைரவர் சன்னதியில் ஒரு பைரவர் மட்டுமே காட்சி 

தருகிறார். ஆனால் முறப்ப நாடு கோயிலில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். 

ஒரு பைரவர் வழக்கம் போல் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். மற்றொரு 

பைரவருக்கு வாகனம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாய் வாகனத்துடன் 

காட்சி தருபவரை கால பைரவர் என்றும், வாகனம் இல்லாத பைரவரை வீர 

பைரவர் என்றும் கூறுகின்றனர். இந்த ஊர் திருநெல்வேலியிலிருந்து 

தூத்துக்குடி செல்லும் சாலையில் 17கி.மீ. தொலைவில் உள்ளது.

திருவாஞ்சியம்: 

தஞ்சை மாவட்டம் திருவாஞ்சிய ஸ்தலத்தில் மட்டுமே பைரவர் அமர்ந்த 

நிலையில் காணப்படுகிறார். எனவே இவர் ஆசன பைரவர் என 

அழைக்கப்படுகிறார். யம பயம் நீக்கும் தலம்.

திருச்சேறை:

 கும்பகோணம் அருகிலுள்ள திருச்சேறை ஆலயத்தில் சர்வ பைரவர் சன்னதி 

உள்ளது. இவரை வழிபட்டால் பில்லி சூன்யம் விலகும்.

திருப்பாச்சேத்தி: 

மதுரை - ராமேஸ்வரம் சாலையில்  உள்ள திருப்பாச்சேத்தி ஆலயத்தில் 

பைரவர் இரண்டு நாய் வாகனங்களுடன் அருள்பாலிக்கிறார். ஒரு நாய் நின்ற 

கோலம், இன்னொரு நாய் அமர்ந்த கோலம். சரும நோய், வயிற்று நோய், வாத 

நோய், பித்த நோய், இருதய நோய் முதலிய நோய்களை நீக்குபவராக 

உள்ளதால் இவர் கஷ்ட நிவாரண பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

நாகை: 

இங்கு சம்ஹார பைரவராக தெற்கில் சிம்ம வாகனத்துடன் அருள்பாலிக்கிறார்.

கும்பகோணம்: 

வலங்கைமான் அருகிலுள்ள ஆவூரில் ஒரே பீடத்தில் ஐந்து பைரவர்களாக 

எழுந்தருளி பிதுர் தோஷத்தை நிவர்த்தி செய்கிறார்கள். ஐந்து பைரவர்களை 

ஒரே நேரத்தில் வழிபடலாம்.

காளஹஸ்தி:

 இங்கு இரு பைரவர்கள் உள்ளனர். ஒன்று பைரவர். மற்றொன்று பாதாள 

பைரவர். கட்டுமானப் பணி தொடங்குமுன் இவர்களை வழிபட்டால் பணி 

தடையின்றி நடைபெறும்.

பழநி:

 அடிவாரத்தில் இந்தியாவிலேயே மிக உயரமான விஜய பைரவர் எழுந்தருளி, 

சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்கிறார்.

சீர்காழி:

 சட்டைநாதரும், திருவெண்காடு அகோர மூர்த்தியும் பைரவ வழிபாடே. 

இவர்களை ஞாயிற்றுக்கிழமை தரிசிப்பது மிக விசேஷமாகும். சீர்காழிக்கு 

செல்ல முடியாதவர்கள் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம் ஆறகளூர் 

காமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் பைரவர்களை வழிபட்டு 

இராஜகோபுரத்தில் எழுந்தருளியுள்ள முத்து சட்டைநாதருக்கு புனுகுசட்டை, 

கஸ்தூரி திலகமிட்டு தியான மந்திரம் கூறி வணங்கி அஷ்டபுஜத்துடன் கூடிய 

கால பைரவரை வணங்கி பயன் பெறலாம்.

சேலம்:

 இங்கே சிருங்கேரி சங்கர மடத்தில் பாரதீ தீர்த்த சுவாமிகளால் 

யந்திரஸ்தாபிதம் செய்யப்பட்ட பைரவர் சன்னதி உள்ளது. ஆபத்துத்தாரண 

மூர்த்தியாக உள்ள இந்தப் பைரவர் தனிச் சக்திமிக்கவராய் காணப்படுகிறார். 

மேலும் இங்குள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் 

திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள காசி கால பைரவரையும் தரிசிக்கலாம்.

திருவான்மியூர்:

சென்னையை அடுத்துள்ள திருவான்மியூரில் ஏழு பைரவர் சன்னதி அமைந்துள்ளன.

இலுப்பைக்குடி: 

இங்கே உள்ள தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு 

இருபுறமும் சிறிய பைரவர்கள் உள்ளனர். இங்குதான் கொங்கண சித்தர் 

தட்சிணாமூர்த்தியின் பேரருளால் ரசவாதம் நீங்கி ஸ்வர்ணகால பைரவர் 

மந்திரம் கூறி செம்பைத் தங்கமாக்கினார் என்று குறிப்புகள் கூறுகின்றன.

அந்தியூர்:

 ஈரோட்டிலிருந்து வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள அந்தியூரில் 

செல்லீஸ்வரர் திருக்கோயிலில் வீர பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

காஞ்சிபுரம்: 

உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருக்கோயிலில் ஈசான்ய திசையில் 

பைரவர் காட்சியளிக்கிறார். சனி பகவானே வந்து பைரவரை வழிபாடு 

செய்ததாக வரலாறு கூறுகிறது.

திருவியலூர் (திருவிசநல்லூர்): 

கும்பகோணத்துக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. 

இத்திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் ஒரே வரிசையில் நான்கு 

பைரவர்கள் உள்ளனர்.

bhairavar temple in tamilnadu , bairavar temple in tamilnadu, tamilnadu bhairavar temple , tamilnadu bairavar 
குருநாதர் சாய் பாபா உபாசகர் அருளிய பைரவ பரிகார முறை 

http://farm3.staticflickr.com/2686/4091483857_020dbb879f_z.jpg?zz=1 
temple, temple in tamilnadu, bhairava, bairava,bhairava temple inTamilnadu
Lisபைரவரை வழிபாடும் முறை :


தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்களையும் , விபத்து , துர்மரணம் இவற்றிலிருந்தும்  காப்பவர் பைரவர் மட்டுமே . இத்துன்பங்களில்  இருந்து விடுபட பைரவரை தான் சரணடைய வேண்டும் 
பைரவரிடம் பிரார்த்தனை செய்து  கொண்டு உங்கள் பிரார்த்தனை நிறைவேரும் வரை ஒவ்வொரு  சனி கிழமையும் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 

சனி கிழமை காலை 6  மணி முதல் மாலை  8 மணிக்குள் அல்லது கோவில்  நடை சாத்துவர்க்குள் வெண்பூசணி யில் பைரவருக்கு விளக்கு போட வேண்டும் 


திறந்திருக்கும்  பைரவருக்கு தான் விளக்கு போட வேண்டும் , கண்டிப்பாக பைரவர் சிலையை திரை இட்டு மூட்டி இருந்தாலோ , கதவு சாத்தி இருந்தாலோ அந்த பைரவருக்கு விளக்கு போட கூடாது 

64 பைரவர்களில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கு போடலாம் 


இதை செய்ய முடியாதவர்கள் தினமும் சாதரணமான  விளக்கு போடலாம் , அதுவும் முடியாதவர்கள் வாரத்தில் ஒரு நாள் மட்டும் சாதரணமான விளக்கு 7 விளக்கு போடலாம் ( அந்த நாள் சனி கிழமையாக இருந்தால் மிகவும் உத்தமம் . பைரவரே அனைத்து கிரகங்களுக்கும் அதிபதி , அனைத்து கிரகங்களையும் தன்னுடைய கட்டுபாட்டில் வைத்திருப்பவர் , மேலும் சனி பகவானுடைய  குரு)


தகவல் :குருநாதர் சாய் பாபா உபாசகர்   

முக்கியமான இந்திய கோவில்கள் மூலஸ்தானத்தில் இருந்து நேரடி ஒளிபரப்பு - Live Dharshan


http://copiedpost.blogspot.in/2012/12/live-dharshan.html
  t of temples in Tamil Nadu ,Kala Bhairavar , Lord Kala Bhairava Temple,Kala Bhairava Temples, bhairava temple ,Kala Bhairava Temple in tamilnadu ,swarna bhairava
swarna bhairavar temple in tamilnadu,