SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

பழக்கத்தால் எண்ணம் - அருட்தந்தை


பழக்கத்தால் எண்ணம்

பழக்கத்தால் எண்ணம்

ஒரு செயலில் மனமானது பழகி விட்டால் மீண்டும் தேவை இல்லாதபோது கூட அதையே நாடுகிறது. இது பழக்கத்தால் தோன்றும் எண்ணம்.

தினசரி செய்தித்தாள் படிப்பது ஒரு பழக்கம். ஒரு நாள் செய்தித்தாள் வரத் தாமதமாகி விட்டால் மற்றப் பணிகளை மறந்து அதே நினைவாகச் செய்திதாளுக்காகக் காத்துக் கொண்டு இருப்பது பழக்கத்தால் தோன்றும் எண்ணமாகும்.

தேர்வுக்காகப் படிக்கும் காலங்களிலும் தொலைக்காட்சித் தொடரை விடாமல் பார்க்க வேண்டும் என்பதும் பழக்கத்தின் காரணமாகும்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு உண்டு பழகியவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தினமும் மணியைப் பார்த்தவுடனே பசி இல்லாவிட்டாலும் கூட சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுவது பழக்கத்தின் காரணமாகும்.

இவற்றை அனுமதிக்கலாமா? நிறைவு செய்யலாமா? விளைவு என்னவாகும்? என்று ஆராய்ந்து பார்த்துச் சரியான முடிவு எடுக்க வேண்டும்.

- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி 

No comments:

Post a Comment