SHIRDI LIVE DARSHAN

Sunday 29 January 2012

ஆழ்மனம்

சுயமாக சிந்திபது என்கிற ஆற்றல் அற்றது போல தோன்றகின்றது. இதனை ஆழ்மனம், Sub Concious Mind, Subjective mind, Sleeping Mind, Deep Mind, Involuntary Mind, Female Mind என்று பல்வேறு பெயர்களால் அழைக்கலாம்.

இந்த வலது பக்க ஆழ்மனம் இடது பக்க நினைவு மனப்பகுதியால் வழி நடத்தப்பட்டு மிகப்பெருஞ்சக்தியாக, எல்லாவற்றுக்கும் தீர்வுகளை பெற்றுத்தருகிற, அற்புதங்களை ஆற்றுகிற அரேபிய கதைகளில் வருகிற அலாவுதீனின் அற்புத விளக்குபோல செயல்படுகிறது.
இந்த Sub Concious mind என்று சொல்லப்படுகிற வலது பக்க மூளையே ஆழ்மனம்.இதுவே கற்பனையின் நிலைக்களன். இதனைப் பயன்படுத்த அறிந்து கொள்கிறபோதுதான் புதியன படைக்கவும் உருவாக்கவும் நம்மால் இயலுகிறது.

சாதாரணமாக மனிதர்களின் மன இயக்கத்தை 
ஆல்பா (∂) பீட்டா(β) தீட்டா (σ) டெல்டா(δ) 
என்று நான்கு நிலைகளில் இயக்குவதாக சித்தர்களும், ஞானிகளும் அறிவியலார்களும் அறிந்து கூறுகிறார்கள்.
ஆல்பா நிலையில் மன இயக்கம 8 முதல் 12 சுற்றுகளுக்குள்ளும் (Cycles/Sec) 
பீட்டா நிலையில் 13 சுற்றுகளுக்கு மேலும்
தீட்டா நிலையில் 4 முதல் 7 சுற்றுகளுக்குள்ளும்
டெல்டா நிலையில் 3 சுற்றுகளுக்கும் கீழாகவும் 1/2 சுற்று வரையிலும் மனம் இயங்குவதாக குறிப்பிடுகிறார்கள்.
பீட்டா நிலை என்பது விழிப்பு நிலை. உணர்ச்சிவயப்பட்ட மனம் வேகமாக இயங்கும் நிலை (Active and Agitated State)
ஆல்பா நிலை என்பது விழிப்பும் உறக்கமும் அற்ற தூங்காமல் தூங்கும் தியான, மோன நிலை (A Hypnotic State)
டெல்டா என்பது சமாதி நிலை.
நாம் விழித்துக் கொண்டிருக்கும் போது ஐம்புலன்களுக்கும் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதால் தொடர்ந்து தகவல்களை ஆய்ந்தும், தொகுத்தும், பகுத்தும் கொண்டிருப்பதால் நினைவு மனம் அதிக இயக்கத்திலும் அதாவது விழிப்பு நிலையிலும் ஆழ்மனம் (Sub Conscious Mind) உறக்க நிலையிலும் இருக்கிறது.

No comments:

Post a Comment